
நிலவின் தென் துருவம் அருகே கால்பதித்துவிட்டது இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம். இதன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி படங்களை வெற்றிகரமாக அனுப்பியும் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்கிறது.
இந்த சாதனைக்காக நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் முதல் பிரதமர் நேரு, இந்திய விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாய்
1960களில் இளம் விஞ்ஞானிகள் பரிசோதனை ராக்கெட்டை உருவாக்கும் முயற்சி
1960களில் இந்திய விண்வெளி துறையின் தந்தை விக்ரம் சாராபாய் மற்றும் இந்திய அணுசக்தி துறையின் தந்தை ஹோமி பாபா
1963-ல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பா ஆய்வு மையத்துக்கு சைக்கிளில் ராக்கெட்டை எடுத்து செல்லும் விஞ்ஞானிகள்
1963-ல் சைக்கிளில் கொண்டு செல்லப்படும் இந்திய ராக்கெட் நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.