அவர்களின் சுயநலத்திற்காக அச்சாணி இல்லாத தேர் போல தொண்டர்களை வழிநடத்துகிறார்கள்


அம்மா அவர்களின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாகத் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுவெளியில் திருமதி. சசிகலா அவர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறார் பின்பு அவரே ஆறுமுகசாமி ஆணையத்தில் அதற்கு நேர் மாறாகச் செய்த சில விஷயங்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் எந்த அளவு தரம் தாழ்ந்து இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அ.தி.மு.க. தொண்டர்களையும் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத் தொண்டர்கள் தற்பொழுது உணர்ந்திருக்கிறார்கள். அதேபோல் இதில் தனக்கும் தொடர்பு உள்ளது என்று திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திரு. வேலுமணி அவர்களும் கூறுகின்றனர் எனவே இச்சம்பவத்தில் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்று உறுதியானாலும் கூட திருமதி.சசிகலா அவர்கள் புனிதமானவர் என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தொண்டர்கள் தயாராக இல்லை எனவே இவர்கள் யாரும் சரியான தலைவர்களாக அ.தி.மு.க. விருக்கு இல்லை அச்சாணி இல்லாத தேராக அ.தி.மு.க. தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஆகையால் தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கும் பொது தான் வலிமையான தலைமை உருவாகும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: