திரு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நிற்கிற துணிச்சல் அவருக்கு இல்லை .ஏனென்றால் பழைய வழக்குகள் திரும்பவும் எடுக்கப்படுகிறது.ஆனால் மத்திய அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்தால் அது நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் .மத்திய அரசாங்கம் ,மாநில அரசாங்கம் ,திமுக மற்றும் பிஜேபி இவை இரண்டும் மறைமுகமாக அண்ணாதிமுகவை அதில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர்களை ஒடுக்குவதற்கு அவர்களது பழைய கால நடவடிக்கைகளை கிளறி நடவடிக்கை எடுப்பதற்கு இணைந்து செயல்படுகின்றனர் .எதிர்கால தமிழக அரசியலை பி ஜே பி ஹிந்துத்துவ என்றும் ,திமுக திராவிடக்கழகம் என்கிற வகையில் அவர்கள் கட்டமைக்க நினைக்கிறார்கள் .இந்த நேரத்தில் அண்ணா திமுகவை சார்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய சில கருத்து மாறுபாடுகளை சிறிது விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து போகவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் கூட.அப்படி ஒன்றிணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி பொறுத்தவரையில் தான் மட்டும்தான் என்று நினைத்து கொண்டுஇருக்கிறார் .தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தான் இந்த கட்சியில் இடம் என்கின்ற அளவில் இருக்கிறார் .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA