எம்.ஜி.ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்


இன்றைய சர்வேதேச சூழ்நிலைகளை பயன்படுத்தி இந்தியா இலங்கை தமிழர்களின் எதிர்காலத்திற்கு கடந்தகால போராட்டத்திற்கு ஒரு சுமுகமான தீர்வை பெற்று தரவேண்டும்.
இது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்
இலங்கைக்கு இந்திய தூதரகம் மூலமாக உணவு & மருந்துப்பொருட்கள் வழங்குவதற்கு திரு ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தது நிரந்தரமான தீர்வல்ல.இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கும் சம அரசியல் உரிமை வேண்டுமென்று போராடினார்கள் அந்த உரிமையை இந்தியஅரசாங்கம் மூலமாக பெற்றுத்தருவதே நிரந்தர தீர்வாகும்.புலம்பெயர்ந்து அகதிகளாக பலநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கைத்தமிழர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் குடியமர்த்தி அரசு மற்றும் அரசியல் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும். இது இலங்கையையும் பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்கும்.இலங்கைத்தமிழர்கள் பிரச்சனைகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது 2009இல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசாங்க நடவடிக்கைகள் தான்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: