கொடநாடு வழக்கில் சசிகலாவின் வாக்குமூலம் யாருக்கு சாதகமாக அமையும்?


திரு.ஆறுக்குட்டி அவர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப் பட்டபோது சமீப நாட்களில் திருமதி.சசிகலாவிற்கு ஆதரவாக சில கருத்துக்களைக் குறி வந்தது தெரிய வந்தது எனினும் பொதுச்செயலாளர் குறித்த வழக்கிற்கும் திருமதி.சசிகலா அவர்களுக்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பு வந்ததற்குப் பிறகுச் சற்று வேகமாகத் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய சில ஆதாரங்களை வெளிக்கொண்டு வருவதிலும் அவர் செய்த தவற்றை வெளிக்கொண்டு வருவதிலும் சற்று முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் திரு.எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாகத் திருமதி. சசிகலா அவர்களை விசாரித்த பிறகு சயான், உத்திரகௌண்டன் பாளையம் இளங்கோவன், முன்னாள் அமைச்சரான திரு.S.P.வேலுமணி மற்றும் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியவர்களை விசாரித்து குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம். திரு.ஆறுக்குட்டி அவர்களின் நண்பர்களின் கருத்து என்பது கோடா நாடு பங்களாவிலிருந்த பொருட்கள் எவை அவற்றுள் எவை எவை காணாமல் போயின காணாமல் போன பொருட்கள் தற்பொழுது எங்கு உள்ளது போன்ற கேள்விகளுக்குத் திரு. ஆறுக்குட்டி அவர்கள் பதிலளித்துள்ளார். பூங்குன்றனுக்கும், திருமதி.சசிகலா அவர்களுக்கும் ஆறுக்குட்டியை விட அதிகமாகத் தெரியும் என்றும் அங்கிருந்து காணாமல் போன பல பொருட்கள் திரு.வேலுமணி மற்றும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்திலும் இருப்பதாக ஒரு தகவல் திரு.ஆறுக்குட்டி அவர்கள் வட்டாரங்களிடத்தில் கசிந்துகொண்டு இருக்கிறது. எனவே இதற்கு பிறகும் திருமதி.சசிகலா அவர்கள் திரு.எடப்பாடி பழனிச்சாமியிடம் எந்த சமரசமும் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
பொதுச்செயலாளர் வழக்கின் தீர்ப்பு திருமதி.சசிகலா அவர்களுக்குச் சாதகமாக வரும் நிலையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரித்து ஒருங்கிணைத்து இருக்கலாம் ஆனால் தற்பொழுது எந்த வித தயவு தச்சனையும் இல்லாமல் எதிர்த்து அடிப்பதற்குத் திருமதி.சசிகலா அவர்கள் தயாராகியுள்ளார் என்பது தெரியவருகிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: