தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் கொடுக்கத் தவறிவிட்டார்களா?


மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து முன்னாள் அமைச்சர்கள் கைது அவர்களது வீட்டில் ரெய்டு அதற்கான போராட்டம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை , ஆவின் விலை உயர்வைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல் திரு .ஜெயக்குமார் அவர்களின் கைதிற்குப் போராடுவது வருத்தமளிக்கிறது எனவே இவர்கள் இத்தகைய செயலை தவிர்த்து மக்கள் பிரச்சனைகளில் கவனத்தைச் செலுத்தி அதற்கான பணிகளில் ஈடுபடும்பொழுது அ.தி.மு.க. மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் .
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் நிலை எதுவாயினும் திரு.அண்ணாமலை அவர்களின் ஆவின் விலை ஏற்றம் ,டாஸ்மாக் விலை ஏற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு பற்றிய அறிக்கைகள் தி.மு.க.விற்கு எதிராகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கின்றது . ஆனால் அ.தி.மு.க.நிர்வாகிகளின் குளிர்பான விநியோகம் போன்ற செய்திகள் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைகின்றது. பொதுமக்கள் பிரச்சனையில் ஈடுபடாமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனில் அக்கட்சி மறைந்து விடும் என்பதற்குக் காங்கிரஸ் ஒரு முன்னுதாரணம்.
எனவே தி.மு.க.விற்கு மாற்று பா.ஜ.க.தான் என்ற நிலைப்பாட்டில் திரு.அண்ணாமலை செயல்படுகின்ற நிலையில் தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க. தான் என்று மக்கள் இருக்கையில் அதற்குரிய செயல்பாடுகளில் கட்சித் தலைமை பின்னடைவது மிகவும் வருத்தமளிக்கிறது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: