திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்


ஆதிமுக’விற்கு எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி 25% அதை எந்தக்காலத்திலும் அசைக்க முடியாது, ஆகையால் ஆதிமுக தலைமை எவ்வாறு அமையவேண்டும் என்றால் பாஜக’வை கடுமையாக எதிர்த்து நின்று திமுக’விற்கு போகின்ற எதிர்ப்பு ஓட்டுகள் 12சதவீதம் ஆதிமுக’விற்கு திரும்பப் பெற வேண்டும், மேலும் திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி , பாஜக விற்கு செல்கின்ற திமுக எதிர்ப்பு ஒட்டு 2%யும் ஆதிமுக’விற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்கையில் நமக்கு 40% ஒட்டு என்பது உறுதியாகிவிடுகிறது.
எனவே ஆதிமுக’வின் தலைமை என்பது பாஜக’விற்கு எதிரான நிலைப்பாட்டில் திராவிட கொள்கைகளிலும், திராவிட சித்தாந்தங்களிலும், எம்ஜிஆர் வழியிலும் அம்மாவின் வழியிலும் பயணிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: