பாஜகவை எதிர்க்கக்கூடிய தலைமை தற்போதைய அதிமுகவில் யாருக்கும் இல்லை!


திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பொழுது கூறியதாவது ,மக்களை போல கீழ்மட்டத்தில் ,கிளைஅளவில் உள்ள இருந்தும்,இருக்கின்றவர்கள் தான் அண்ணாதிமுக கட்சியை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .மேலும் அவர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் ,அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கும் ,அவர்களை பாதுகாத்து கொள்வதற்கும் .அவர்கள் பினாமி பிழைப்பதற்கும்,அவர்கள் கமிஷன் ஏஜென்ட் பணம் பார்ப்பதற்கும் தான் இது எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .

மேலும் உரையாடலின் பொழுது இவர்கள் அனைவருமே மக்களிடமும் தொண்டர்களிடமும் நடித்து கொண்டு இருப்பதால் இவர்கள் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு தைரியம் கிடையாது என்று கூறியுள்ளார் .அவருடைய உரையாடலின் போது தொண்டர் ஒருவரும் கோவமாக பாஜக இருக்கும் வரை நாம் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார் .இதிலிருந்து தொண்டர்கள் அனைவருக்கும் பாஜகவின் மேல் அதிகஅளவு வெறுப்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
Share on: