புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவரை தன் காலில் விழ வைத்த எடப்பாடி கட்சி தலைமைக்கு தகுதியானவரா?


கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்!

ஒரு கடவுளுடைய படம் கீழே இருக்கிறது நாம் அதை வெறும் படம் தான் என்று அப்படியே விட்டுவிடுவோமா அதற்குரிய மரியாதையை கொடுக்கிறோம் அல்லவா அது போல அந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டவர் ஒரு தொண்டர் அவர் ஒரு ஆர்வத்தில் புரட்சித்தலைவர் அல்லது எம்ஜிஆர் மீது உள்ள பற்றின் காரணமாக அல்லது மக்களைக் கவரவேண்டும் என்ற ஆர்வத்திலோ அந்த வேடமிட்டுக்கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் குறைந்தபட்ச அறிவு உள்ளவனாக இருந்தால் அந்த இடத்தில் புரட்சித்தலைவர் வேடமிட்டு காலில் விழுவது சரி அல்ல என்று அப்போதே தடுத்து இருக்க வேண்டும். அல்லது எதிர்பாராமல் அவர் விழுந்துவிடுகிறார் என்றால் அதன் பின் எடப்பாடி பேசும்பொழுது இதுபோன்ற தொண்டர் தவறு செய்துவிட்டார் அதற்காக நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன் இது போன்ற காரியங்களை தயவு செய்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வேடமிட்டு செய்யாதீர்கள் அவர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இன்றும் கடவுளாக விளங்கிக்கொண்டு இருப்பவர் அதனால் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று சொல்லிருந்தால் அவர் தலைவனுக்கு தகுதியானவரா? காலில் விழுந்தவனை நின்று ஆசிர்வதிப்பவன் தலைவனுக்கு தகுதியானவரா?

எந்த ஒரு அதிமுக தொண்டனும் இது சரி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி என்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளுக்கும் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கும் அ.தி.மு.கவினுடைய திராவிட சித்தாந்தங்களுக்கு விலகி பா.ஜ.க வழியில் RSS இன் உண்மை தொண்டர்களாக மோடியின் அடிமைகளாக அமித்ஷாவின் கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக அண்ணாமலையை விட மிக சிறந்த பா.ஜ.க தலைவர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எம்ஜிஆர் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி அற்றவர்கள்! கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: