EPS & OPS பாஜகவுக்கு அடிபணிந்து, திமுகவையும் அனுசரித்து பெயரளவுக்கு எதிர்கட்சியாக செயல்படுகிறார்களா?


அ.தி.மு.க. கழக நிர்வாகிகள் பா.ஜ.க.விற்கு அடிமைகளாகவும் தி.மு.க.வுடன் ஒரு உடன்பாடோடும் செயல்படுகிறார்கள் , அ.தி.மு.க.ஆட்சியில் நடந்த ஊழல்களை தி.மு.க.கண்டுகொள்ள வேண்டாம் அதேபோல் தற்போது நடக்கும் ஊழல்களை நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம் பெயரளவிற்கு மக்களை ஏமாற்றுகிற வகையில் ஒரு நாடகத்தை நடத்துவோம் என்கின்ற சமரச போக்கில் செயல்படுகிறார்கள் . எதிர் கட்சி தலைவரது அரசியல் என்பது சட்டமன்றத்திருந்து வெளிநடப்பு செய்து ஒரு பேட்டியை கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது மற்றும் ஆளுநருக்கு பா.ஜ.க. சொல்லும் திட்டங்களை ஆதரித்து செயல்படுவது , எனவே ஒவ்வொரு அ.தி.மு.க.தொண்டனும் அம்மா அவரகள் காலத்திலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.காலத்திலும் சட்டசபையில் இன்றைய நிலைப்பாட்டை உணர்வுகளோடு பார்க்கும் நிலை மாறிவிட்டது என்பது வருந்தத்தக்கது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: