
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அடுத்த விக்கெட் யார் என்பதுதான் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பரபரப்பான விவாதமாக நடைபெற்று வருகிறது
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை, நீதிமன்ற போராட்டங்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்தது.
செந்தில் பாலாஜி வழக்கில் அவரது சகோதரர் அசோக் தேடப்பட்டு வந்தார். அசோக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் இருந்த அசோக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வழக்கில் அடுத்து யார் கைது செய்யப்படக் கூடும் என்பதுதான் கரூர், வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே நடந்து வரும் விவாதம்.