
எதற்காக செந்தில் பாலாஜி இப்படி அடம் பிடிக்கிறார்? அவர் அமைச்சர் பதவிக்கு உச்சநீதிமன்றத்தால் இவ்வளவு நெருக்கடிகள் இருக்கிற போதே அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தில் அதில் முறைகேடு நடந்துள்ளது அதிலும் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
2006 முதல் இன்று வரை செந்தில்பாலாஜி உட்பட மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் வரை தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் அதில் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய அமலாக்கத்துறை நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளும் ஒருங்கிணையும்பொழுது திமுக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும்.
எப்படி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் “தான் பெற்ற லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தாரோ அதேபோல நேற்று சட்டமன்றத்திலும் “பாட்டிலுக்கு 10ரூ அதிகம் பெறுவது 2011ல் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது” என்று இவரே சட்டமன்ற பதிவேடுகளில் உறுதிபட தெரிவித்திருக்கிறார். போதாதற்கு இந்தியாவை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர் டாஸ்மாக்கில் மது வாங்க சென்று MRP இல்லையா என்று கேட்க, அவரிடமும் MRPயை விட ₹20 அதிகம் கேட்டு முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.
இப்படி நடக்கிற கொள்ளையில் பணம் இவர் கைக்கு செல்கிறது, இவரிடம் இருந்து ஆட்சி மேலிடத்திற்கு செல்கிறது என்பது தான் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. நடைபெறுகிற சூழ்நிலைகள் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையப்போவதாக தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும், தனது குடும்பத்துக்கும், திமுக கட்சிக்கும் அதிக சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.