பாஜக கூட்டணிக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்- அதிமுகவுக்கு அவமானம் !!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. <br/>இதனால் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் உருவாகும். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. இதனால் இருதரப்பும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள்…

Share on:

Continue Reading

அதிமுகவில் தொடரும் ஓபிஎஸ்&இபிஎஸ் அணி தாவல்

அதிமுகவை அழிக்க மு.க.ஸ்டாலின் எண்ணுவதாக விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை,கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.மேலும் அதிமுகவை ஒழிக்க டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் முயற்சி செய்வதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்றுதொடர்ந்து அதிமுகவினர் திமுகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படை என்ன? என்ற கேள்வியின் அடிப்படையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கலந்து கொண்டார்.விவாதத்தில் கலந்து கொண்ட கே.சி.பழனிச்சாமி அதிமுகவை பலவீனப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி கங்கனம் கட்டி கொண்டு இருக்கிறார்.முதலமைச்சராக இருந்த இபிஎஸ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கி வெளியேற்றினார் தற்போது திமுகவில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை இபிஎஸ்-ல்…

Share on:

Continue Reading

திமுகவினல் தொடரும் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல்
-அண்ணாவின் கொள்கை என்னானது?

பெரியார் – அண்ணா இடையே எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், மணியம்மையை வாரிசாக்கும் முயற்சியைத் திருமணத்தின் மூலம் பெரியார் உறுதிப்படுத்த தொடங்கியபோதுதான் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அண்ணா.
1949-ல் திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு முன்னுதாரணக் கட்சியாக அதை உருமாற்ற முற்பட்டவர் அண்ணா.அடுத்த நிலைத் தலைவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், 1955-ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி,
“தம்பி வா… தலைமையேற்க வா!”
என்று நெடுஞ்செழியனை முன்மொழிந்தவர் தன் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் சொன்னார்,
“நான் வலுவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான்…

Share on:

Continue Reading

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி

அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை டிசம்பர் 4-ம் தேதியில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 -ம் தேதி தான் அம்மாவின் இறப்பு நாளாக அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்

இது அறிக்கை குறித்து எந்தகருத்தும்முன்வைக்கப்படவில்லை.இந்நிலையில்,கே.சி.பழனிச்சாமி அறிக்கையை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் ஜெயலலிதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தினம் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி…

Share on:

Continue Reading

கலாட்டா செய்யும் வேலுமணி கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி !!

தமிழ் நிறம் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு: எடப்பாடி பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையை முன்வைத்து பாஜகவிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்.அவர் எண்ணியபடி, ஒற்றை தலைமையை பேசி தீர்த்து வைக்காமல் போனால் பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிவார். பாஜக எதிர்ப்பு என்பது அதிமுக கொள்கையின்படி அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு.அதனை எடப்பாடி பழனிசாமி பின்தொடர்வது…

Share on:

Continue Reading

தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை:-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

நக்கீரன் சேனலில் “அரசியல் சடுகுடு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிசாமி பங்கேற்று தற்போது உள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையை பேசியியுள்ளார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும் விவாதித்து இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி 2024 தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என்பதன் உட்பொருள்?
பாஜகவுடனான மெகா கூட்டணியை தான் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைக்கும். பாஜக அல்லாது தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் பாஜக அரசு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடும்.இரட்டை சின்னத்திற்காக ஓட்டு போடும் மக்கள் உண்டு.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும்.அதிமுக பிளவுபடவில்லை எடப்பாடி பழனிசாமி:அதிமுக ,ஒற்றுமையாக செயல்படாத காரணத்தினால் தான் சட்டமன்ற…

Share on:

Continue Reading

அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

அதிமுகவின் அடுத்தது என்ன என்ற என்ன என்ற தலைப்பில் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அதிமுக மாஜி அமைச்சர் கே. சி பழனிசாமி பங்கேற்றார்.விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,2024 பொதுத் தேர்தலில் அதிமுக தலைமை பாஜக அல்லாத கூட்டணியில் போட்டியிட்டால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.அதிமுக பாஜக-வை எதிர்க்க வேண்டும்:பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் கலத்தை திமுகவிற்கும் பாஜக விற்கும் உரித்தானதாக அமைப்பதற்காக எண்ணி செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் வாக்கு வங்கி பாஜகவிற்கு எதிராக உள்ளது.அதனை தலைமை தாங்குவதற்கான பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதே உண்மை.மேலும் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்க்க நேர்ந்தால் அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள…

Share on:

Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம் !!

எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பிளவுபடுத்த திமுக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுக்கு காரணம் என்ன என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி கே. சி பழனிசாமி பங்கேற்றார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை அடிப்படை தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என்று கூறுவது சுயநலத்திற்காக மட்டுமே இன்றி வேறில்லை.ஒவ்வொரு அதிமுக அடிப்படை தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை.மேலும் தலைமையை அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் கே. சி. பழனிசாமி மட்டும் பாஜக-வை எதிர்ப்பது ஏன்? தொண்டர்களோடு…

Share on:

Continue Reading

எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் !!

தலைமை பதவிக்கு வேட்புமனு பெற சென்றவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அவர்களில் அதிமுக தொண்டங்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்த சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓம்பொடி பிரசாத்தும் ஒருவர் என்பதுதான் சோகம் .அவர் எம்ஜிஆர் மன்றத்துக்காரர் .1972 அக்டோபர் 17 அன்று அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் பல தரப்பட்ட சமாதான முயற்சிகள் நடைபெற்றன .அப்போது எம்ஜிஆர் மனதை மாற்றிய சில நிகழ்வுகள் நடைபெற்றன .அவற்றில் ஒன்று .எம்ஜிஆர் மன்றங்களின் தலைமை பொறுப்பாளர் முசிறி புத்தனும் ,ஓம்பொடி பிரசாத்தும் பட்டினப்பாக்கத்தில் தாக்கப்பட்டது .சென்னை பிளாசா தியேட்டரில் எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அடித்து விரட்டப்பட்டனர் .அனைவரும் மாம்பலத்தில் இருந்த எம்ஜிஆர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர் .அப்போது அப்பாவு (கி )தெருவில் இயங்கிவந்த தென்சென்னை எம்ஜிஆர் ரசிகர் மன்ற செயலாளர் தெய்வ சிகாமணி ‘1.10.1972 முதல் 17.10.1972 வரை-தொடக்கமும்…

Share on:

Continue Reading

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஸ்டாலின் அவர்கள் கடமை தவறிவிட்டார் – திரு கே.சி.பழனிசாமி

அதிமுகவின் பலம் என்பது அண்ணாதிமுக தொண்டர்களிடம் மட்டுமே உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் இதற்கு முன்னரே தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் அவர் இருந்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு முதலமைச்சர் காலம் தாழ்த்தியது ஏன் ? குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருந்த அன்றைய தேதியில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிருக்க மாட்டார் எந்த மதத்தை சார்தரவர்கள் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.

Share on:

Continue Reading