
திரு.ஓ.பி.எஸ் அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்ற அன்று என்றும் முதலமைச்சராகவும்! சசிகலா என்றும் பொதுச்செயலாளராகவும் இருப்பார் என்று உறுதியாக இருந்த காரணத்தினால் சசிகலா அவர்களுக்கு ஒத்துப்போய் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவர் கூறிய கருத்தும் இன்று பாசப்பிணைப்புடன் கூறும் கருத்தும் முரண்பாட்டுடன் உள்ளது .
எனவே ஆணையம் என்ற ஒன்றை அமைத்து அதற்கான செலவுகள் என்று ஒரு பட்டியலிட்டு சற்றும் சம்பந்தம் இல்லாத கருத்துகளைப் பதிவிடுவது மக்களை ஏமாற்றும் செயல் இது வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அம்மா மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் விலகும் .

திருப்பரங்குன்றம் மறுதேர்தலுக்காக அம்மா வைத்த கைநாட்டில் உயிர் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியநிலையிலும் அம்மாவின் மரணம் இயற்கையானது என்பது ஏற்புடையதாக இல்லை. ஒரு ஆணையத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு உள்ளது எனவே உச்சநீதிமன்ற ஆணையை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைக்கையில் இந்த ஆணையத்தின் விசாரணை திசை மாறும் அவ்வாறு மறுகையில் அம்மா மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் விலகும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் கொடுக்கத் தவறிவிட்டார்களா?

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து முன்னாள் அமைச்சர்கள் கைது அவர்களது வீட்டில் ரெய்டு அதற்கான போராட்டம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை , ஆவின் விலை உயர்வைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல் திரு .ஜெயக்குமார் அவர்களின் கைதிற்குப் போராடுவது வருத்தமளிக்கிறது எனவே இவர்கள் இத்தகைய செயலை தவிர்த்து மக்கள் பிரச்சனைகளில் கவனத்தைச் செலுத்தி அதற்கான பணிகளில் ஈடுபடும்பொழுது அ.தி.மு.க. மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் .
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் நிலை எதுவாயினும் திரு.அண்ணாமலை அவர்களின் ஆவின் விலை ஏற்றம் ,டாஸ்மாக் விலை ஏற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு பற்றிய அறிக்கைகள் தி.மு.க.விற்கு எதிராகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கின்றது . ஆனால் அ.தி.மு.க.நிர்வாகிகளின் குளிர்பான விநியோகம் போன்ற செய்திகள் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைகின்றது. பொதுமக்கள் பிரச்சனையில் ஈடுபடாமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனில் அக்கட்சி மறைந்து விடும் என்பதற்குக் காங்கிரஸ் ஒரு முன்னுதாரணம்.
எனவே தி.மு.க.விற்கு மாற்று பா.ஜ.க.தான் என்ற நிலைப்பாட்டில் திரு.அண்ணாமலை செயல்படுகின்ற நிலையில் தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க. தான் என்று மக்கள் இருக்கையில் அதற்குரிய செயல்பாடுகளில் கட்சித் தலைமை பின்னடைவது மிகவும் வருத்தமளிக்கிறது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?

கச்சத்தீவு திமுக மற்றும் காங்கிரஸால் கட்சிகளால் இலங்கைக்கு வழங்கப்பட்டது
அதைத் திரும்பப் பெற அதிமுக எப்போதும் முயல்கிறது. இலங்கைக்கு 7500கோடி கடன் வழங்கும்போது பாஜக அரசு தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?
இலங்கை அரசால் துன்புறுத்தப்படும் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதப்படுத்தப்படும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி அளித்த சீனா, இலங்கையில் உள்ள துறைமுகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஆனால் மீனவர் உரிமையை இந்தியா ஏன் திரும்பப் பெறவில்லை?
அதிமுகவும், எம்.ஜி.ஆரும் எப்பொழுதும் இலங்கைத் தமிழர்களை மற்றும் தமிழக மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றனர். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழ்நாடு அரசு பட்ஜெட்2022
நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வெற்றியடைகிற வகையில்

இந்த இயக்கம் பலநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பதற்கு , ஒன்றுபட்ட அ.தி.மு.க. மற்றும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மற்றும் லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அப்பாற்பட்டவர்களால் இவ்வியக்கத்தின் தலைமை ஏற்கப்படவேண்டும், சாதி மத இல்லாத வகையில் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்ததைப் போல மக்கள் விரும்பும் ஆ.தி.மு.க. அமையவேண்டும் . புரட்சித் தலைவர் காலத்தில் தி.மு.க. எவ்வளவு தான் செலவு செய்தலும் எந்தத் தேர்தலிலும் மக்கள் அ.தி.மு.க.வை புறக்கணித்தது இல்லை .
நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வெற்றியடைகிற வகையில் மீண்டும் 2026’ல் ஆட்சியமைக்கின்ற வகையில் அ.தி.மு.க.வளர்ச்சியடையும் அந்த உத்வேகம் தொண்டர்களிடத்திலும் உள்ளது ஆயினும் அ.தி.மு.க பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இக்கருத்தைப் பதிவிடுகிறேன்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
எம்.ஜி.ஆர் ஆட்சி அமையும்! அண்ணாமலைக்கு எச்சரிக்கை!
2022-23 நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும்18ஆம் தேதி தாக்கல்

2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக தேர்தல் வாக்குறுதிகளாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் உரிமை தொகை, மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, விவசாயம் மற்றும் கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாய்வுக்கு மானியம் போன்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு வருடம் நெருங்கும் இவ்வேளையில். திமுக அளித்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றபடும் என்று மக்கள் எதிர்பார்ப்போடு காத்துகொண்டு இருக்கின்றனர்.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக அரசாங்கம் அளித்த பல்வேறு திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கபடுமா?? அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்த படுமா ??
மக்களின் இந்த எதிர்பார்க்குகளை 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்

ஆதிமுக’விற்கு எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி 25% அதை எந்தக்காலத்திலும் அசைக்க முடியாது, ஆகையால் ஆதிமுக தலைமை எவ்வாறு அமையவேண்டும் என்றால் பாஜக’வை கடுமையாக எதிர்த்து நின்று திமுக’விற்கு போகின்ற எதிர்ப்பு ஓட்டுகள் 12சதவீதம் ஆதிமுக’விற்கு திரும்பப் பெற வேண்டும், மேலும் திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி , பாஜக விற்கு செல்கின்ற திமுக எதிர்ப்பு ஒட்டு 2%யும் ஆதிமுக’விற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்கையில் நமக்கு 40% ஒட்டு என்பது உறுதியாகிவிடுகிறது.
எனவே ஆதிமுக’வின் தலைமை என்பது பாஜக’விற்கு எதிரான நிலைப்பாட்டில் திராவிட கொள்கைகளிலும், திராவிட சித்தாந்தங்களிலும், எம்ஜிஆர் வழியிலும் அம்மாவின் வழியிலும் பயணிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA



குழுவில் இணைய