அடிப்படை தொண்டர்களுக்கு மட்டுமே தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அடித்து கூறும் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி!



✍️தீய சக்தி தி,மு,க, என வெளியேறி மாற்றாக மக்கள் பணியில் சிறு சிறு தொண்டாற்றி பாரத ரத்னா அவர்கள் தலைவர் பொருப்பை ஏற்றுக்கொள்ள வில்லை தொண்டர்கள், ரசிகர்கள்,பாமர ஏழை மக்கள், மீனவர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள் அவரை விரும்பி தலைவராக ஏற்றுக்கொண்டு அ,இ,அ,தி,மு,க கழகத்தை தோற்றுவித்தார்!

✍️தலைவர் பதவிக்கு கழகத்தில் சிறு சிறு சில சலப்புகள் எம்ஜிஆர் காதில் சென்றடையவே உடனடியாக அன்றைய மூத்த முன்னோடிகளான அரங்கநாயகம் மற்றும் ஆர்எம்வி,கேசி பழனிச்சாமி,நெடுஞ்செழியன், அன்வர் ராஜா,மற்றும் பலர் முன்னிலையில் ஒரு தீர்மானத்தை பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் நிறைவேற்றினார்.

✍️ அதுதான் தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

✍️தீர்மானம் பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் பைலாவில் எழுதப்பட்டது இதை புரட்சித்தலைவி அம்மாவும் பின்பற்றினார்!
Share on:

கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து ,கவர்னர் மற்றும் திமுக மோதல் தமிழகத்தில் திராவிடம் vs ஹிந்துத்துவா என்ற கட்டமைப்பு என்று நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் இந்த சூழலில்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் நடந்த கள்ளச்சாராய விவகாரம் பற்றி இந்த மாதம் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி அதிமுக தலைமைக்கு தகுதியானவரா?
Share on:

ஏன் இந்திய அரசாங்கம் இதனை செய்ய தவறியது?

IRCTC மற்றும் இந்திய அரசாங்கம், செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் 35 பைசா கட்டணம் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்ததற்காண காப்பீட்டுத் தொகையை வழங்க முடியும்.

IRCTC சில ஆண்டுகளுக்கு முன்பு தனது போர்ட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தொடங்கியது. தொடக்கத்தில் ரூ.0.98 பைசாவாக இருந்த பிரிமியம் தற்போது ரூ.0.35 பைசாவாக குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்சில் விபத்திற்குள்ளானவர்கள் அனைவர்க்கும் அந்த காப்பீட்டு தொகை சென்றடைவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்
Share on:

திமுகவின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன் & தேர்தலுக்கு பின்!

தேர்தலுக்கு முன்
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி
* பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
* ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* கனிம வளங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் “அனைவருக்கும்” மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
* கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை அணைத்து நகை கடன்களும் தள்ளுபடி.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தேர்தலுக்கு பின்
* முதல்வரின் அறிவுறுத்தலின் படி படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வோம்.
* தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடியவில்லை.
* நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லவில்லை அதற்க்கான முயற்சி செய்வோம்.
* திமுக நிர்வாகிகளே அதிக அளவில் கனிம வளங்களை சுரண்டிக்கொள்வது.
* தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* பெட்ரோல்,டீலில் இல்ல VAT-ஐ குறைக்கிறோம் என்று சொல்லிருந்தோம் ஆனால் இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை.
* 5 சவரன்க்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களில் சிலருக்கு தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் இல்லை என கருதப்படுகிறது.
* சமையல் எரிவாயு சிலிண்டரில் 1 பைசா கூட மாநில அரசிற்கு வருவாய் இல்லை அதை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசின் கையில் தான் உள்ளது.
Share on:

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளையுள்ளது!

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளையுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய விபத்தாக இருக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளின் இருப்பவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது…

ஏழு பெட்டிகள் முற்றிலும் சேதம், நான்கு பெட்டிகள் முற்றிலுமாக ரயில் பாதை இருக்கும் பகுதியில் இருந்து வெகு தூரம் சென்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

மூன்று பெட்டிகளில் சிக்கியிருக்கும் ஒருவரை கூட இதுவரை மீட்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது…

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டிய நிவாரண பணிகளை தமிழக அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டுமென வேண்டுகிறேன்.
Share on:

தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்!

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்.மேலும் தலைவர்கள் என்பவர்கள் சுயநலவாதிகள் ,அவர்களுக்கு தங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ,அவர்களின் குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி கொள்வதற்கும் ,அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் ,அவர்களின் கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் நிறைவேற்றிகொள்வதற்காக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் .

மேலும் உரையாடலின் பொழுது அவர்கள் அனைவரும் கட்சியை பற்றி சிறிது கூட அவர்கள் கவலை படுவதில்லை என்று கூறியுள்ளார் .அடிமட்டத்தில் மற்றும் கிளை அளவில் உள்ளவர்கள் தான் கட்சியின் தேவைகளை பற்றி நன்றாக தெரிந்து மக்கள் என்ன எதிர் பாக்கிறார்கள் ,ஒன்று பட்ட அண்ணாதிமுகவிவை எதிர்பாக்கிறார்கள் .அதனை நோக்கி பயணிக்க வேண்டும் ,அதனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .எனவே நாம் அதனை நோக்கி பயணித்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று…

Share on:

Continue Reading

இந்தியாவிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடு!

இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என RBI தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் நலத்திட்டஙகளை செயல்படுத்த கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதன்படி RBI மூலம் சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்கள் வாயிலாக மாநிலங்கள் நிதி திரட்டுகின்றன.

அதன்படி பார்த்தால் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் ரூ.87,000 கோடியாக உள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டில் இருந்து அப்படியே தொடர்ந்து வருகிறது.

ஆனால் தணிக்கை செய்யப்படாத CAG புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டின் வரி வருவாய் 2021-22ல் ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23ல் 18 சதவீதம் வரை அதிகரித்து ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வருவாய்க்கான செலவு என்பதும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
Share on:

வரித்துறை திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா

செந்தில் பாலாஜி சாதுரியமாக தனக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலை, திமுகவிற்கும் வருமான வரித்துறைக்கும் என்று மாற்றிவிட்டார்.

இதை உணராத ஸ்டாலின் அவர்களும் “PTR -இன் விஷயத்தில் அது அவர் தனிப்பட்ட விவகாரம் அவர் பார்த்துக்கொள்வார்”என்று ஒதுங்கிக்கொண்டு செந்தில் பாலாஜி விஷயத்தில் மட்டும் தேவைக்கு அதிகமாக அவரை ஆதரித்து அனைத்து திமுகவினருக்கும் பிரச்சனையை தேடிக்கொண்டார் .ஏன் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்டாலின் ஆதரவு தருவது ஏன் என்று திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது .

வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் திமுகவை சார்ந்தவர்கள் மீது சற்று கடுமை காட்டினால் போதும்,திமுகவின் பொருளாதாரம் மற்றும் ஆதரவு குறையும்.ஏனென்றால் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த பொழுது அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரின் கார் கண்ணாடிகளை உடைத்த பிரச்சனை பேசும் பொருளாக மாறி உள்ளது .எனவே அவர்கள் திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா
Share on:

தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்!



திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்.மேலும் தலைவர்கள் என்பவர்கள் சுயநலவாதிகள் ,அவர்களுக்கு தங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ,அவர்களின் குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி கொள்வதற்கும் ,அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் ,அவர்களின் கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் நிறைவேற்றிகொள்வதற்காக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உரையாடலின் பொழுது அவர்கள் அனைவரும் கட்சியை பற்றி சிறிது கூட அவர்கள் கவலை படுவதில்லை என்று கூறியுள்ளார் .அடிமட்டத்தில் மற்றும் கிளை அளவில் உள்ளவர்கள் தான் கட்சியின் தேவைகளை பற்றி நன்றாக தெரிந்து மக்கள் என்ன எதிர் பாக்கிறார்கள் ,ஒன்று பட்ட அண்ணாதிமுகவிவை எதிர்பாக்கிறார்கள் .அதனை நோக்கி பயணிக்க வேண்டும் ,அதனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .எனவே நாம் அதனை நோக்கி பயணித்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் உரையாடும் பொழுது கூறியுள்ளார்
Share on:

மதுவிலக்கு குறித்து திமுகவின் இரட்டை வேடம்!



தமிழ்நாட்டில் தற்பொழுது மதுவிலக்கு இல்லாததால் ஏழை ,எளிய விவசாய பெருங்குடி மக்கள் ,தொழிலாளத் தோழர்கள் ,ஏன் ஏழை மாணவர்களும் கூட தொடர்ந்து மனம் போக்கில் மதுவை அருந்தி நூற்றுக்கணக்கில் உயிர்பலி ஆகிறார்கள் .இந்த கொடுமைக்கும் ,கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும் ,பச்சிளம் குழந்தைகளும் பலியாகிறார்கள் என்கிற செய்தி தொடர்ந்து வந்துகொண்டிக்கின்றன .எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும் ,ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் – மு.கருணாநிதி ஜூலை 20,2015

இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது .ஏனென்றால் இங்கே ஒவ்வொரு நாளும் குடிப்பழக்கத்துக்கும் ,மதுவுக்கும் அடிமையாகும் நிலை அதிகரித்துக்கொண்டே போகிறது .அதைப்பற்றி இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை;கவலையில்லை – கனிமொழி ,ஏப்ரல் 10,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2016),மதுவிலக்கை அமல்படுத்த தனி சட்டம் கொண்டு வரப்படும் .டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கலைக்கப்படும் . அதில் பணியாற்றும் ஊழியருக்கு மாற்று வேலை தரப்படும் என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது .மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான் .எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று உறுதி அளிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்,ஏப்ரல்20,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2021) எங்கும் பூரண மதுவிலக்கு என்றோ ,மதுக்கடைகளை குறைப்போம் என்றோ வாக்குறுதி கொடுக்கவில்லை – செந்தில் பாலாஜி ,பிப்ரவரி 2,2023
Share on: