சேலத்தை சுற்றி களம் இறங்கிய சிபிசிஐடி போலீஸ்.


கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய விவகாரங்கள் குறித்த விசாரணை சேலத்தை சுற்றியே இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கனகராஜ் கொடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார். கொடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். என்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக என் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் என்னிடம் அப்போது தெரிவித்தார். கொடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்து வந்ததால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்த போதுதான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.

கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் தனபால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இது குறித்து தெரிய வரும் என்றும் கூறி அதிர வைத்தார்.

கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து மர்ம விபத்து மரணங்கள், தற்கொலை என அடுத்தடுத்து நடந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

720 செல்போன் அழைப்புகளை தீவிரமாக விசாரிக்கும் நடவடிக்கையும் இறங்கி உள்ளனர்.

கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர் இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் திவிரப்படுத்தி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
Share on: