தமிழகத்தில் 19ஆம் தேதி காலை, மதியம் சினிமா காட்சிகள் ரத்து.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.


தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 19ஆம் தேதி காலை மற்றும் மதியம் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே 4 முனை போட்டி நிலவுகிரது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் (இருப்பதே ஒன்றுதான்) வென்றது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அது போல் 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அது போல் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Share on: