தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை: ரூ. 4 கோடி பறிமுதல்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் விருகம்பாக்கம், ஓட்டேரி, சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Share on: