பொதுவெளியில் ஆளுநர் குற்றச்சாட்டு சரியா?


தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பிராண்ட் குறிப்பிட்ட தவற்றினை செய்கிறார்கள் என்பதனை ஆளுநர் மத்திய அரசாங்கத்தின் உள்துறைக்கு அறிக்கையாகச் சொல்லலாம் அதுவும் மாநில அரசின் முதலமைச்சருக்கோ உள்துறைக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ தெரிவித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு அது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கூறலாம் ஆனால் அதை எல்லாம் கடந்து பொது வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல வழக்கமாக ஆளுநர்கள் அவ்வாறு பேசுவது இல்லை . இருப்பினும் சட்டம் ஒழுங்கு என்பது ஒரு தீவிரவாத பிரச்சனையாகத் தமிழ்நாட்டில் கருதப்படும் நிலையில் இது ஒரு உணர்திறன் கொண்ட ஒரு கருத்து என்பதால் பொதுவெளியில் ஆளுநர் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டுப் பேசவேண்டும் , அல்லது தமிழ்நாட்டு அரசாங்கம் ஆளுநர் சொல்வது தவறு என்பதற்குக் கடுமையான எதிர் வினையாற்ற வேண்டும்
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: