
தேர்தலின் போது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தான். எந்த கட்சி எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடமும், ஆர்வலர்களிடமும் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்களை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதில் தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை விமர்சிக்கும் ஆனால் அ.தி.மு.க.வை விமர்சித்து வாக்குகள் சேகரிக்குமா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வை மட்டும் விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அ.தி.மு.க. மக்கள் ஆதரவை பெறும். மாறாக பா.ஜ.க.வை ஆதரித்தால் மக்கள் ஆதரவை இழப்பதோடு தேர்தலில் தோல்வியையும் சந்திக்கக் கூடும்.








குழுவில் இணைய