இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் கஜானாவை நிரப்பவா அல்லது தனது கஜனாவை நிரப்பிக் கொள்ளவா? மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லா கடன் என்று அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன் அவர்களே, மாநில அரசு செலுத்தும் ஜி.எஸ்.டி. தொகையை திரும்ப கொடுக்க எதற்கு வட்டி? தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை எப்போது வழங்கப் போகிறீர்கள்?