அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.ஸுக்கு புதுக்குடைச்சல் தர தயாராகிறார் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி.
எம்.ஜி.ஆர்., ஜெ. உள்ளிட்டோர் வகித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியையே ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு அதிகாரமிக்க பதவிகளை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். சட்டத் திருத்தம் செய்தனர். இதனை நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு தற்போது அங்கீகரித்துள்ளது ஆணையம்.
இதனை எதிர்க்கும் கே.சி.பழனிச்சாமி நம்மிடம், “”அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்.! அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் சட்ட விதிகளின்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கட்சியின் தலைமையை யாரும் பின்வாசல் வழியாக ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காகவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கினர்.
பொதுவாக, சொத்துகளுக்காக உயில் எழுதுவார்கள்….