Mother your children are like birds

Verse 1

For as long as I can remember,
The windows always glowed for me,
In the room filled with quiet spring,
And embroidered towels on the wall.
In that sacred, peaceful chamber,
A child’s heart would read and know
Shevchenko’s kind and watchful eyes,
And golden patterns in a row.

Chorus

Mother, your children are like birds,
Spreading wings into the sky.
Mother, to your tender room,
We’ll return again by and by.

Verse 2

That endless childhood temptation –
Open the…

Share on:

Continue Reading

தாக்குதலுக்கு ரெடியான இந்தியா? அவசர அவசரமாக.. பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பிய துருக்கி?


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் நேற்று கராச்சிக்கு அனுப்பப்பட்டது.

துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். ஆறு துருக்கிய C-130 விமானங்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு விமானங்கள் மட்டுமன்றி தோட்டாக்கள், கவச உடைகள், ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று கொத்து கொத்தாக அனுப்பப்பட்டு உள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தெந்த நாடுகள் இந்தியாவை ஆதரிக்கும், பாகிஸ்தானை ஆதரிக்கும், நடுநிலையாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்:

அமெரிக்கா – முக்கியமாக மொத்த QUAD கூட்டாண்மை வழியாக அமெரிக்கா ஆதரிக்கும்

பிரான்ஸ் – வலுவான உறவு (எ.கா., ரஃபேல் ஜெட்)

ரஷ்யா – பாரம்பரியமாக நெருங்கிய நட்பு நாடு (சீனாவுடன் ரஷ்யா நட்பில் இருந்தாலும், இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக உள்ளது).

ஆஸ்திரேலியா – QUAD கூட்டாளி

ஜப்பான் – QUAD கூட்டாளி

யுனைடெட் கிங்டம் – வரலாற்று உறவு உள்ளது., இந்திய புலம்பெயர்ந்தோர் செல்வாக்கு உள்ளது.

இஸ்ரேல் – வலுவான உறவு. இரண்டு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு.

வியட்நாம் – சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா – ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டது.

பூட்டான், நேபாளம் (நடுநிலை ஆனால் இந்தியாவை நோக்கி சற்று சாய்ந்திருக்கலாம்)

பங்களாதேஷ் – இந்தியாவுடனான உறவு பாகிஸ்தான் எதிர்ப்பால் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ஏறக்குறைய 10-12 நாடுகள் இந்தியாவை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள்:

சீனா – வலுவான நட்பு. முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகள் (CPEC) அதிகம்.

துருக்கி – காஷ்மீர் பிரச்சனைகளில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் முக்கிய ஆதரவாளர்.

மலேசியா (அரசாங்கத்தைப் பொறுத்து) – காஷ்மீர் மீதான சில வரலாற்று ஆதரவு காரணமாக பாகிஸ்தான் பக்கம் சாயலாம்.

கத்தார் – பாகிஸ்தான் உடன் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.

ஈரான் (ஒருவேளை நடுநிலையாக இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் பக்கம் சிறிது அனுதாபம் உள்ளது). எனவே தோராயமாக 3-5 நாடுகள் பாகிஸ்தானை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

நடுநிலையாக இருக்க வாய்ப்புள்ள நாடுகள்:

ஐரோப்பிய ஒன்றியம் (பிரான்ஸ், இங்கிலாந்து தவிர, மற்ற நாடுகள் இந்தியா பக்கம் செல்லலாம்).

ஆசிய நாடுகள் (இந்தோனேசியா, தாய்லாந்து போன்றவை நடுநிலையாக இருக்கலாம்).

ஆப்பிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகள் (பிரேசில், அர்ஜென்டினா போன்றவை)
Share on:

அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்! “ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரியுங்கள்”-உயர்நீதிமன்றம்


அமைச்சர் ஐ பெரியசாமி அவரின் மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் முகாந்திரம் இல்லாதவை, சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யாமல் தங்களுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு தரப்பில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை நகல்களை விளக்கி வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவை ரத்து செய்வதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Share on:

வரும் திங்கட்கிழமை (28ம் தேதி)க்குள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா? அல்லது ஜமீனை ரத்து செய்வதா? – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!


எதற்காக செந்தில் பாலாஜி இப்படி அடம் பிடிக்கிறார்? அவர் அமைச்சர் பதவிக்கு உச்சநீதிமன்றத்தால் இவ்வளவு நெருக்கடிகள் இருக்கிற போதே அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தில் அதில் முறைகேடு நடந்துள்ளது அதிலும் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

2006 முதல் இன்று வரை செந்தில்பாலாஜி உட்பட மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் வரை தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் அதில் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய அமலாக்கத்துறை நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளும் ஒருங்கிணையும்பொழுது திமுக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும்.

எப்படி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் “தான் பெற்ற லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தாரோ அதேபோல நேற்று சட்டமன்றத்திலும் “பாட்டிலுக்கு 10ரூ அதிகம் பெறுவது 2011ல் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது” என்று இவரே சட்டமன்ற பதிவேடுகளில் உறுதிபட தெரிவித்திருக்கிறார். போதாதற்கு இந்தியாவை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர் டாஸ்மாக்கில் மது வாங்க சென்று MRP இல்லையா என்று கேட்க, அவரிடமும் MRPயை விட ₹20 அதிகம் கேட்டு முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

இப்படி நடக்கிற கொள்ளையில் பணம் இவர் கைக்கு செல்கிறது, இவரிடம் இருந்து ஆட்சி மேலிடத்திற்கு செல்கிறது என்பது தான் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. நடைபெறுகிற சூழ்நிலைகள் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையப்போவதாக தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அவர்களும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும், தனது குடும்பத்துக்கும், திமுக கட்சிக்கும் அதிக சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
Share on:

இன்னைக்கு டாஸ்மாக்.. நாளைக்கு வேற டிபார்ட்மெண்ட்! குறிவைக்கும் அமலாக்கத்துறை.. 23ஆம் தேதி கிளைமாக்ஸ்


டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் எனவும் அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? எனவும் அரசுத் தரப்பில் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் இன்று பதில் வாதம் செய்தார்.. அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை என்றும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களை முடிவடைந்ததையடுத்து வரும் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Share on:

துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் பண்றதுக்கு இல்ல.. காலுக்கு கீழ சுடுங்க! போலீசை விளாசிய நீதிபதி.!


பிரபல ரவுடி வெள்ளை காளி போலீஸாரால் சுட்டு கொலை செய்யப்பட உள்ளார் எனவும், அவரின் வழக்கு விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸில் நடத்த உத்தரவிட கோரி சகோதரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமீப காலமாக என்கவுண்டர் அதிகரித்து உள்ளது”எத்தனை என்கவுண்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் எனவும், சுட்டுப்பிடியுங்கள் காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது எனவும் கூறியுள்ளார்.

திருச்சி சேர்ந்த சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் வெள்ளைக்காளி என்ற காளிமுத்து சென்னை புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மாதம் கிளாமர் காளி என்ற ரவுடி மதுரையில் கொலை செய்யப்பட்டார்.

இதில் எனது சகோதரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் அந்த கொலையில் எனது சகோதரரையும் தொடர்புபடுத்தி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் எனது சகோதரரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணம் காட்டி அவரை என்கவுண்டர் செய்வதற்கானக் வாய்ப்பு உள்ளது. ஆகவே எனது சகோதரரிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தவும், அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்யப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, சமீப காலமாக என்கவுண்டர் அதிகரித்து உள்ளது. எத்தனை என்கவுண்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

சுட்டுப்பிடியுங்கள் காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது.” என கருத்து தெரிவித்தார். அரசுத்தரப்பில், ” 2 காவல்துறையினர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Share on:

எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை உறுதி: கே.சி.பழனிசாமி நம்பிக்கை!


முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. நீதிமன்றம் வழக்கை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தனக்கு இந்த வழக்கில் உரிய தண்டனை கிடைக்கும் என்று கே.சி.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். கே.சி.பழனிசாமி, கோவையின் முன்னாள் எம்.பி ஆவார். இந்த வழக்கை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். கே.சி.பழனிசாமி நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதி வழக்கு விசாரணையை மே மாதம் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பேட்டி அளித்தார். அதில், ஜெயலலிதா தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், “தெருவில் செல்பவர்” என்றும் கூறியதாக கே.சி.பழனிசாமி கூறினார்.

இது தொடர்பாக கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மூன்று வாய்ப்புகள் கொடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே தன்னை அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசியதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் மற்றொரு அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று கே.சி.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். தெருவில் செல்பவர் என்று எடப்பாடி பழனிச்சாமி தன்னை கூறியது, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கே.சி.பழனிசாமி கூறினார்.
Share on:

அதிமுகவின் இறுதி யாத்திரை துவக்கம்! மாபெரும் தவறை செய்த இபிஎஸ்! கொதிக்கும் கே.சி.பழனிசாமி!


அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசியதால் கடந்த 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அக்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972ல் துவக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில் #திராவிட சித்தாந்தங்களில் பயணித்த அதிமுகவை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்பது 1980லேயே காங்கிரஸ் மற்றும் திமுகவால் முயற்சிக்கப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

அதேபோல ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்படவேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்த கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அதிமுகவின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார். இன்றைய நாள் அதிமுக வரலாற்றில் ஒரு #கருப்பு_நாள்.

“மோடியா? லேடியா?” என்று கேட்ட #ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா, “சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்” என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த EPS & Co-க்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Share on:

D-க்கு 2 வருடங்களாக டிமிக்கி கொடுத்த அசோக் குமார்.. ‘ஸ்விட்ச் ஆஃப்’ மோட்.. வெளியே வந்தது எப்படி?


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட போது தலைமறைவான அசோக் குமார், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை, அசோக் குமாரை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் சிக்கவில்லை.

2011 – 2015 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023 ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ரெய்டுக்கு பிறகு செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கரூர் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தலைமறைவாகவே இருந்து வந்தார்.

அசோக் குமாரின் மொபைல் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் மோடிலேயே இருந்தன. அசோக் குமார் வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாகவும், வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே, கரூர் ராமேஸ்வரபட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அசோக் குமார் அவ்வப்போது பார்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர் அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியே வரவில்லை. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்டது. ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயசந்திரன், அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமீன் கொடுக்க முடியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல கட்ட முயற்சிக்கு பிறகு ஒரு வழியாக ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். அப்போது அசோக் குமார் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்போதும் வெளியே வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கரூர் – சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த சொகுசு பங்களா கட்டப்பட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும், அந்த கட்டடத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் தான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தொடர்ந்து இன்று நேரில் ஆஜராகி உள்ளார் அசோக் குமார். அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
Share on:

ரெய்டு முடிந்த கையோடு.. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை!


அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை நடத்தினர். நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே இப்போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

நேற்று காலை அமைச்சர் நேருவின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து நடந்த பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ரெய்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

நேற்றைய தினம் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.என்.நேருவின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் தமிழகம் முழுதும் 20 இடங்களில் ரெய்டு நடந்தது. கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது.

அதன்படி சென்னை பிஷப் கார்டன் பகுதியில் கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் டிவிஹெச் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
Share on: