Gpay-யில் லஞ்சம் வாங்கிய ASI.. பாயப்போகும் நடவடிக்கை.. உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சொன்ன தகவல்


‛ஜிபே’ மூலம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் வசந்தா, இளவரசன் உட்பட 3 பேருக்கு எதிராக ஊழல் புகாரை திட்டக்குடி காவல் நிலையத்தில் அளித்திருந்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்யவில்லை.

புகார் மீது விசாரிக்க வேண்டும் என்றால் லஞ்சம் வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.

ஆனால், விஜயலட்சுமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் வேறு வழியின்றி புகார் மீது நடவடிக்கை எடுக்க ஜி பே மூலம் 1500 ரூபாயை காவல் உதவி ஆய்வாளருக்கு விஜயலட்சுமி அனுப்பியுள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்டது.

அதில், புகார் மனுவை விசாரித்ததாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர் தரப்பிடமும் பேரம் பேசி புகார் மனுவை முடித்து வைத்துள்ளார்’ என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், திட்டக்குடி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதான புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது, ஜிபே மூலம் பணம் வாங்கிய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Share on:

டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!


மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குநர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் ‘ரெய்டு’ நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விசாரணை

அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, ‘டெண்டர்’ ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, பாட்டிலுக்கு, 10 – 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மூவரின் மொபைல் போன்கள், இ – மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.
Share on:

வடகாடு விவகாரம்! white collar job செய்யும் கலெக்டர், எஸ்பி! நீதிபதி கண்டனம்


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடந்த சம்பவத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியரும் காவல் துறை ஆணையரும் ஒயிட் காலர் வேலை பார்ப்பதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதி திராவிட நலத்துறையின் உறுப்பினர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதிப்படுத்தவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனுதாக்கல் செய்யவும், திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இன்றைய தினம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனுதாக்கல் செய்யவும், திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இன்றைய தினம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜராகினார். அரசு தரப்பில், மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.8.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும்.

அமைதி பேச்சு வார்த்தைக்குப் பிறகு அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதே பிரச்சினை. தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. போதிய காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. வருவாய்த் துறையினர் வொயிட் காலர் வேலைதான் செய்கிறார்கள். கலவரம் நடந்த அன்று, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மே 4 முதல் 7-ம் தேதி வரை கோயில் மற்றும் பிரச்சினை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Share on:

செஞ்சி ஒரே மையத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் சென்டம்.. வினாத்தாள் கசிவா?


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் வாங்கியிருப்பதால், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 7,92,494 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.. இதில் மாணவிகள் 96.70 சதவீதம், மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வு மையமாகவும் உள்ளது. அங்கு இந்த வருடம் 414 மாணவிகள், 210 மாணவர்கள் உள்பட 624 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்.

வேதியல் மிகவும் கடினமான பாடம். பொறியியல் கட் ஆஃப்க்கு அந்த மதிப்பெண் மிகவும் முக்கியமானது. அதில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 167 மாணவர்கள் தேர்ச்சியாகியிருப்பதால் வினாத்தாள் கசிந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஒரு மையத்தில் மட்டுமல்ல, செஞ்சி ஒன்றியத்தில் உள்ள பல மையங்களில் பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் எடுத்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலர் 100 க்கு 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். பல மாணவர்கள் 90க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். இது கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் செஞ்சி பகுதியில் மட்டும் மாணவர்கள் எப்படி சென்டம் எடுத்தார்கள் என்று விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Share on:

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு…


பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன். அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Share on:

தமிழகத்தின் வாக்கு சாவடிகள் என்னென்ன? 38 மாவட்டங்களில் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?


இந்தியாவில் இருபத்தைந்து மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, தனித்துவமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்பட, தமிழ்நாடு பல்வேறு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது நிலை மாவட்டம் ஆகும். தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது. மாவட்டங்கள் மேலும் வட்டங்களுக்கு பிரிக்கப்பட்டுள்ளன.

இவை தாசில்தார்களின் மேலாண்மையில் செயல்படுகின்றன. நகர்ப்புற வளர்ச்சிக்காக, மாநிலம் பல நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர், சாலை மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மை போன்ற பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலின்போது, மக்கள் தங்களது ஜனநாயக உரிமையைச் செலுத்த ஓட்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்காக அமைக்கப்படுகிறது. இவ்வாறு பல அடுக்குகளாக உள்ள நிர்வாக அமைப்பு, தமிழக மக்களின் நலன்களை மேம்படுத்துவதிலும், ஒழுங்கான நிர்வாகத்திற்கும் வழிவகுக்கிறது.

மாவட்டங்கள் (38 Districts) தமிழ்நாடு தற்போதைய கணக்கீட்டின்படி 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்,…
Share on:

Continue Reading

Tamil Nadu SSLC, PLUS 2 exam result 2025: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?


தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11, ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

அது போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 30 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியும் 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே 6ஆம் தேதி வாக்கில் முடிவுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து அரசு கல்லூரியா இல்லை தனியார் கல்லூரியில் டொனேஷன் கொடுத்து சேர்வதா என்பதை முடிவு செய்வர். எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பெற DGE TN என்ற இணையத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் “TN HSE +2 Result 2025” அல்லது “TN SSLC Result 2025” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும்.

அப்போது உங்களுடைய மதிப்பெண்கள் ஸ்கிரீனில் தெரியும். அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். பிறகு பள்ளியில் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும். அதை வைத்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

Mother your children are like birds

Verse 1

For as long as I can remember,
The windows always glowed for me,
In the room filled with quiet spring,
And embroidered towels on the wall.
In that sacred, peaceful chamber,
A child’s heart would read and know
Shevchenko’s kind and watchful eyes,
And golden patterns in a row.

Chorus

Mother, your children are like birds,
Spreading wings into the sky.
Mother, to your tender room,
We’ll return again by and by.

Verse 2

That endless childhood temptation –
Open the…

Share on:

Continue Reading

தாக்குதலுக்கு ரெடியான இந்தியா? அவசர அவசரமாக.. பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பிய துருக்கி?


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் நேற்று கராச்சிக்கு அனுப்பப்பட்டது.

துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். ஆறு துருக்கிய C-130 விமானங்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு விமானங்கள் மட்டுமன்றி தோட்டாக்கள், கவச உடைகள், ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று கொத்து கொத்தாக அனுப்பப்பட்டு உள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தெந்த நாடுகள் இந்தியாவை ஆதரிக்கும், பாகிஸ்தானை ஆதரிக்கும், நடுநிலையாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்:

அமெரிக்கா – முக்கியமாக மொத்த QUAD கூட்டாண்மை வழியாக அமெரிக்கா ஆதரிக்கும்

பிரான்ஸ் – வலுவான உறவு (எ.கா., ரஃபேல் ஜெட்)

ரஷ்யா – பாரம்பரியமாக நெருங்கிய நட்பு நாடு (சீனாவுடன் ரஷ்யா நட்பில் இருந்தாலும், இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக உள்ளது).

ஆஸ்திரேலியா – QUAD கூட்டாளி

ஜப்பான் – QUAD கூட்டாளி

யுனைடெட் கிங்டம் – வரலாற்று உறவு உள்ளது., இந்திய புலம்பெயர்ந்தோர் செல்வாக்கு உள்ளது.

இஸ்ரேல் – வலுவான உறவு. இரண்டு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு.

வியட்நாம் – சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா – ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டது.

பூட்டான், நேபாளம் (நடுநிலை ஆனால் இந்தியாவை நோக்கி சற்று சாய்ந்திருக்கலாம்)

பங்களாதேஷ் – இந்தியாவுடனான உறவு பாகிஸ்தான் எதிர்ப்பால் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ஏறக்குறைய 10-12 நாடுகள் இந்தியாவை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள்:

சீனா – வலுவான நட்பு. முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகள் (CPEC) அதிகம்.

துருக்கி – காஷ்மீர் பிரச்சனைகளில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் முக்கிய ஆதரவாளர்.

மலேசியா (அரசாங்கத்தைப் பொறுத்து) – காஷ்மீர் மீதான சில வரலாற்று ஆதரவு காரணமாக பாகிஸ்தான் பக்கம் சாயலாம்.

கத்தார் – பாகிஸ்தான் உடன் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.

ஈரான் (ஒருவேளை நடுநிலையாக இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் பக்கம் சிறிது அனுதாபம் உள்ளது). எனவே தோராயமாக 3-5 நாடுகள் பாகிஸ்தானை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

நடுநிலையாக இருக்க வாய்ப்புள்ள நாடுகள்:

ஐரோப்பிய ஒன்றியம் (பிரான்ஸ், இங்கிலாந்து தவிர, மற்ற நாடுகள் இந்தியா பக்கம் செல்லலாம்).

ஆசிய நாடுகள் (இந்தோனேசியா, தாய்லாந்து போன்றவை நடுநிலையாக இருக்கலாம்).

ஆப்பிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகள் (பிரேசில், அர்ஜென்டினா போன்றவை)
Share on:

அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்! “ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரியுங்கள்”-உயர்நீதிமன்றம்


அமைச்சர் ஐ பெரியசாமி அவரின் மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் முகாந்திரம் இல்லாதவை, சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யாமல் தங்களுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு தரப்பில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை நகல்களை விளக்கி வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவை ரத்து செய்வதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Share on: