மன்னர் சார்லஸ் வழங்கிய உயரிய கௌரவத்தையே புறங்கையால் ஒதுக்கிய ரத்தன் டாடா.. காரணம் என்ன தெரியுமா?


பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் ரத்தன் டாடா. பிசினஸ் மேக்னட்டாக இருந்த அதே ரத்தன் டாடா, உயிர்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தியவர். தனது செல்லப் பிராணிகளுக்கு ஒன்று என்றால் துடித்துப்போய்விடக் கூடியவர். தனது செல்ல நாய்க்காக அவர், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவத்தையே புறந்தள்ளினார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் நேற்று இரவு காலமானார். தனது நிறுவனங்கள் மூலம் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து, இந்திய தொழில்துறையில் மதிப்புமிக்க பணிகளைச் செய்த ரத்தன் டாடா போற்றுதலுக்குரியவர். இவற்றிற்கு அப்பால், அவரது மனிதாபிமான குணம், நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீதான அவரது அன்பு மகத்தானது.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தனது செல்லப் பிராணிக்காக, ரத்தன் டாடா பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க கவுரவத்தை நிராகரித்தார் என்பது. தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவின் சிறப்பான தொண்டு நிறுவன சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை, நடத்திய இந்த விருது வழங்கும் விழா, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு கௌரவம் மிக்க விருதைப் பெற ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் ரத்தன் டாடா லண்டன் கிளம்பும் நாள் நெருங்கி வந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டு, லண்டன் செல்லாமல் இங்கேயே இருக்கும் முடிவை எடுத்தார். அதற்கு காரணம் அவரது வளர்ப்பு நாய் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலைமையில் இருந்தது. இதனால் சார்லஸ் ஒருங்கிணைத்த விருது விழாவை ரத்து செய்துவிட்டு, தமது செல்ல நாயை கவனிக்க அவர் முடிவு செய்தார்.

டாடாவுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றவர்களில் ஒருவர் தொழிலதிபரான சுஹேல் சேத். பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த விழாவிற்காக 2 ஆம் தேதிய லண்டன் சென்றார் சுஹேல் சேத். லண்டனில் அவர் தரையிறங்கியதும் ரத்தன் டாடாவிடம் இருந்து 11 மிஸ்டு கால்கள் வந்திருந்ததை கவனித்துள்ளார்.

உடனே அவர் ரத்தன் டாடாவை தொடர்பு கொண்டுள்ளார். ரத்தன் டாடா, தனது நாய்க்கு உடம்பு முடியவில்லை, நான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, லண்டனுக்கு வர இயலாத தனது நிலையை விளக்கியுள்ளார். மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் எனது செல்ல நாயை விட்டுவிட்டு லண்டன் புறப்பட முடியாது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு, தன்னால் வர இயலாததையும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார். ரத்தன் டாடா வர இயலாமல் போனதற்கான உண்மையான காரணம் மன்னர் சார்லஸு க்கு தெரியவர, அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியதாக தொழிலதிபர் சுஹேல் சேத் காணொளி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தனது இரண்டு நாய்களான டிட்டோ (ஜெர்மன் ஷெப்பர்ட்) மற்றும் டேங்கோ (கோல்டன் ரெட்ரீவர்) ஆகிய செல்லப்பிராணிகளின் மரணம் தன்னை எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி ஒருமுறை பேசிய ரத்தன் டாடா, “செல்லப்பிராணிகளாக நாய்கள் மீதான எனது அன்பு எப்போதும் அதிக பிணைப்பு கொண்டது. இது நான் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.

எனது செல்லப்பிராணிகளில் ஒன்று இறந்து போகும் ஒவ்வொரு முறையும் விவரிக்க முடியாத சோகம் ஏற்படுகிறது.அந்த இயற்கையின் மற்றொரு நிகழ்வு இது என என்னால் கடந்து செல்ல முடியாது. அடுத்த இரண்டு-மூன்று வருடங்களுக்கு என் வீடு மிகவும் வெறிச்சோடி, அவர்கள் இல்லாமல் நான் வாழ முடியாதபடி அமைதியாகவும் மாறுகிறது” எனக் கூறி இருக்கிறார்.
Share on:

சாம்சங் நிறுவனத்தின் கையாளாக தமிழக அரசு.. இது தான் திராவிட மாடலா? சிபிஐ கண்டனம்..


சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்ட பந்தல் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இதே போல், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர்கள் அன்பரசன், டிஆர்பி ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிஐடியு தொழிற்சங்க பதிவை தவிர மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்த நிலையில், சிஐடியு மட்டும் போராட்டத்தை தொடர்வதாகவும், அவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக போராட்ட குழுவினர் அமைத்திருந்த பந்தலை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் சாம்சங் தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்வதாகவும், பேருந்துகளில் செல்பவர்களையும் தடுத்து விதிகளை மீறி கைது செய்யப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதற்காக வந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், சாம்சங் நிறுவனத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை நேற்று இரவு போலீஸ் அராஜகமாக அகற்றியுள்ளனர். காவலர்கள் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வருகிற தொழிலாளர்களை கைது செய்ய தயாராக உள்ளன. போராடும் இடத்தை அராஜகமாக போலீஸ் அகற்றிய பிறகும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 31வது நாளாகத் தொடர்கிறது. கோரிக்கை வெல்லும் வரை போராட்டம் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.
Share on:

திருப்பூரில் கேட்ட பயங்கர சத்தம்.. 9 மாத குழந்தை உட்பட மூவர் பலி.. நாட்டு வெடிகுண்டால் பதற்றம்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ளது பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தனர் என்பது குறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில், கார்த்தி அங்குள்ள கோயில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது. இதில், கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. அந்த கட்டடத்துக்குள் 10 நபர்கள் இருந்துள்ளனர். அதில், மூவர் குழந்தைகள். இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உஉள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்தில் 9 மாத குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தி என்பவரது வீடு சேதம் அடைந்தது மட்டுமின்றி எதிரில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன் பூண்டி போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது, நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
Share on:

மெரினாவில் 2 மணி நேரம்.. சாலையில் கிடந்து உயிருக்கு போராடிய நபர் மரணம்.. போலீஸ் எங்கே?


சென்னை மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார். இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேர் இந்த நிகழ்வில் பலியாகி உள்ளனர் .

மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இவர் தனது மனைவி குழந்தையை மெரீனாவில் உள்ள முத்தமிழ் அறிஞர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு.. அங்கிருந்து பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

பார்க்கிங்கிற்கு சென்றவர் 2 மணி நேரமாக வரவில்லை. அவர் பார்க்கிங் அருகே மூச்சு திணறி , நீர் இழப்பு ஏற்பட்டு கண்கள் பாதி மூடிய நிலையில் படுத்து கிடந்துள்ளார். நீர் இழப்பு ஏற்பட்டு அங்கேயே வாந்தியும் எடுத்துள்ளார். 2 மணி நேரமாக அவர் அங்கேயே உயிருக்கு போராடியபடி அங்கேயே இருந்துள்ளார். அவரை ஒரு போலீசார் கூட மீட்கவில்லை. ஒரு நபர் கூட காப்பாற்றவில்லை. ஏன் ஆம்புலன்ஸ் கூட கூட்டம் காரணமாக வரவில்லை.

2 மணி நேரத்திற்கு பின் விஷயம் தெரிந்து கார்த்திகேயனின் மனைவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போய் அவர் ஆம்புலன்ஸை வரவழைத்தும் கூட அது நேரத்திற்கு வரவில்லை. 3 மணி நேரத்திற்கு பின்பே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது. அவரை ஒரு போலீசார் கூட காப்பாற்ற வரவில்லை. 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர் என்றால் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலீசார்.. அதிகாரிகள்.. அரசு தரப்பு நிர்வாகிகள் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசாரின் செயல் இதில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்கள் 5 பேர் மரணம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழக போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் பலியான சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
Share on:

அரசுக்கு கெட்ட பெயர்.. கொள்ளை அடிக்கவா 100 நாள் வேலை திட்டம்? அதிகாரிகளை விளாசிய நீதிமன்றம்..!


கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மகாத்மா காந்தி 100 நாள் திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன் படுத்தி வருகின்றனர் எனவும், மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,” கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப்பணிகளை பணித்தள பொறுப்பாளராக இருந்து கண்காணிக்கும் அமுதா என்பவர், முறைகேடாக கிராமத்தில் இல்லாதவர்கள், வடமாநிலத்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்களை இணைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவது போல மோசடி செய்து வருகிறார்.

பணித் தள பொறுப்பாளரின் மோசடிக்கு உடந்தையாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் உதவி செய்து வருகின்றனர். பணித் தள பொறுப்பாளர் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளார். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் 1200 ரூபாய் கட்டணமாக விதித்துள்ள நிலையில், பொதுமக்களிடம் இருந்து 5000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், ஒன்றிய ஊழல் தடுப்பு பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உரிய விசாரணை நடைபெற்றால் மேலும் பல முறைகேடுகள் வெளியே தெரியவரும், எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கண்காணிக்கும் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பதும், பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது. இது அதிகாரிகளின் மோசமான நடவடிக்கை.

இதுபோன்ற திட்டங்களை வைத்து ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த மனு குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Share on:

மாணவர்களிடம் குட்கா, கூல் லிப்.. ஏன் குண்டாஸ் போட கூடாது! சாட்டையை சுழற்றிய நீதிபதி..முக்கிய ஆர்டர்!


கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார்.

இதில் அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கணேஷ் ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும், கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

கடந்த விசாரணையின் போது நீதிபதி பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே ஏன் கூல் லிப் குட்கா வகைகளை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, தமிழக அரசு தமிழகத்தில் கூல் லிப் , குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்து உள்ளது இருந்தபோதும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகின்றனர். மீறி விற்பனை செய்யும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் நமது அருகாமை மாநிலங்களின் அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி உள்ளது என வாதிட்டார்.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் தான் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும் இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, தற்போது கூல் லிப், குட்கா புகையிலை பொருள் வாலிபர்கள் இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ள சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ? அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும். எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் இதுபோன்ற பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்க உள்ளது எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.
Share on:

வெளியான ஈரான் ஹிட் ஹிஸ்ட்.. முதல் டார்கெட் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?


இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், இந்த ஹிட் லிஸ்ட் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிப்பதாக இருக்கிறது.

மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் திட்டமிட்டுக் கொன்றது. இது ஈரானை ஆத்திரப்படுத்தியது. இஸ்ரேல் மீது நேரடியாக ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்க எங்கு அடுத்த உலகப் போர் வெடிக்குமோ என்ற அச்சம் உலகெங்கும் எழுந்தது. இதற்கிடையே ஈரான் ஹிட் லிஸ்டில் சில முக்கிய இஸ்ரேல் தலைவர்களின் பெயர்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இஸ்ரேல் நாட்டின் டாப் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் ஒரு ஹிட் லிடஸ்ட்டை உருவாக்கியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரின் பெயர்களும் இந்த ஹிட் லிஸ்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையா: இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஹிட் லிஸ்ட் தொடர்பாக இதுவரை ஈரான் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. இருப்பினும், இந்த ஹிட் லிஸ்ட் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட டாப் தலைவர்கள் ஈரானின் ஹிட் லிஸ்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே பலரும் கூறுகின்றனர்.

காரணங்கள்: குறிப்பாக இந்த லிஸ்டில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் பெயர் உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவுக்கு செல்லும் அனைத்து சரக்குகளையும் முடக்க இவர் தான் உத்தரவிட்டிருந்தார். இதனால் காசா மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் உருவானது. அதன் பிறகு இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டு மழை பொழிந்தன. இதற்கு முழுக்க முழுக்க கேலன்ட் தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அவரை பாலஸ்தீனியர்களை பயங்கரமான விலக்கு என்றே விமர்சித்தனர்.

ஈரான் நாட்டில் தற்போது உட்சபட்ச தலைவராக அலி கமேனியின் அதிகாரங்களை காலி செய்ய இஸ்ரேல் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நேரடி பதிலடியாகவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பெயரை ஹிட் லிஸ்டில் முதலில் ஈரான் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் கொன்று வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த லிஸ்டை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வாய்ப்பு இல்லை: இருப்பினும், தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இஸ்ரேல் மீது அல்லது இஸ்ரேல் தலைவர்கள் மீது நேரடியாக இந்தளவுக்குத் தீவிர தாக்குதலை ஈரான் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் மோதல் என்பது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைக்க ஆர்வம் காட்டுகின்றன.
Share on:

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு சிக்கல்! சுப்ரீம் கோர்டில் புது மனு..


தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு உச்ச நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். எனவே மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என முதல்வர் மு.க ஸ்டாலினும் நெகிழ்ச்சி பட தெரிவித்து இருந்தார்.

தற்போது செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ள நிலையில், அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் உள்ளதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார்.

கேசி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு ஜாமீன் பெற்றார். ஆனால் மீண்டும் அமைச்சரான காரணத்தினால் அவர் சாட்சியை கலைப்பார், அதனால் இவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஜாமினில் வெளியே வந்த பிறகு ஏற்படுத்திய ஆரவாரங்களும், மு.க ஸ்டாலினின் அபரிமிதமான அன்பும் செந்தில் பாலாஜிக்கு பாதகமாக அமையலாம். மேலும் தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற முனைப்புகள், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்கிற நோக்கம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை ஹைகோர்ட்டிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது விசாரிக்கும் அமர்வுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share on:

திமுகபோல அதிமுகவையும் குடும்பக் கட்சியாக மாற்ற பார்க்கிறீர்களா.. எடப்பாடி மீது பாயும் கே.சி.பழனிசாமி


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தற்போது திமுக அமைச்சரவை மாற்றம், உதயநிதி துணை முதல்வர் விவகாரம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் திமுகவை போல, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, குடும்ப கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார் என கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக அமைச்சரவை மாற்றம் அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அதற்காக தான் உதயநிதியை அவசர அவசரமாக, துணை முதல்வராக நியமித்துள்ளதாக தகவல் வெளியானது. இப்போதிருந்தே 2026 சட்டசபை தேர்தல் களம், விஜய் VS உதய் என்று தான் இருக்கும் என்று விவாதமும் நடக்கிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பியும், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவருமான கே.சி. பழனிசாமி தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “அரசியல் களத்தை 2018ம் இருந்து தற்போது வரை திமுக சித்தாந்த ரீதியில் இந்துத்துவாக்கும், திராவிடத்துக்குமானதாக முன்னெடுத்து வருகிறது. அதனால் அதிமுகவின் வெற்றி தோல்வி பாஜகவை மையமாக கொண்டு அமைந்தது.

தற்போதைய அமைச்சரவை மாற்றம் சித்தாந்த அடிப்படையில் திமுக VS பாஜக என்று ஒரு புறமும், மறுபுறம் தனிப்பட்ட ஆளுமைகளாக உதயநிதி VS விஜய் என கட்டமைக்க முயற்சிக்கிறது. அதிலும் விஜய் பெறுகிற வாக்குகளில் சுமார் 65% அதிமுக வாக்குகளே. அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் ஒரு ஆளுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுக என்கிற கட்சியின் பலத்தையும், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை சின்னம் இவற்றை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆனால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது எந்த சேதாரமும் இல்லாமல் எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த, அதிமுக ஒற்றுமையோடு வலிமையோடு ஒன்றுபட்ட அதிமுகவாக பரிணமிக்க வேண்டும் என்பதுதான். திமுக இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலமாக 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு தன்னை முழுமையாக முன்னிறுத்திக் கொண்டுள்ளது.

இன்றைய சூழலில் ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தாலும் கூட கடுமையான திட்டமிடலும், உழைப்பும், பிரசார யுக்திகளும், கூட்டணி பலம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். வலிமையான ஒன்றுபட்ட அதிமுக கட்டமைக்கப்பட்டால் மட்டுமே மற்றவர்கள் அதிமுகவின் கூட்டணிக்கு வர விரும்புவார்கள்.

திமுக, பிரதமரளவில் பேச்சுவார்த்தை நடத்தி தன்னை தற்காத்துக் கொண்டது என்பது, ஸ்டாலினின் சமீபத்திய டெல்லி பயணம் உணர்த்துகிறது. ஆனால் தங்களை தற்காத்துக் கொள்ள திமுகவோடு மறைமுக ஒப்பந்த அரசியலை மேற்கொண்ட எடப்பாடியும் அவரது முன்னாள் அமைச்சர்களும் இன்றைக்கு திமுக வளையத்துக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். இதனால் அதிமுகவும் எழுச்சியின்றி காணப்படுகிறது.

ஒருவேளை எடப்பாடி, விஜய் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் அது பலன் தராது. அது அதிமுகவுக்கும், திமுகவுக்குமான போட்டியாக இருக்காது. அது விஜய்க்கும், திமுகவுக்குமான போட்டியாக தான் அமையும். எம்ஜிஆர் கண்ட அதிமுக ஆயிரம் ஆண்டுகள் வலிமையோடு விளங்க வேண்டும், ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னது போல 100 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக சட்டமன்றத்தில் விளங்க வேண்டும்.

75 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆளுங்கட்சியாக பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் பொன்விழா கண்ட அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளால் அதிமுக தொண்டர்களும், விசுவாசிகளும், வாக்காளர்களும், வேதனையுற்று நிற்கிறார்கள்.

மிக மிக சாதாரண அரசியல் புரிதல் உள்ளவர்கள் கூட அதிமுக ஒன்று பட வேண்டும் என்று கருதுகின்றனர்.

அப்படி இருக்கம்போது, நான்காண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி இதை உணராமல் இருக்கிறார். திமுகவைப் போல, தான் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் தன் மகனை உருவாக்க வேண்டும் என்று அதிமுகவை குடும்ப கட்சியாக உருவாக்க முயற்சிக்கிறாரா. அல்லது அகம்பாவத்தின் வெளிப்பாடா. அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொண்டு எங்கள் ஒருங்கிணைப்பு முயற்சிக்கு மேலும் வலிமையான வெளிப்படையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
Share on:

என்கவுண்டர்களுக்கு எதிராக ஹைகோர்ட் சரமாரி கேள்வி.. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு


போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், கூறியிருந்தாவது:- எனது மகன் முருகனை கடந்த 2010 ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை மற்றும் உதவி ஆய்வாளர் தென்னவன், ஏட்டு கணேசன் ஆகியோர் சேர்ந்து சுட்டுக்கொலை செய்தனர்.

இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை (கூடுதல் டிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வு…
Share on:

Continue Reading