கரூர் வீட்டுக்கு வந்தாரா செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்.. சிசிடிவி காட்சியை அலசும் அமலாக்கத்துறை!


8 மாதங்களாக தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூரில் உள்ள வீட்டிற்கு வந்து பெற்றோர்களை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு அவருக்கு அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 250 நாட்களாகவே புழல் சிறையில்தான் இருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியின் ஜாஅதற்குக் காரணம் அவரது சகோதரர் அசோக்தான்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.

அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்? என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அசோக் தலைமறைவாக இருப்பதினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும், தை பொங்கலுக்கும் கூட வீட்டிற்கு போக முடியாமல் புழல் சிறையிலேயே தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.

கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே 26ஆம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.

அசோக்குமார் எங்கே என்று 8 மாதங்களாக தேடி வரும் நிலையில் அவர், கரூர் வீட்டிற்கு வந்து செந்தில் பாலாஜியின் பெற்றோரை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 8 மாதங்களாக தலைமறைவாக உள்ள அசோக், கரூர் வீட்டிற்கு வந்து போனதாக தகவல் தெரியவந்ததை அடுத்து இன்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி 8 மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அசோக் தலைமறைவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அசோக் கரூருக்கு வந்து போனதாக தகவல்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதன் அடிப்படையில்தான் இன்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். அசோக் எங்கே? அவர் எதற்காக கரூருக்கு வந்து சென்றார் என்பதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகளின் தொடர் கேள்வியாக உள்ளது.
Share on:

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை! நிலுவையில் கோரிக்கைகள்.. தொழிற்சங்கங்கள் வலியுறுத்துவது இதுதான்!


போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, பாட்டாளி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், தொழிலாளர்களுக்கு போராட உரிமை இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பொங்கல் பண்டிகையின்போது இந்த போராட்டம் அவசியமா? என்று கேள்வியெழுப்பினர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி மாதம் 7ம் தேதி (இன்று) பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில், இதில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தோழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், “15வது ஊதிய உயர்வு குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்ட போராட்டத்தில் நாங்கள் இறங்காமல் இருக்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கோரிக்கைகள் என்ன?: ஊழியர்களின் எதிர்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ. 13,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. ஊழியர்களின் பணத்தை வைத்து கழகங்களை நடத்தும் கேவலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்றவர்கள் மரணமடைந்தவர்களின் ஓய்வூகால பணிக்காலப் பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை.

அகவிலைப்படி: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்த 90,000 ஓய்வூதியர்கள் வயதான காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்குவோம் என முதலமைச்சரே அறிவித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அப்பீல் செய்துள்ளது அரசு, மற்ற துறை ஊழியர்களைப்போல் மருத்துவக் காப்பீடும் இல்லை, மனிதாபிமானமற்ற முறையில் அரசின் செயல்பாடு உள்ளது.

ஓய்வூதியம்: வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கையின் ஆதாரமே ஓய்வூதியம்தான். ‘இது சலுகை அல்ல உரிமை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்தை ஒன்றிய அரசு பறித்தது. எனவே. 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. 2003க்கு பின் பணியில் சேர்ந்து மரணமடைந்த, பணி ஓய்வுபெற்ற 4000 ஊழியர்களின் குடும்பங்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் வாக்குறுதி அமல்படுத்தப்படவில்லை. எனவே. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஓய்வூதிய உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

வேலை நிறுத்தம்: போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும் பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என அரசிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம். ஊர்வலம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடி பார்த்தோம். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி தீர்ப்பையும் பெற்றோம். போக்குவரத்தில் வேலை நிறுத்தம் என்றால், அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் 2 கோடி தமிழக மக்களின் சிரமங்கள் கடுமையானது என்பதால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை தவிர்த்து வந்தோம். ஆனால், அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
Share on:

‛திடீரென உடைந்த பலகை’.. சென்னையில் ஓடும் அரசு பஸ் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் பயணி.. ஷாக் சம்பவம்!


சென்னையில் மாநகர அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது இருக்கைக்கு அருகே பலகை உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியே பெண் பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி இன்று மதியம் அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் கடைசி இருக்கையில் 27 வயது பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்தார். இந்த பஸ் அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது.

இந்த ஓட்டையின் வழியே பெண் தவறி கீழே விழுந்தார். இந்த வேளையில் அந்த பெண் அலறி துடித்தார். இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டு பெண் மீட்கப்பட்டார். அவர் லேசான காயமடைந்த நிலையில் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து அறிந்தவுடன் அமைந்தகரை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்து ஏற்பட்ட பஸ்சை பார்வையிட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். அதோடு பஸ்சில் பயணித்த பிற பயணிகள் வேறு பஸ்களில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமைந்தகரை பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி மோசடி? My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்!


போனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என ஆசைகாட்டி காட்டி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி வருவதாக மை வி3 நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார் MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த்.

மொபைல் ஆப்பில், விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன MLM மோசடி நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 19ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, MyV3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் அண்மையில் கோவையில் திரண்டனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று, கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் கோவையில் குவிந்தனர். தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.300 கட்டி, ஆப்பில் சேர்ந்து, விளம்பரம் பார்த்தால், தினரி ரூபாய் 4 வங்கி கணக்கில் ஏறும். முதலீட்டு தொகை அதிகரிக்க அதிகரிக்க வருமானமும் அதிகரிக்கும். ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி ஆயுர்வேத கேப்சூல்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்போது விளம்பரம் பார்த்தால் தினசரி ரூ.400 வருமானம் கிடைக்கும். மேலும், நீங்கள் மற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி MyV3 Ads நிறுவனம் லட்சக்கணக்கானோரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக MyV3 Ads எம்.டி சக்தி ஆனந்த் மீது 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக, மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தனது வழக்கறிஞருடன் சென்று ஆஜர் ஆனார் சக்தி ஆனந்த்.

இதற்கிடையே, கோவை MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த் மீது, 16 பேர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய V3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டு தங்களை ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Share on:

மல்லிகையில் மலர்ந்த அறிஞர் அண்ணா : கோவை இளைஞரின் அசத்தல் ஓவியம்.


சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு” என்ற வாசகத்தை நினைவு கூர்ந்து, மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. தமிழ்நாடு இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மேலை நாடுகளுக்கு இணையான கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக வருகின்றது. அதற்கான அடித்தளமிட்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என்றால் மிகையல்ல.

சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவரான அண்ணா, ஒரு தத்துவ ஞானி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒற்றுமை நல்லிணக்கத்தை போதித்த பேரறிஞர் அண்ணா, எதிர் தரப்பின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், மாற்றான் தோட்டத்து மள்ளிகைக்கும் மனம் உண்டு என்றார்.

இன்றளவும் நமக்கு தேவைபடும் இந்த தத்துவத்தை தந்த தத்துவ ஞானியாக போற்றப்படுகின்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில், கோவையை சார்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, மல்லிகை பூவில் அண்ணாவின் ஓவியத்தை வரைந்து மலர் அஞ்சலி செய்துள்ளார். மல்லிகையில் மலர்ந்த அண்ணாவின் முகம் போலவே, அவரின் தத்துவமும் மனிதர்களின் மனங்களில் விசட்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது.

சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

சோதனையின் முடிவில் 3 செல்போன்கள், புத்தகங்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மதிவாணனுக்கு சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
Share on:

கல்வியில் டாப் தமிழ்நாடு! நாமதான் நம் 1; ஆனா சமூகநீதி?


இந்தியாவிலேயே மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47% பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 28.4% ஐ விட அதிகமானதாகும்.

2021-2022 ஆண்டுக்கான GER அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் Aishe (All India Survey on Higher Education) வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிஇஆர் (Gross Enrolment Ratio) அதாவது உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதமானது தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு மாநிலத்தில் 18 முதல் 23 வயதுக்குள்ளாக உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடுவார்கள். அதில் எத்தனைப் பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது அளவிடுவார்கள். அதாவது பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரி படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்? அதைக் கணக்கிடுவதுதான் இந்த Gross Enrolment Ratio. இதன் சுருக்கமாக ஜிஇஆர்.

அப்படி நடத்தப்பட்ட உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை கணக்கெடுப்பில் (2021-22) அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பது நிரூபணமாகி உள்ளது.

2017 -18 ஆண்டுக்கான அறிக்கையின்படி உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 46.2% ஆக இருந்தது. அதே பெண்களின் எண்ணிக்கை 47.7% ஆக இருந்துள்ளது. இந்த நிலை 2019-20க்கான ஆண்டில் மளமளவென உயர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 48.1% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 49.9% ஆக இருந்துள்ளது.

அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாகக் கல்வி கற்பதில் மாணவர்களுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாகப் பல தடைகள் வந்தன. ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 45.4% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 48.6% ஆகவும் இருந்தது.

இந்நிலையில் 2021-22 ஆண்டுக்கான கல்வியாண்டில் மக்கள் தொகை அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேக்கை விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்தக் கல்வியாண்டில் 46.8% மாணவர்களும் 47.3% மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளன என்று ஜிஇஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடங்களில் உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 47.0% ஆந்திரப் பிரதேசம் 36.5% கர்நாடகா 36.2% மகாராஷ்டிரா 35.3% மத்தியப் பிரதேசம் 28.9% ராஜஸ்தான் 28.6% மேற்கு வங்கம் 26.3% உத்திரப் பிரதேசம் 24.1% குஜராத் 24.0% பீகார் 17.1% தமிழ்நாடு 47.0% என்றால் மாணவர்கள் எத்தனை?

அதாவது 2017இல் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, 37,62,200 பேர். பெண்களின் எண்ணிக்கை 35,70,000 பேர். ஆக மொத்தம் அந்த ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,32,200 பேர். இது அப்படியே 2019இல் குறைந்துள்ளது. அந்த ஆண்டில் இரு பாலரும் சேர்த்து உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் 71,82,600 பேர்தான்.

இந்நிலை 2020இல் கொரோனா காரணத்தால் இன்னும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் ஆண்கள் 36,60,800 பேர், பெண்கள் 34,47,000 பேர். ஆக மொத்தம் 71,07,800 பேர். இறுதியாக எடுக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பின்படி உயர்கல்வியில் இணைந்தவர்களின் மொத்த 70,33,000 பேர்தான். இது கடந்த 2017விட மிகக் குறைவு.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தை இந்தக் கல்வியாண்டில் பிடித்திருந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலைமை மோசமாகி உள்ளது.

தமிழக அரசு உயர்கல்வி பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியும் 2021 கல்வியாண்டில் மொத்தம் 34,06,000 பெண்கள்தான் உயர்கல்வியில் இணைந்துள்ளனர். ஆண்களோ 36,27,000 பேர் சேர்ந்துள்ளனர். சமூகநீதியைக் கல்வியில் நிலைநாட்டத் தமிழ்நாடு இன்னும் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது.
Share on:

குஷியில் டாஸ்மாக்.. விலையால் “தள்ளாடுது” மதுபாட்டில்.. கொட்டபோகும் பணம்.. நாளை தமிழக அரசு அறிவிப்பு?


டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு பெருகி வருகிறது. மொத்த நிதி ஆதாரத்தில் 3.ல் ஒரு பங்கு வருமானம், இந்த டாஸ்மாக், மதுக்கடைகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

இந்நிலையில், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த போவதாவும், டாஸ்மாக் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தன.

காரணம், மூலப்பொருட்களின் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.. அதனால்தான், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. மது பாட்டிலுக்கான விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், மதுபானங்களின் புதிய விலை உயர்வு நாளை முதல் அதாவது பிப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்.

அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆஃப் பாட்டில் ரூ.20 அதிகரிக்அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.. பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்வதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்கிறார்கள்.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த, 2022 – 23ல் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை வாயிலாக தமிழக அரசுக்கு 10,401 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்ததாம்.. அதேபோல, மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆக மொத்தம், 44,098 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நாளை முதல் மதுபானம் விரல உயரும் பட்சத்தில், 2400 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கணக்கீடப்படுகிறதாம். இதனால் குடிமகன்கள் கலங்கி போயுள்ளனர்..

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இத்தனைக்கும் டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது.. ஆனாலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி எகிறி கொண்டே போகிறது. ஆக.. இதெல்லாம் பார்த்தால், மதுவிலக்கு என்பது நமக்கு கடைசிவரை கனவுதான் போல??
Share on:

யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி: விளம்பரம் பார்த்தாலே பணமோ பணம் கோவை நிறுவனம் மீது போலீஸ் வழக்கு: உரிமையாளருக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு!


விளம்பரம் பார்த்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கோவை தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நான் சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக பார்த்து கொண்டிருந்தபோது, அதில் யூ டியூப் ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த விளம்பரத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு தொகைகளை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. அடிப்படை உறுப்பினராக சேர ரூ.360-லிருந்து ரூ.1,21,260ம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் தொகைகளுக்கு ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் ஹெர்பல் பொருட்கள் (இந்த பொருட்களை நிறுவனத்தின் உரிமையாளர் முறையான அனுமதியின்றி தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது) வழங்கப்படும்.

அவ்வாறு சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ் மேலும் புது நபர்களை அறிமுகப்படுத்தும்போது அவருக்கு ஏற்கனவே இருக்கும் உறுப்பினரில் இருந்து பதவி உயர்வு கொடுத்தும், புதிதாக சேரும் நபர்கள் கட்டும் தொகைக்கு ஏற்பவும், தினமும் விளம்பரம் பார்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று பொதுமக்களுக்கு பேராசையை தூண்டும் வண்ணம் அந்த விளம்பரம் இருந்தது. அந்த கேப்ஸ்யூலின் தரம் என்ன? என்பதைப் பற்றியோ, அவ்வளவு பெருந்தொகைக்கு வாங்கப்படும் அந்த ஆயுர்வேத பொருட்களை ஒரு சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும்? என்ற சிந்தனையோ இல்லாமல் அதிக வருமானம் பெற வேண்டி அவற்றை வாங்க பொதுமக்கள் தூண்டப்படுகிறார்கள்.

அவ்வாறு பெருந்தொகை கட்டி சேரும் நபர்களுக்கு விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில் எந்தவித சாத்திய கூறும் இருப்பதாக தெரியவில்லை. விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக விளம்பரப்படுத்துபவர்கள் மேற்கண்ட ஸ்கீமில் சேருபவர்களுக்கு வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுப்பார்கள் என்ற எந்த ஒரு விபரமும் அவர்களது இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்காமல் பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே கெட்ட நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுப்பது தவறு என்று தெரிந்தும் தருவது சட்டத்திற்கு புறம்பானது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் உறுப்பினராகும் நபர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு பல நிலைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் உறுப்பினராக பெரும் தொகையை செலுத்தி சேர்த்து விடவும் தூண்டப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஆசை காட்டி, மருத்துவ துறையால் பரிந்துரைக்கப்படாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பொருட்களை பொதுமக்களுக்கு கொடுப்பதாக ஏமாற்றி பெரும் தொகையை வசூலிக்கின்றனர். அந்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தமக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று கூட வேண்டும் என யூ டியூபில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இதையடுத்து கோவை நீலாம்பூர் எல்.அண்டு.டி பைபாஸ் அருகே நேற்று தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்டனர்.

அவர்கள் பொய் புகாரின் பேரில், நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களிடம் போலீசாரும் நிறுவனத்தின் உரிமையாளரும் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிகிறது. கோவையில் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Share on:

பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பா? – முடியவே முடியாது.. DVAC-க்கு அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!


திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பொன்முடி. இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் விசாரனையில் இருந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொன்முடி தரப்பு வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது என்று தீர்ப்பளித்த…
Share on:

Continue Reading