
1 லட்சம் அதிமுக தொண்டர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்


அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்,ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த 2022-ல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதிமுக விதிகளை மாற்றியமைத்தார்.
கட்சியிலிருந்து தொடர்ந்து காரணமின்றி உறுப்பினர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாக பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.
அதிமுக கட்சியின் சுய அமைப்பை இபிஎஸ் படிப்படியாக மாற்றியமைத்து மதவாத அரசியலுக்கு ஆதரவாக செயல்பட துவங்கியதன் விளைவு, தமிழகத்தில் அதிமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுது,பாஜக அரசியலை கடுமையாக விமர்சித்து வந்தார்.பிரதமர் மோடி தமிழகத்தில் உள்நுழைய பல்வேறு எதிர்ப்பலைகள் ஓங்கி இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பை தவிடு …
அதிமுகவை சீண்டும் அண்ணாமலை!!
பாஜக கூட்டணி தேவையா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக வெறுப்பாக எழுந்துள்ளது.
சமீபத்தில் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை வெளியிட்டு ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என பேசினார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை பேசியுள்ளார்.
ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன் என்ற அண்ணாமலை அதிமுகவையும் மறைமுகமாக சீண்டியுள்ளார். ஒரு கருத்தை எதிர்க்கிறோம் என்றால் அதன் அடிப்படையை எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசப்போவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.
உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி…
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை என்ன ஆனது?
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.திடீரென இறந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலராலும் சந்தேகிக்கப்பட்டது.அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், அதில் தொடர்புடைய “சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனப்பேசினார்.தொடர்ந்து ஓபிஎஸ் கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதமும் இருந்தார்.
மத்திய அரசின் துணையுடன் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த ஓபிஎஸ் அதிமுகவின் துணை முதலமைச்சரானார்.ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணையை தீவிரப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு…
அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படாமலே பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரை தொடர்ந்து,எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளிந்திருந்தார்.பொதுச்செயலாளர் வழக்குகளில் இபிஎஸ் வெற்றி பெற்றாலும் இறுதியாக,எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.
திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்று தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தரவில்லை.திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் ஏற்கும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு அளித்திருந்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு …
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்து தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என ராம்குமார் ஆதித்தன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தார்.
இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை…
ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் 400 ஒட்டுனர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு.
சென்னை,கும்பகோணம், திருச்சி உட்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கும் ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 18% ஜிஎஸ்டி வரியுடன் 533 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும்,12 மாத கால பணி அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஓட்டுநர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கும் நிலையில்,கடந்த மாதம் அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து டெண்டர் விட்டது.தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமனம் என தொடர்ந்து திமுக ஆட்சியில்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுகவில் யார் தலைமை என்ற விவாதமும் போட்டியும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்றம் இன்று காலை இபிஎஸ் தலைமையில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் தர்மயுத்தம்:<br>ஓபிஎஸ் -இபிஎஸ் யுத்தத்தில் இபிஎஸ் வெற்றி பெற்றதாக அவரது தரப்பினர் பெருமகிழ்ச்சியடைந்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.இந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு,தனக்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக,எடுக்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.பொதுக்குழு மூலம் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக…

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு வேட்பாளராக போட்டியிடுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளைகளில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யார் வேட்பாளர் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.நேற்றுன் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்கள் சற்று தளர்வடைந்திருக்கிறது.ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்றிருக்கிறார்.ஊழலாட்சி திமுகவை தோற்கடிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில், ஓபிஎஸ் கழகத்திற்காக இம்முடிவை எடுத்திருக்கிறார்.ஓபிஎஸ்- ன் இம்முடிவு “இரட்டை இலை” சின்னத்தை காப்பாற்றியிருக்கிறது.மேலும் பொய் பிரச்சாரங்கள்…

இரட்டை இலை சின்னத்திற்காக அவசர அவசரமாக மனு அளித்த இபிஎஸ்!!எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு அளித்திருக்கிறார்.இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்:
ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல்…