10 நாள் கெடு.. ADMKவில் இருந்து நீக்கப்படுவாரா செங்கோட்டையன்?
10 நாளில் EPS பதவி போகும்? செங்கோட்டையன் கெடுவின் அதிர்ச்சி பின்னணி!
“அண்ணாமலை அசௌகரியமா இருக்காரு” Twist ஆக பேசிய KC பழனிசாமி!
“அண்ணாமலை அசௌகரியமா இருக்காரு” Twist ஆக பேசிய KC பழனிசாமி!
News 18 சொல்லதிகாரம் நேர்காணல் நிகழ்ச்சியில் திரு.கே.சி பழனிசாமி
“தேதி குறிச்சாச்சு, அதிமுகவின் கிளைமேக்ஸ் செங்கோட்டையன்”
செங்கோட்டையன் வெளியிடப் போகும் அறிவிப்பு என்ன? அதிமுகவில் மீண்டும் வெடித்த பிரச்சனை!

எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிர்ப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி மோதல். சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் செங்கோட்டையனுடைய பெயர் அடிபட்டது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைவதற்கு முன் செங்கோட்டையன் அடிக்கடி டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஆனால் கூட்டணி அமைந்த பின் செங்கோட்டையன் அமையதியாகவே இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் இந்த சூழலில் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டல அரசியல் முக்கியமானவராக திகழும் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. உட்கட்சி பிரச்சனை வெடிக்க போகிறதோ என்ற அச்சமும் அதிமுகவினரிடம் பரவலாக காணப்படுகிறது.
இதற்கு பின்னால் பாஜக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டா அல்லது அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான யுக்தியா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
சரியான நேரத்தில்! இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா! பார்சல் அனுப்பப்படும் பயங்கர ஆயுதம்! பாகிஸ்தான் காலி?

இந்தியாவிடம் அதிநவீன R-37M ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ஆலோசனைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
R-37M ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் வேகத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது இது. இது வானத்தில் விமானம் மூலம் பூமியில் உள்ள இலக்குகளை தாக்க கூடியது. இது 300-400 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதாக சென்று தாக்கும் திறன் கொண்டது. மேக் 6 வேகத்தில் செல்ல கூடியது. அதாவது 1 மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.
இதனால் போர் சமயத்தில்.. வானத்தில் இருந்து R-37M ஏவப்படும் பட்சத்தில், அந்த ஏவுகணைகளை தடுப்பது மிகவும் கடினம். அதிலும் எதிரி நாட்டு போர் விமானங்களை குறி வைத்தால், அந்த போர் விமானங்கள் இதில் இருந்து தப்பித்து செல்ல முடியாத சூழல் ஏற்படும். விமானப்படையில் பாகிஸ்தானை விட கூடுதல் பலம் பெற இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இந்த முடிவை ரஷ்யா எடுத்துள்ளது.
ரஷ்யாவின் விம்பல் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட R-37M ஏவுகணை வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் (AWACS), டேங்கர் விமானங்கள், எதிரி நாட்டு தீவிரவாத மையங்கள் , தளவாடங்கள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளை எளிதாக தாக்கி அழிக்க முடியும்.
இப்படிப்பட்ட அதி அதிநவீன R-37M ஏவுகணைகளை இந்தியாவிடம் விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுடன் ஆலோசனைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இது 510 கிலோ எடை கொண்டது. அதில் கூடுதலாக வெடிபொருட்களை சேர்க்கும் பட்சத்தில் அதன் எடை 60 கிலோ மேலும் உயரும். ரஷ்யாவின் Su-30, Su-35, Su-57, MiG-31BM, 272 Su-30MKI, MiG-35, போன்ற போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். ரஷ்யாவின் பல்வேறு மிக், சுகோய் விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது.
இந்த நிலையில்தான் இந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. அதேபோல் இந்தியாவிடம் எஸ் . 400 போன்ற சிறப்பான அதிநவீன ஏவுகணை மறிப்பு சிஸ்டம் இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் சில புதிய ஏவுகணை மறிப்பு சிஸ்டம்களை மற்றும் ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது. முக்கியமாக ஸ்டெல்த் விமானங்களை கூட கண்டுபிடிக்கும் ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய ரஷ்யா அரசாங்கத்திற்கு இடையேயான (G2G) ஒப்பந்தத்தின் மூலம் மேம்பட்ட ஓவர்-தி-ஹாரிஸன் (OTH) ரேடார் அமைப்பை சேர்ந்த “கன்டெய்னர்-S” ரேடார்களை, குறிப்பாக 29B6 “கன்டெய்னர்” ரேடாரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் மீண்டும் தொடங்கியுள்ளன. ஸ்டெல்த் விமானங்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்த ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிநவீன ரஷ்ய OTH ரேடார் அமைப்பான Container-S ரேடார், நீண்ட தூர வான்வெளி கண்காணிப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை கண்டறிதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கண்டறிதல் வரம்பைக் கொண்ட இந்த ரேடார் இந்திய வான்பரப்பை இரும்பு போல பாதுகாக்கும்.
வழக்கமான ரேடார் அமைப்புகள் கண்டுபிடிக்க முடியாத தூரங்கள் மற்றும் உயரங்களில் கூட இதனால் ரேடார் கதிர்களை செலுத்த முடியும். இது ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. ரஷ்யாவின் மொர்டோவியாவில் உள்ள கோவில்கினோ அருகே அமைக்கப்பட்டு உள்ள முதல் Container-S ரேடார், டிசம்பர் 2013 இல் செயல்பாட்டுக்கு வந்தது. 2019 இல் உக்ரைன் போரில் ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத்தான் இந்தியா வாங்க உள்ளது. கண்டெய்னர்-எஸ் ரேடார், அல்லது 2986, என்பது உயர் அதிர்வெண் (HF) பேண்டில் இயங்கும் ஒரு OTH ரேடார் ஆகும், இது மேற்பரப்பு அலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால் எந்த ஒரு விமானத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் வான்வழி இலக்குகளைக் கண்டறிந்து, சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் தலைக்கு மேல் கத்தி.. டாஸ்மாக் விசாரணைக்கே தடை! தம்பிகளுக்கு இல்லை! தீர்ப்பை பாருங்க

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இந்த நிலையில் வழக்கை தொடுத்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டும் தான் உச்ச நீதிமன்றம் தடையாணையில் கூறியுள்ளதாக கூறி இருக்கிறார் அதிமுக வழக்கறிஞர் இன்பத்துரை.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, டாஸ்மாக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
முன்னதாக, டாஸ்மாக் மேலான இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ஐ அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் ரத்தீஷுக்கும் விசாகன் ஐஏஎஸ்-க்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆவணங்களும் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் டாஸ்மாக் மூலம் வந்த முறைகேடான பணத்தை ஆகாஷ் பாஸ்கரன் திரைத்துறையில் முறையீடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த விசாரணையும் தடைபட்டது போல பிம்பம் உருவாக்கப்படுவதாகவும், ஆனால் உண்மை அப்படி அல்ல என விவரித்து இருக்கிறார் அதிமுக வழக்கறிஞரான இன்பதுரை.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பதிவிட்டு இருக்கும் அவர்,” அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தொடர்பான ஆணை அப்லோடு செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கை தாக்கல் செய்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை புதிய சோதனையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று மட்டும் தான் உச்ச நீதிமன்ற தடை ஆணை உள்ளது. தம்பிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அல்லவே? என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதாவது அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியதாகவும் அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தான் டாஸ்மாக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் மீதான விசாரணைக்கு தடை இல்லை என கூறி இருக்கிறார்.
ஏற்கனவே ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அமலாக்கத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்கிறார். மேலும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த சினிமா படங்களின் நாயகர்கள், நடிகர், நடிகைகளையும் விசாரிக்கலாம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
நீலகிரி ரெட் அலர்ட்.. களமிறங்கிய பேரிடர் மீட்புப் படை.. சுற்றுலா பகுதிகளுக்கு தடை!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ளனர். மேலும் படகு சவாரி, தொட்டப்பெட்டா சிகரம், பைன் பாரஸ்ட் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் முன்கூட்டியே கோடை காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மே 24 ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை மலைப்பகுதி, திருநெல்வேலி மலைப்பகுதி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) ஆகிய இரண்டு நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 27 ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்காக அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் வெள்ள அபாயம் பகுதிகளில் ஆய்வு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 30 பேர் ஊட்டி சென்றுள்ளனர். மொத்தம் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில் தென் மேற்கு பருவமழைக்கான நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ்., மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஊட்டி தலையாட்டு மந்து, நொண்டிமேடு ஆகிய இடங்களில் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் மூன்று நாட்களுக்கு ‘TREK TAMILNADU’ என்ற தலைப்பில் வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ளவும் தடை செய்யப்படுள்ளது. இங்கு காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்
ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் பகுதிகளுக்கு 42 டீம்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இந்த 4 தாலுக்காக்களில் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர். மரங்கள் ஆங்காங்கே விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மரங்களுக்கு அருகே வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ” என்றார்.
அதேபோல சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி நாளை 25ம் தேதி ஒரு நாள் பைன் பாரஸ்ட் மற்றும் தொட்டபெட்டா சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Gpay-யில் லஞ்சம் வாங்கிய ASI.. பாயப்போகும் நடவடிக்கை.. உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சொன்ன தகவல்

‛ஜிபே’ மூலம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் வசந்தா, இளவரசன் உட்பட 3 பேருக்கு எதிராக ஊழல் புகாரை திட்டக்குடி காவல் நிலையத்தில் அளித்திருந்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்யவில்லை.
புகார் மீது விசாரிக்க வேண்டும் என்றால் லஞ்சம் வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.
ஆனால், விஜயலட்சுமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் வேறு வழியின்றி புகார் மீது நடவடிக்கை எடுக்க ஜி பே மூலம் 1500 ரூபாயை காவல் உதவி ஆய்வாளருக்கு விஜயலட்சுமி அனுப்பியுள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
அதில், புகார் மனுவை விசாரித்ததாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர் தரப்பிடமும் பேரம் பேசி புகார் மனுவை முடித்து வைத்துள்ளார்’ என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், திட்டக்குடி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதான புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது, ஜிபே மூலம் பணம் வாங்கிய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!

மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குநர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் ‘ரெய்டு’ நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விசாரணை
அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, ‘டெண்டர்’ ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, பாட்டிலுக்கு, 10 – 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மூவரின் மொபைல் போன்கள், இ – மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.