டெண்டர் என்பதே குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் இவர்கள் முன்கூட்டியே சந்தை விலையை விட மிக அதிகமாக தொகையை இறுதி செய்துவிட்டு ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அதே தொகைக்கு டெண்டர் கொடுக்க வைப்பது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.
இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட 400 கோடி இழப்புக்கு யார் பொறுப்பு? முதல்வர் ஸ்டாலின் அவர்களா? அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களா? ராஜேஷ் லக்கானி அவர்களா? இந்த மோசடியை செய்வதற்காகவே காசி என்ற நபரை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்தது யார்? அவர் தினமும் அலுவலகம் செல்லாமல் அமைச்சர் வீட்டுக்கு சென்று என்ன செட்டிங் செய்தார்?
பணியில் இல்லாத அதிகாரி பெயரில் கட்டட அனுமதிக்கான கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது!
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ வில், கட்டுமான திட்ட பணிகள், “ஆன்லைன்” முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த 2022 மே மாதம் அமலுக்குவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நிலை அதிகாரியும் தங்கள் கருத்தையும், ஒப்புதலையும் “டிஜிட்டல்” முறையில் பதிவிடவேண்டும்.
இந்த நிலையில் ஜெயந்தா, சரவணன் தங்களது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க பணியில் இருந்து செப்டம்பர் 2022 விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர்,டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 வழங்கப்பட்ட கட்டட அனுமதி கடிதங்களில் ஜெயந்தாவின் “டிஜிட்டல் கையெழுத்து” இடம்பெற்றுள்ளது.
நீண்ட விடுமுறையில் சென்ற ஒரு அலுவலர் எப்படி அதிகாரப்பூர்வ கடிதங்களில் கையெழுத்திட முடியும்?
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓபி ரவீந்திரநாத். தற்போது இவர் ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் அதிமுக சார்பில் மக்களவைக்கு சென்ற ஒரே ஒரு உறுப்பினர் அவர் மட்டும்தான்.
இந்த நிலையில் இவர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறி அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் இன்று அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் என்ற கால நிர்ணயம் இருக்கிற பொழுது. அந்த வழக்கின் தீர்ப்பு ஏன் குறிப்பிட்ட காலத்திற்குள் (சுமார் 90 நாட்களுக்குள்) வழங்கப்பட கூடாது. தாமதிக்கக்ப்பட்ட தீர்ப்புகளால் எந்தவித பலனும் இல்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம் ஒரு பிரச்சனையும் இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது.பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டதுசெவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை 3 துறை மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்
மதுரை திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் விமாலா. இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஜனார்த்தனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனக்கு எதிராக திலகர் திடல் காவல் நிலையத்தில் என் மனைவி வரதட்சணை புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் நான் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். புகார் தொடர்பாக என்னிடம் முதற்கட்ட விசாரணை நடத்தாமல் என்னை கைது செய்து காவல் ஆய்வாளர் சிறையில் அடைத்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றி உத்தரவிட்டு இருக்கிறது.
அந்த உத்தரவை காவல் ஆய்வாளர் விமலா பின்பற்றவில்லை. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் விமலா நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டு தமிழ்நாடு காவல் மகளிர் பிரிவு பொன்விழாவை கொண்டாடுகிறது. கடந்த 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பிரிவில் ஆரம்பத்தில் ஒரு சார்பு ஆய்வாளரும், 20 காவலர்களும் இருந்தனர். 1992 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இன்று 222 மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இதில் 35,359 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைகளின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளாது. இதுகுறித்து டிஜிபியும் பதில் மனுவை தாக்கல் செய்தார்
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் இயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது. அவசியம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதைவிட மேலானது. அதன் உத்தரவை போலீஸ் பின்பற்ற வேண்டும். பெண்களை காக்கும் கேடயமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் இடமாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பார்க்கப்பட்டன. ஆனால், பணம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் கைது செய்து துன்புறுத்தும் இடமாகிவிட்டது.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக்கான இடமாக மாறி உள்ளன. 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள், குழந்தைகள் பயமின்றி, சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் வகையில் தனி விசாரணை அறை, பெண் வழக்கறிஞர், பெண் மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர், பெண்கள் மேம்பாட்டு முகாம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை நிறைவேற்ற உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் விமலா மன்னிப்பு கேட்டு இருப்பதால் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில்.வருமான வரித்துறையினர் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் 4,100 கோடி ரூபாய் மறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அளித்துள்ளனர்.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் 110 கோடி,பத்துஐயிரம் வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்கள் மேலும் வங்கி தொடர்பான 500 கோடி பரிவர்த்தனை விவரங்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உட்பட ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை என தெரியவந்துள்ளது. இது அனைத்தும் யாருடைய பணம்?
திரு கே சி பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் zoom மூலமாக கலந்து கொண்ட கலந்துரையாடலில் கூறியிருப்பதாவது ,ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது .அதேபோல பாஜகவும் இந்த 30 வருடத்தில் அதிகளவு அவப்பெயரை மக்களிடையே சம்பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் .மேலும் கலந்துரையாடலின் பொழுது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் .
மேலும் பாஜக இந்திய அளவில் பெரிய கட்சியாக கூட இருக்கலாம் .ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடையே அவர்களின் ஆட்டம் செல்லாது என்றும்,அண்ணாதிமுகவிற்கு தான் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளது என்றும் ,பாஜக வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்
தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது.
சிறுவர்களை போல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு பலர் அடிமையாகி உள்ளனர். இதில் பணத்தைக் கட்டி விளையாடிய பலர் பணத்தை இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து வருவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்த போதும் இதில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது குறைந்தபாடில்லை.
இதே போல சங்கரன்கோவில் அருகே தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ரம்மியில் பணம் இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது,
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வசிப்பவர் மாரி செல்வம். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையானதாக தெரிகிறது. இவர் அதில் சுமார் 10 லட்சம் வரை இழந்துள்ளார்.
இதன் காரணமாக குடும்பத்தினர் கண்டிக்கவே மன வருத்தத்தில் இருந்த இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து சாலை வரியையும் தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்.
சாலை வரி உயர்த்துவதற்கு முதலில் அனைத்து பகுதிகளிலும் நல்ல தரமான சாலை இருக்கிறதா என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சாலை வரி உயர்வதன் மூலம் சகலமும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை.