திமுக மாவட்ட நிர்வாகி பேச்சால் சர்ச்சை!


காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நாம் எதிர்ப்பது போல் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்றும் அப்போது தான் நம்மை மக்கள் நம்புவார்கள் எனவும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மயிலாடுத்துறை மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேல்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. தனது ஆட்கள் மூலம் கூட்டத்தை முகநூலில் லைவ் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். இது தெரியாமல் பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேல், எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டி பேசணும், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போல் நடிக்கணும் எனக் கூறிவிட்டார். கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பது போல் ராஜ்குமார் எம்.எல்.ஏ. மாயையை உருவாக்கணும் என்று பாடமெல்லாம் எடுத்தார்.

திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. நேற்றுக் கூட சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்தச் சூழலிலும் காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் நிச்சயம் பெற்றுத் தருவோம் எனவும் உறுதிபடப் பேசியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் இவ்வாறான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக நிர்வாகி ஆர்வக்கோளாறில் தேவையற்றதை பேசி கட்சித் தலைமையை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டுள்ளார்.
Share on:

ஆ. ராசாவின் 15 சொத்துகளை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!


திமுக எம்பி ஆ ராசாவின் சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆ ராசாவின் பினாமி நிறுவனம் எனக்கூறி அதன் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி கையகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது. இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதாவது ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க வேண்டி பணம் வாங்கியதாகவும்,தனை அவர் பினாமி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

வசமாக சிக்கும் ஜெகத்ரட்சகன்!


திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 7 வெளிநாட்டு கை கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி ரெய்டு ஆக்டோபஸ் கரங்களாக நீண்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.

முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், புதுச்சேரியில் அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து இரண்டு கருப்பு பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் இருந்து கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதே போல சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share on:

கையோடு வரும் புது சாலை.. கரூர் அவலம்!


கரூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை, போட்ட உடனே கையோடு பெயர்த்து வரும் வகையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை குறித்து அப்பகுதி மக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார்ச் சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on:

திமுக MP வீட்டிற்கு வந்த புதிய வருமான வரித் துறை டீம்!


திமுக எம்பி ஜெகதன்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்த புதிதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த போது அவர் சிரித்தபடியே அவர்களை வரவேற்றார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை இன்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகளில் ஆயுதப்படை பாதுகாப்புடன் நேற்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திநகரில் உள்ள நட்சத்திர விடுதி, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அது போல் படப்பையில் உள்ள கல்லூரி பணியாளர் ஒருவரி வீட்டு பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது.

மேலும் அவருடைய வீட்டில் புதிதாக பூசப்பட்ட சுவற்றில் ஏதேனும் அறை இருக்கிறதா என தட்டி பார்த்தனர். மேலும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்டலம் சவீதா கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 10 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகத்ரட்சகன் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என சொல்லப்படுகிறது.
Share on:

கமிஷன் தராததால் புல்டோசரில் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை.


உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவுக்கு கமிஷன் தரவில்லை என்பதற்காக அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததார் அளித்த புகாரின் பேரின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவாகரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்த நிலையில், உடனடியாக சாலையை தேசம் செய்தவரிகளிடம் முழு செலவுக்கான தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜகான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைத்து வரும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐந்து சதவீத கமிஷன் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நபர்களுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் தரவில்லையாம். ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்த புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சாலையை சேதப்படுத்தியவர்கள் பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழு தொகையையும் வசூலிக்க உத்தரவிட்டார்.

பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் கடந்த அக்டோபர் 3ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.

சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share on:

இனி சட்டவிரோதமாக பேனர் வைத்தால் பெரும் சிக்கல்..


சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் கூறப்படுவதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் கல்வெட்டு புறக்கணிப்பு!


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன

கோவை தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரஸ்வதி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அரசு பாடலாக பிரகடனம் செய்திருந்தும் இந்த நிகழ்ச்சியில் அப்பாடல் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டது. வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்வெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளையில் தமிழ் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது. கடந்த ஆண்டும் கோவை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், வங்கியில் கல்வெட்டுகளைத் திறந்து வைத்த உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அதிகாரிகளை அழைத்து எந்த ஊரில் நீங்கள் கிளைகள் திறந்தாலும் அந்த ஊர் மொழியில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் முன்னிலையிதான் கூறினார்.

கல்லூரியின் நிகழ்ச்சி நிரல் எனக்கு முன்னரே தெரியாது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு தெரியும். நிகழ்ச்சியில் நேரடியாக கலந்ததால் ஒருவேளை எனக்கு டக்கென தோணலை. நீங்க சொன்னதுக்கு பிறகுதான் தோணுது.. ஏனெனில் நிறைய புரோகிராம் காலையில் இருந்து..எந்த புரோகிராமில் என்ன பாடினாங்கன்னு கொஞ்சம் தெரியலை என்றார்.
Share on:

40 தொகுதிகளிலும் வென்று யார் பிரதமர் என்று நாங்கள் நிர்ணயம் செய்வோம்” என்ற பிரச்சாரம் கை கொடுக்குமா அதிமுக?


பாராளுமன்ற என்பது மோடி பிரதமராக வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று தீர்மானிக்க. இதில் அதிமுகவிற்கு “40 தொகுதிகளிலும் வென்று யார் பிரதமர் என்று நாங்கள் நிர்ணயம் செய்வோம்” என்ற பிரச்சாரம் கை கொடுக்குமா மாறாக எதுமே இல்லமால் பிஜு பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போல என்றால் மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதாகிவிடும் அல்லவா? இது பாஜகவிற்கு “B Team” போல் செயல்படுவதாகிவிடும்.

இந்த நிலைப்பாட்டை “மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கிற தந்திரம்” என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் அதிமுகவிற்கு பாஜக எதிர்ப்பு வாக்குகளும் திமுக எதிர்ப்பு வாக்குகளும் முக்கியம்.இவற்றை கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக யாரும் உள்நோக்கம் கற்பிக்காத வகையில் முன்வைக்க வேண்டும் – கே.சி.பழனிசாமி
Share on:

பிடி கொடுக்காத அதிமுக.. அடுத்து என்ன? அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

டெல்லி: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. வரும் 2024 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது. அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கு அதிமுக பிடி கொடுக்க மறுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணமாலை, தமிழக பாஜக தலைவர் என்பது வெங்காயம் போன்றது என பரபரப்பாக பேட்டி…

Share on:

Continue Reading