
இன்று போலவே, 2014 ஆம் ஆண்டிலும் இதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவினர், தமிழகத்தில் ராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 வது தினம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா ஆகியவற்றை தமிழகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 9.11.2014 நாளன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்து தமிழக அரசிடம் அனுமதி கோரியது.
அன்றைய முதல்வர் ஜெ. அவர்களின் அரசு எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என மறுத்தது.. போலீஸ் சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை நகர போலீஸ் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், போலீசார் அனுமதி மறுத்தனர். சென்னையில், அனுமதி கோரும் மனு மீது, நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், தற்போது போலவே…