அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிரச்சினையில்லை!


பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அண்ணாமலை தலைவரானதில் இருந்தே தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது அண்ணாமலை பேசும் பேச்சுக்கள் அதிமுக பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும். அப்படித்தான் ஜெயலலிதா பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அண்ணாமலை கூறியது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்று கூறினார் ஜெயக்குமார். கடந்த 2 நாட்களாகவே அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை வசைபாடினர். எடப்பாடி பழனிச்சாமியோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்தார். ஆனால் பாஜகவை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியானது.

எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்றும் மோடிதான் பிரதமர் என்றும் கூறினார் செல்லூர் ராஜூ. அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, மோடியை பிரதமராக ஏற்கிறது அதிமுக. பிறகு பிரச்சனை . தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக – பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும். பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன்.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதே இலக்கு. எந்த கட்சிக்கும் பாஜக போட்டி இல்லை. அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொன்ன நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை
Share on:

மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ 2029-ல் தான் அமல்?


வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. “மகளிர் இடஒதுக்கீடு” பெருமை பாஜகவுக்குதான் சேரும் என அக்கட்சியினர் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர்- இது நடைமுறைக்கு வர இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் மாநிலங்களின் சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டிலும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்து வலியுறுத்தப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் முதலில் 33% எனவும் பின்னர் 50% ஆகவும் உயர்த்தியது மகாராஷ்டிரா. இதன் பின்னர் நாடு தழுவிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அமல்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இம்மசோதாவை ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

புதிய கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடியின் அறிமுக உரையில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்தே நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, திருத்தங்களுக்காக மீண்டும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டாலும் அடிப்படையில் இது 2029-ம் ஆண்டளவில்தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஏனெனில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னர்தான் மகளிர் இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வரும் என்கிறது மத்திய பாஜக அரசின் மசோதா.

2026/2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதுதான் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலாகும்.

தற்போதைய மத்திய அரசின் 33% இடஒதுக்கீடு மசோதா, எஸ்சி- எஸ்டி- தலித்/பழங்குடி பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. எங்கள் கிராமத்து பெண்களின் (ஓபிசி) பிரதிநிதிகளாக எப்படி உயர்ஜாதி பெண்களைப் பார்க்க முடியும்? ஆகையால் ஓபிசி பெண்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு அவசியம் என்ற சமாஜ்வாதி, ஆர்ஜேடி ஆகியவற்றின் குரல் எடுபடாமல் இருக்கிறது. அத்துடன் தற்போதைய மசோதா ஒரு தெளிவானதாக இல்லாமல் மேம்போக்கானதாக இருக்கிறது.. இது நடைமுறைக்கு வரக் கூடியதான ஒரு மசோதாவா? என்கிற சந்தேகத்தையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
Share on:

மணல்” ரெய்டு ஓவர்.. அடுத்த டார்கெட் “இதுதான்”


தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தின

தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப் பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த ரெய்டுக்கு பின் உண்மையில் குறி வைக்கப்பட்டது யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இரண்டு அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர்.

திமுகவின் நிதி பின்புலத்தை முடக்குவதே இந்த ரெய்டின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர். டாஸ்மாக் டெண்டர் எடுத்தவர்கள், வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி டெண்டர் பெற்றவர்கள், பார் டெண்டர் பெற்றவர்கள் ஆகியோர் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு மணல் மூலம் பணம் வருகிறது

மணல் ரெய்டுகள் பின்னணியில் கூடவே இருக்கும் இளம் தலைமுறை நிர்வாகிகளின் உளவு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் சீனியர்களை அந்தந்த மாவட்டங்களில் தட்டி வைக்க மத்திய அமைப்புகளுக்கு உளவு தந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் சீனியரக்ள் பலர் இந்த ரெய்டில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர். தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். அதன்பின் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
Share on:

துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது குறைந்தபட்சம் அண்ணாமலையாவது தனித்து நின்று வெற்றிபெற முயற்சிக்கட்டும்!


“ஆலயத்தில் தெய்வநிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல.அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் விழாவைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும்.

பி.டி.ஆர். தேவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘விழாவில் அவரவர் கருத்தைச் சொல்வதற்கு உரிமையுண்டு’ என்றார் அவர். உடனே தேவர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார்.

‘எக்காரணத்தைக் கொண்டும் ஆலயத்தில் யாரும் தெய்வநிந்தனைப் பேச்சு பேசக் கூடாது. முதல் நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்கள் மனதைப் புண்படுத்திவிட்டது. எனவே பொன்விழா நிகழ்ச்சிகளைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும்’ என்றார் அவர்.

அது ஒரு கௌரவப் பிரச்சனையாக மாறியது. தேவர் சொன்னதற்காக விழாவை மாற்றுவதா?ஆடி வீதியில் தான் நடத்துவது என்று வீம்பு செய்யப்பட்டது.

ஆனால் கோவில் நிர்வாகிகள் ஆட்சேபணை தெரிவித்தனர்.அவர்கள் தேவர் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டனர்.மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றப்பட்டன.”

இதற்கு ஆதாரம் அன்றைய பத்திரிக்கை செய்திகளைத் தொகுத்து திரு தராசு ஹ்யாம் அவர்கள் எழுதிய “வீரத்திருமகன்” என்ற புத்தகத்தில் “68” ஆம் பக்கம் இதுபற்றிய விரிவான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க அதிமுக தலைவர்களை விமர்சித்தும் தான் 10 ஆண்டுகளாகத் துப்பாக்கி பிடித்தவன் என்று தேர்தலில் வெற்றிபெறத் துப்பில்லாத அண்ணாமலை பேசுவது ஆணவத்தின் அடையாளம்.துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது குறைந்தபட்சம் அண்ணாமலையாவது தனித்து நின்று வெற்றிபெற முயற்சிக்கட்டும்.
Share on:

சென்னையில் காய்ச்சல் உள்ளவர்களில் 60% பெருக்கு ஃப்ளூ பாதிப்பு!


தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் காய்ச்சலென்று வருபவர்களில் 60% பேருக்கு ப்ளூ இருக்கிறது என தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது வரை 300 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் சமீப நாட்களாக காய்ச்சல் மற்றும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொடர்பான தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த முறை சென்னையில் காய்ச்சலென்று வருபவர்களில் 60% பேருக்கு ஃப்ளூ இருக்கிறது. நடுத்தர வயது மக்களுக்கு இது 6 நாட்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். லேசான காய்ச்சல் இருக்கும். ஆனால் இதே குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ப்ளு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இதற்கான தடுப்பூசிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3 நாட்களுக்க மேல் காய்ச்சல் தொடர்ந்தால் கட்டாயம் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் ப்ளூ பாதிப்பு இருந்து, அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் நிமோனியா பாதிப்பை கூட இது ஏற்படுத்திவிடும்.

அதேபோல டெங்கு தடுப்பு மருந்து குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், “இந்த தடுப்பு மருந்து முழுமையான வீரியத்தில் செயல்படவில்லை. டெங்கு வைரஸில் 4 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இதில் 5 வகைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் வித்தியாசமானது. எனவே இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.
Share on:

எடப்பாடி பழனிசாமி அவர்களின் டெல்லி பயணம் எதை உணர்த்துகிறது?


திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் டெல்லி பயணம் இதற்க்கு முன்பு 2019,2021 கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் சென்னையில் நடைபெற்றது .அதிமுக தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர் .மேலும் அம்மா அவர்களின் காலத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை அவர்களின் போயஸ் இல்லத்தில் தான் நடைபெற்றது .ஆனால் இன்றைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளார்.

ஆனால் தேர்தல் ஆணையம் மாற்று உத்தரவு வரும் வரை அவர்தான் பொதுச்செயலாளராக இருப்பார் என்றும் கூறியுள்ளது அவருக்குள்ள நெருக்கடியைத்தான் காட்டுகிறது .தீடீரென டெல்லி சென்று வழக்கறிஞர்களை பார்க்கும் பொழுது அவருக்கு கொடநாடு வழக்கு ,டெண்டர் வழக்கில் உள்ள நெருக்கடியை தான் காட்டுகிறது .

திமுக சனாதனம் என்ற கருத்தை முன்வைத்து திமுக vs பாஜக என்று தமிழக அரசியலை கட்டமைத்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால் திராவிட கட்சி என்று சொல்லி கொண்டு இருந்த அண்ணாதிமுக இன்று தனது அடையாளத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது 2019ல் திமுக அமைத்த இந்த கட்டமைப்பு இந்த முறை பாஜகவாலும் சேர்ந்து கட்டமைக்கப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணியை அண்ணாதிமுக தொண்டர்களும் வாக்காளர்களும் ஒருபோதும் விரும்பவில்லை. எடப்பாடி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை தனக்கான தேர்தல் இல்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் நமக்கான தேர்தல் என்று நினைத்து கொண்டிருக்கிறார் .நமக்கு ஒரு 30 தொகுதிகள் அமைந்தும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கூட நமக்கு ஒரு மரியாதை கிடைக்கும் .2004ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த பொழுது அதிமுக தோல்வியை தழுவியது .அது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து ஆட்சியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது .திமுக என்பது எதிரி தான்.ஆனால் அதற்காக பாஜகவுடன் அடகுவைக்க கூடாது.
Share on:

அசுர வேகத்தில் பரவும் டெங்கு.. தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேர் பாதிப்பு


தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 14 வரை 210 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை காலம் தொடங்கும் முன்பாகவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுவன் பலியான நிலையில் புதுச்சேரியில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி’ என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் , மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன

காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை முடிய உடைகளை அணிய வேண்டும்.

“மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது என்றார். இருப்பினும், நேற்று வரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர். இந்த 253-ல், கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர் என்று கூறினார்.

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
Share on:

பணத்தை திருப்பி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!


சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரியை டிக்கெட் இருந்தும் சில குளறுபடிகளால் பார்க்க முடியாமல் வீடு திரும்பிய 400 பேருக்கு பணத்தை திருப்பி செலுத்தினார் இசைப்புயல். கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரி நடத்துவதாக சொல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ACTC Events என்ற நிறுவனம் செய்தது.

அன்றைய தினம் சென்னையில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதே டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு ஒரு நாளில் இசைக் கச்சேரி நடத்தப்படும் என ரகுமான் அறிவித்திருந்தார்.

இந்த இசைக் கச்சேரியானது கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் ஆசை ஆசையாய் குடும்பத்தினருடன் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது டிக்கெட் வைத்திருந்தும் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை,

சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமன்ட் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைனில் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை அந்த நிறுவனம் விற்றதாக சொல்லப்படுகிறது. ரகுமானின் இசையை விட குழந்தைகளின் அழும் குரல் ஆங்காங்கே கேட்டது!

கூட்டத்தினர் வந்து கொண்டே இருந்ததால் பலர் கச்சேரியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், உயிர்தான் முக்கியம் என கருதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டனர்

அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டை சோதிக்காமல் எந்த பிரிவு சொல்கிறார்களோ அந்த பிரிவு இருக்கைக்கு அனுப்பிவிட்டனர்.

இது போன்ற மோசமான இசைக்கச்சேரியை நடத்தவே கூடாது. ஏ.ஆர் ரகுமான் அந்த விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமானோ இசைக் கச்சேரி வந்துவிட்டு பார்க்க முடியாமல் திரும்பியோர் தங்களது டிக்கெட்டுகளின் நகல்களை இணையதள முகவரிக்கு அனுப்பலாம். என்னுடைய குழுவினர் உங்களை தொடர்பு கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்

இசைக் கச்சேரி குளறுபடி தொடர்பாக ஏ.ஆர். ரகுமானுக்கு இதுவரை 4000 பேர் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அனைவருக்கும் பணம் திருப்பி செலுத்தப்படும் என ஏ.ஆர். ரகுமானின் உதவியாளர் செந்தில் வேலன் தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் ரகுமான் ஏன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், விழாவை ஏற்பாடு செய்தவர் மீதுதானே தவறு, அவர்தானே பணத்தை திருப்பி தர வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்

கச்சேரியை பார்க்க முடியாமல் திரும்பியதாக 4000 பேர் ரகுமானுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அவர்களில் 400 பேருக்கு இதுவரை பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share on:

மணல் குவாரிகளில் குடையும் ஈடி! திமுக அரசின் “பிக் பிரதர் நம்பர் 2” டார்கெட்?


அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள், அவருடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்களின் இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்பதுடன் இந்த விவகாரம் முடியவில்லை.. ஆளும் திமுக அரசின் பெருங்கரம் ஒன்றை நோக்கியே இந்த ரெய்டுகள் நகரப் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

இந்த முறை மணல் குவாரிகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

மணல் குவாரிகளை மையமாக வைத்து..:: வேலூர், திருச்சி, நாமக்கல் என மணல் குவாரி சார்ந்த இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகின்றனர். தலைமை செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு போக்கானது செந்தில் பாலாஜி தொடர்புடையதாக தோன்றலாம். ஆனால் இவர்களது டார்கெட் திமுக அரசின் மிகப் பெரும் புள்ளி ஒருவரை நோக்கியதாக நகருவதையே காட்டுகிறது. திமுகவிலும் திமுக அரசிலும் ‘வலதுகரமாக’ இருக்கும் அந்த புள்ளிக்குதான் டார்கெட் பிக்ஸ் செய்திருக்கிறது போல அமலாக்கத்துறை என்கின்றனர்.
Share on:

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்?


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் யார்? காவல் துறையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

காவல்துறை ஆணையரின் தவறுகளை மறைப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டிருக்கிறது. பெருவாரியான மக்கள் ஒரு இடத்தில் திரளுகிறார்கள் என்றால் அதற்குரிய பாதுகாப்பு, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் கடமையா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கடமையா? அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அழிக்கும்போதே காவல் துறை இவை அனைத்தும் பரிசீலித்து அனுமதி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?
Share on: