நகைச்சுவையான பதிவு!

: ஹலோ சார், உங்களுக்கு என்ன வயசாகுது?

: 50.

: உங்க வெயிட்டென்ன, ஹைட்டென்ன?

: 70 கிலோ, 170 செமீ.

: கோவிட் வேக்சின் போட்டுக்கீட்டீங்களா?

: ஆமா, பூஸ்டர் வரைக்கும் போட்டுக்கிட்டேன்.

: சுகர், பிரஷர்ன்னு ஏதாச்சும்?

: இல்ல.

: உங்க ஃபேமிலில யாருக்காச்சும் இதெல்லாம் இருக்கா?

: இல்ல.

: எதாச்சும் சர்ஜரி பண்ணி இருக்கா?

: இல்ல.

: ஏதாச்சும் மெடிக்கல் ஹிஸ்டரி இருக்கா?

: இல்ல.

: கடைசியா எப்ப ஹெல்த் செக்கப் பண்ணீங்க?

: மே மாசத்துல.

: என்ன சொன்னாங்க?

: Absolutely fit. மலையத் தூக்கி என் தோள்ல வச்சா கூட ரெண்டு கிலோமீட்டர் அப்படியே நடப்பேன்.

: எதாச்சும் அலர்ஜி இருக்கா?

: இல்ல…. உங்களுக்கு என்ன வேணும்? நீங்க எந்த ஆஸ்பத்திரில இருந்து கூப்டுறீங்க?

: நான் டாக்டர் எல்லாம் இல்ல. அமலாக்கத்துறை ஆஃபீஸர். உங்க வீட்டுக்கு ரெய்டு வந்திருக்கோம், அதான் மொதல்ல மெடிக்கல் செக்கப் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கதவைத் தொறக்கறீங்களா?

Share on:

Continue Reading

திருப்பூர் மாநகராட்சி துடைப்பம் வாங்க ரூ.440 செலவு: ஆர்டிஐ பதில்


ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 800 துடைப்பக் குச்சிகளை தலா ரூ.440 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது. ஆர்வலர் ஜான் சாமுவேல் தாக்கல் செய்த RTI வினவலுக்குப் பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பதிலின்படி, 6 ஜூன் 2022 அன்று, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிளாஸ்டிக் தொட்டிகள், துடைப்பான் தூரிகைகள், துடைப்பங்கள் உள்ளிட்ட 13 கருவிகளை வாங்குவதற்கு மாநகராட்சி டெண்டர் எடுத்தது.

ஆகஸ்ட் 10, 2022 அன்று, குடிமை அமைப்பு இந்த கருவிகளை ஒரு விற்பனையாளரிடமிருந்து மொத்தம் ரூ. 21.58 லட்சத்தில் வாங்கியது. இதில் கைப்பிடியுடன் கூடிய 800 துடைப்பம் குச்சிகள் ரூ.3.53 லட்சம். ஒவ்வொரு துடைப்பம் கொள்முதல் விலை ரூ.440 என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜான் சாமுவேல் கூறுகையில், “கம்பத்தில் கட்டப்பட்ட துடைப்பத்தின் விலை ரூ. 100 ஆகும். அங்கு நகராட்சி நிர்வாகம் ஒரு துண்டுக்கு ரூ. 440 செலுத்தியது. நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள வியாபாரிகளிடம் இந்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் அதிகாரிகள் அதிக விலைக்கு வாங்கினார்கள். விலை, இது வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ​​டெண்டர் பணியை துவக்கி, உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். நான் RTI வினவலை தாக்கல் செய்தேன் மற்றும் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ​​குடிமை அமைப்பின் உயர் அதிகாரிகள் வாய் திறக்காமல் இருந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறுகையில், “கடந்த ஆண்டு துப்புரவு பணியாளர்களுக்கு டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றேன். ஆனால், பொருட்களின் விலையுடன் தனித்தனியாக பட்டியல் போட்டு பார்க்கிறேன். அனைத்து காலகட்டங்களுக்கான சுகாதார உபகரணங்கள் தொடர்பான டெண்டர் ஆவணங்களும் பிரச்சினையில் ஆராயப்படும்.”

இது எந்த அளவுக்கு உண்மை என்று நிலவரம் தெரியவில்லை.

#Tiruppur #tiruppurdistrict #tiruppursmartvision #smartvision #TiruppurCorporation
Share on:

தமிழக திமுக ஸ்டாலின் அரசின் ஜனநாயக படுகொலை…!


இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ED ,மற்றும் IT அமலாக்கத்துறை , வருவாய்த்துறையைஇந்திய இறையாண்மையை காலில் தூக்கி போட்டு மிதிக்கும் திமுக மு.க.ஸ்டாலின் அரசாங்கத்தை , சட்டசபையை முடக்க வேண்டும். இவர்களின் வன்முறை வெளியாட்டம் ஆரம்பமாகிவிட்டது . இன்றைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் திமுக அதன் கூஜாக்களின் வன்முறை தரமற்ற பேச்சுக்கள் எதிர்கட்சி பேச்சாளர்கள் , திமுகவை விமரிச்சித்த பேச்சாளர்களை பேசவிடாமல் செய்ததை, அதை வேடிக்கை பார்த்து அனுமதித்து ஆதரவு பேச்சு பேசிய நியூஸ் 18 நெறியாளர் , நாலாந்தார சன் நியூஸ் போன்ற சானல்களின் கூலிகள் செயலே சாட்சி. இதற்கு மேல் மத்திய அரசு , உச்சநீதிமன்றம் விட்டால் திமுகவை ஆதரிப்பவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். உள்ளங்கை நெல்லிக்கனியாய் டாஸ்மாக் கொள்ளை : ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிப்பது தமிழகமே அறிந்து விட்டது .

அவர்களின் முன்னாள்நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார் .இந்த கருணாநிதி குடும்பத்து ஆட்சி வரலாறு , தமிழகத்துக்கு 1974-ல் காவிரி நதிநீர் தாரைவார்த்தது, கச்சதீவை தாரைவார்த்தது . இந்தியாவிலேயே ஒரு முதல்அமைச்சர் மீது ஊழல் சர்க்காரியா கமிஷன் அமைத்தது கருணாநிதி அண்டுகோவினர் மீதுதான் . சர்க்கரையை டன் கணக்கில் எறும்பு தின்றுவிட்டது ,கோதுமை காற்றில் அடித்து சென்றுவிட்டது , அரிசி பஞ்சத்தை உருவாக்கியது , பூச்சிமருந்து ஊழல் செய்தது ,மஸ்டர் ரோல் ஊழல் , வீராணம் காண்ட்ரா கட் ஊழல் , கூவம் மணக்கும் ஊழல் , நில அபகரிப்பு , 2 ஜி ஸ்பக்ட்ரம் என்று எண்ணிலடங்கா ஊழல் செய்தது ,7 ஊழல் நிருபணமானது கயவன் கருணாநிதி ஆட்சியில் .நமது தொப்புள்கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றுகிறேன் எல்லோரும் பதுங்குகுழிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்று நம்பி வெளியே வந்த மக்களை கொத்து குண்டு போட்டு கொல்ல துணைபோன எமன் கருணாநிதி இப்படி தமிழகத்துக்கு இனத்துரோகம் செய்த இந்த கும்பலை கேரளாவிலோ ,. ஆந்திராவிலோ , கர்நாடகாவிலோ , இந்தியாவின் இன்னபிற மாநிலங்களில் இப்படிப்பட்டவர்களை, கொலை கொள்ளைகார குடும்பம் , கட்சி இன்று ஆண்டு கொண்டிருக்குமா வெட்ககேடானது, அண்ணாவுக்கு பின் புரட்சித் தலைவர் என்ற புனித தலைவன் இந்த குடும்பத்தை ஒழித்து கட்டி மக்கள் காலடியில் போட்டார். என்றும் வெல்லும் வாக்கையும் , வாய்மையும் கொடுத்து தான் மறைந்தார் .

ஒரு வீடியோ விற்ற திமுக குடும்ப கும்பலால் , வெகுஜன மக்கள் இயக்கத்தை சீரழித்து , தான் என்ற அகங்காரம் கொண்ட ஒருவரால் , அந்த வீடியோ கேசட் கும்பல் ஊழலை வியாபாரமாக மாற்றி, திமுகவை வளரவிட்டு இன்று மக்கள் வரிப்பணம் கொள்ளை வியாபாரமாக மாற்றியதால் தான் தமிழகத்திற்கு , தலைகுனிவு , அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . திமுககாரன் அவன் தலைவன் வழியில் கொலை ,கொள்ளை என்ற நிலையில் இருக்கிறான், ஆனால் அஇஅதிமுக என்ற வெகுஜன மக்கள் சேவை பேரியக்கத்தின் தொடர் வெற்றி மக்கள் சேவையை தோல்வியுற வைத்த ஆணவத்தால் ஆடியவரும் , வீடியோ கேசட் கொள்ளை கும்பலும்தான் தமிழகம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது இனியாவது இருப்பவர்கள் மக்கள் சேவை புரிந்து , புனித தலைவனின் புகழை காப்பாற்றுங்கள்.
Share on:

தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது!


அதிமுக ஆட்சி காலத்தில் 2015ல் நடந்ததற்கு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது, இதே போன்று வேலுமணி,தங்கமணி , ஓ பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி,சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இவர்கள் மீது ஏன் வருமான வரித்துறை,அமலாக்கத்துறை,CBI -யும் நடவடிக்கை எடுக்கவில்லை .

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு பிறகும் கூட வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்? ஊழலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பா?

தற்போதிய அரசியல் திராவிடம் vs இந்துத்துவா என்று அமைக்கப்படுகிறது ஆனால் சித்தாந்த அரசியல் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு ஊழல்வாதிகளா ஊழல் செய்யத்தவர்களா என்று பார்த்து எந்த கட்சியாக இருந்தாலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படவேண்டும்.
Share on:

முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை மிக குறைவு!


முன்னாள் சிறப்பு DGP. திரு.ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அவர் செய்த தவறை கணக்கில் எடுக்கும்பொழுது மிக குறைவு.ஒரு SP அளவு அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடமே இவ்வளவு அத்துமீறல் என்றால் அதற்கு கீழ் நிலையில் உள்ள DSP, Inspector, Sub Inspector நிலை என்ன?

அதனால் தமிழ்நாடு அரசாங்கம் மேல் முறையீடு செய்து அவருக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தரவேண்டும். #HigherPunishment #JusticeMatters @CMOTamilnadu
Share on:

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா”

“அதிமுக அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகாருக்கு ஆதாரம் தருகிறோம் “Raid” நடத்த தயாரா” என்று கூறும் முதல்வர் அந்த ஆதாரங்கள் அடிப்படையில் நீங்கள் ஏன் இன்று வரை கைது செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் உங்களுக்குள் என்ன புரிந்துணர்வு இருந்தது.
,br>
வேலுமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க அனுமதித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?

Share on:

Continue Reading

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள்!


பாஜகவுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று 2018-லேயே கே சி பழனிசாமி எச்சரித்தும் அதை உணராமல் மாறாக அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு இப்பொழுது பாஜகவின் சுயரூபம் தெரிந்ததும் வருத்தப்படுகிறீர்கள்.

பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு தேர்தல் களத்தை பாஜக vs திமுக என்று அமைத்து அதிமுகவை புறந்தள்ள நினைக்கிறார்கள். அதனால் இப்பொழுதே விழித்திருங்கள்.

“விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்” “உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டைவிட்டார்”
என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை புரிந்து நடந்துகொள்ளுங்கள்.
Share on:

அண்ணாமலையின் இந்த கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது!


சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பம் மட்டும் தான் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அம்மா குறித்து உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை.

உண்மையிலேயே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்திருக்கிறாரா? இந்த விவரங்கள் அவருக்கு தெரியாததா? அல்லது எடப்பாடியை அவமானப்படுத்துவதாக நினைத்து அதிமுகவையும், அம்மாவையும் அவமானப்படுத்துகிறாரா அண்ணாமலை? அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
Share on:

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுமா?

முதல்வர்: நிச்சயமாக நல்ல கோரிக்கை இது. பழைய பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா? அல்லது புதிய பல்கலைகழகத்திற்கு வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதென்ன சாதாரண விஷயமா மெட்ராஸ் யூனிவர்சிடி என்பதை சென்னை பல்கலைகழகம் என்று மாற்றுவதிலேயே சிக்கல் உள்ளது. காரணம் பட்டமளிப்பு சான்றிதழ்களில் வீண் குழப்பம் வரும் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் என்றால் கூடுதல் குழப்பம் சிக்கல் வரும்.

Share on:

Continue Reading

அடிப்படை தொண்டர்களுக்கு மட்டுமே தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அடித்து கூறும் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி!



✍️தீய சக்தி தி,மு,க, என வெளியேறி மாற்றாக மக்கள் பணியில் சிறு சிறு தொண்டாற்றி பாரத ரத்னா அவர்கள் தலைவர் பொருப்பை ஏற்றுக்கொள்ள வில்லை தொண்டர்கள், ரசிகர்கள்,பாமர ஏழை மக்கள், மீனவர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள் அவரை விரும்பி தலைவராக ஏற்றுக்கொண்டு அ,இ,அ,தி,மு,க கழகத்தை தோற்றுவித்தார்!

✍️தலைவர் பதவிக்கு கழகத்தில் சிறு சிறு சில சலப்புகள் எம்ஜிஆர் காதில் சென்றடையவே உடனடியாக அன்றைய மூத்த முன்னோடிகளான அரங்கநாயகம் மற்றும் ஆர்எம்வி,கேசி பழனிச்சாமி,நெடுஞ்செழியன், அன்வர் ராஜா,மற்றும் பலர் முன்னிலையில் ஒரு தீர்மானத்தை பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் நிறைவேற்றினார்.

✍️ அதுதான் தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

✍️தீர்மானம் பாரத ரத்னா( எம்ஜிஆர் ) அவர்கள் பைலாவில் எழுதப்பட்டது இதை புரட்சித்தலைவி அம்மாவும் பின்பற்றினார்!
Share on: