தற்போதைய TNEB மின் கட்டணம்: 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330/- 501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127/- 1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாங்கள் ரூ.5420/- செலுத்த வேண்டும்.ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே. இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.மின்சார வாரியம்,…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள்,அம்மாவை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் ,அம்மா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பார்த்தோ ,ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பார்த்தோ அண்ணா திமுகவிற்கு வந்தவர்கள் யாருமே இல்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை .இவர்களால் வாகு சிதறடிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய ,காட்சிபலவீனமாய் போனதில் இருந்து இன்று வரை மீளவே முடியவில்லை .அதாவது வெற்றி பெறுவதற்கு மட்டும் தான் 1 லட்சம் ஓட்டுகள் தேவைப்படும் ,ஆனால் தோற்கடிப்பதற்கு வெறும் 2000 ஓட்டுகள் மாறினால் போதுமானது .எனவே வருகின்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் யார் கட்சியை வெற்றி பெற வைக்கிறார்களோ அவர்களின் பின்னால் தான் கட்சியும் தொண்டர்களும் அணிவகுத்து வருவார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது .நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கட்சியின் தலைமை தீர்மானிக்கப்பட்டுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பினால் அது…
விடியல் அரசாங்கம் நேற்றிலிருந்து பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்தை பொறுத்து யார் பெயரில் தற்போது உள்ளது எவ்வளவு அடமானம் வைத்துள்ளார்கள், யார் விற்பனை செய்துள்ளார்கள் முன் ஆவணம் (டைட்டில் டீட்) சுத்தமாக உள்ளதா என்று நாமே பரிசோதித்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டார்கள்.
இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும். மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும்.
ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட்…
அதிமுக தொண்டர்கள் தற்போது விரக்தியும் ஆத்திரமுமாக கனன்று கொண்டுஇருக்கிறார்கள் .பன்னீர் -எடப்பாடி தரப்பின் அரசியல் விளையாட்டில் எந்த ஆர்வமும் இயலாமல் இருக்கிறார்கள்.கழகத்தின் பொன்விழா விமரிசையாக கொண்டாடப்படவேண்டிய நேரத்தில் ,நீதிமன்ற விசாரணைகளிலும் ,போட்டி பேட்டிகளிலும் மட்டுமே கட்சி கரைந்துகொண்டிருக்கிறது . ‘ஒற்றை தலைமைக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது ‘ என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், ‘பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், அவரவர் ஆதரவு நிர்வாகிகள்தான் இனிப்பு வழங்குகிறார்கள் ஆதாய எதிர்பார்ப்பில் கூட இருப்பவர்கள்தான் பட்டாசை கொளுத்துகிறார்கள். மற்றபடி தமிழகத்தின் எந்த ஊரிலும் சிறு சலசலப்புகூட இல்லை .பன்னீர்-எடப்பாடி இருவருமே கட்சி நலனுக்குகாகவோ, தொண்டர்கள் நலனுக்காகவோ சண்டை போடவில்லை. தங்களின் பதவியை,அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள் ஒவ்வொரு…
பத்திரிகையாளர் சந்திப்பில் திரு கே.சி.பழனிசாமி அவர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் .இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். AIADMK இந்த இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை என்றும்,அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினால் இருவரும் மாறிமாறி மேலமுறையீடு மட்டுமே செய்து வருகின்றனர் .இதனால் அதிமுக கட்சியும்,சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது, AIADMK மேலும் பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிபதியின் தீர்ப்பு தவறானது .எனவே இரு நீதிபதியின் தீர்ப்பிலும் முரண்பாடு உள்ளது ,இப்படி இருக்கும் பொழுது இருவரும் மாறிமாறி நீதிமன்றத்திற்கு செல்வது என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது ,அதை பற்றி…
அதிமுகவில் தற்பொழுது நிகழும் உட்கட்சி மோதல்களை தகர்த்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் வரும்கால புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். ADMK இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவரும் அதிமுகவின் நலன்கருதி அதிமுகவை விட்டு விலகி நின்று செயல்பட்டாலே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் கூட்டணியின்றி போட்டி இட்டு வெற்றிபெறும் புரட்சி தலைவர் & அம்மா காலத்தை போன்று தமிழகத்திற்கு நன்மை சேர்க்கும் மத்திய அரசின் திட்டங்களை மட்டுமே அதிமுக ஆதரிக்க வேண்டும். ADMK உட்கட்சி மோதல்களை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தொண்டர்களின் விருப்பம் என்பது யாதெனில் கே.சி.பழனிசாமி அவர்களின் தலைமையில் அண்ணா திமுக வரவேண்டும் என்பதே பலபேரது விருப்பமாக உள்ளது .நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சிறு சிறு குழுக்களாக பிரிவினையை ஏற்படுத்தி அதிமுகவை சுருக்க முயற்சிக்கின்றது பாஜக. அவர்களின் தந்திரத்தை அறியாமல் இ பி எஸ் , ஓ பி எஸ் இருவரும் இவர்களுக்குள் போட்டியிட்டு கொண்டுஇருக்கிறார்கள் .வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் பிஜேபியும் ,திமுகவும் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் .அண்ணாமலை அவர்கள் சில பேட்டிகளில் 20 முதல் 25 இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார் .அதில் குறைந்தது 10 இடங்களிலாவது பிஜேபி உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்கின்ற அளவில் கூறுகிறார்.அதன் அடிப்படையிலிலேயே அவர்கள் தமிழ்நாட்டு அரசியலை கட்டமைத்து கொண்டு இருக்கின்றனர் .அனைத்து அண்ணா திமுக தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிஜேபி கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற…
ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்து இருக்கிறது. அந்த அறிக்கையை பொறுத்தவரையில் மிகப்பெரிய சந்தேகத்தை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சசிகலா அவர்கள் மீது எழுப்பினார் .ஆனால் அதில் திரு .ஆறுமுகசாமி அவர்கள் திருமதி.சசிகலா அவர்களை விசாரிக்க முன்வரவில்லை .அதற்கான காரணம் இன்றளவும் தெரியவில்லை .அதுமட்டுமன்றி கொடநாடு கொலை வழக்கில் கூட அந்த இடத்தின் உரிமையாளரான சசிகலா விசாரிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் திரு.கே,சி.பழனிசாமி ஆவார் .அதன்பிறகு உச்சநீதிமன்றமும் சசிகலா விசாரிக்கப்படவேண்டும் என்று கூறிய நிலையில் காவல்துறையின் முன்னிலையில் சசிகலா விசாரிக்கப்பட்டு அவர் சாட்சியமும் அளித்தார் .அதற்குப்பிறகு அவர் சிறையில் இருந்து வந்து சென்னையில் இருக்கின்ற நிலையில் இந்த ஆணையம் அவரை விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் அவர் விசாரிக்க படாதபொழுது அவர் மீது…
ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சனை என்னவென்றால், நேரத்திற்கு தகுந்தமாதிரி எது ஆதாயமாக உள்ளதோ அதேதான் கொள்கை என்று கூறுவார் சிறிது நாட்கள் கழித்து இன்னொரு விஷயத்தை ஆதாயமாக எடுத்துக்கொண்டு அதை கொள்கை என்று கூறுவார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் மட்டும், தான் சொல்கிற விஷயத்தை தான் அனைவரும் கேட்டாக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றார். AIADMK ஒரு கட்சிக்கு இரண்டுமே நல்லதாக அமையாது இருவருமே சுயநலவாதிகள்,ஒருத்தர் சிரித்துக்கொண்டே இருக்கிற சுயநலவாதி,மற்றொருவர் அதற்கு நேர்மாறாக இருக்கின்ற சுயநலவாதி. நாம் இவர்களை பார்த்து அண்ணாதிமுகவிற்கு வரவில்லை புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்களின் வழியிலே வந்தவர்கள் நாம் அவர்கள் இந்த இயக்கம் இப்படித்தான் வழிநடத்தப்படவேண்டும் என்று கொடுத்துஇருக்கிறார்கள். AIADMK தொண்டர்களை வைத்து ஒரு தேர்தல் நடத்தி அதில் யார் தலைமையில் வழிநடத்தப்படவேண்டுமோ அதனை தொண்டர்களின் விருப்பத்திருக்கேற்ப நடத்த வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக அமையும் ஒருங்கிணைந்தால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும். ஒரு சமூக நீதி அடித்தட்டு மக்களுக்கு பயன்பெறுகின்ற அனைத்து விஷயங்களும் செய்ய வேண்டும். சாதாரண மனிதன் கூட அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் முதல் சாதனை. இரண்டாவது சாதனையாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் சத்துணவுதிட்டம், அம்மா அவர்களின் காலத்தில் இலவச சைக்கிள் திட்டம் போன்ற பயன்பெறுகிற திட்டங்களை கொண்டுவந்தனர். AIADMK ஆனால் இன்றைக்கு அந்த அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கின்ற பலன்களை தடுக்கின்ற வகையில் பாரதியஜனதாகட்சி மறைமுகமாக உச்சநீதிமன்றத்தின் மூலமாக அதை சாதிக்க நினைக்கின்ற பொழுது ,அம்மா அவர்கள் இருந்துருந்தால் அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டு இலவசங்கள் தொடர வேண்டும் என்று வாதிட்ருப்பார்கள் ஆனால் இவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசுவது தவறான விஷயமாகும். AIADMK
திமுக எதிர்ப்பு என்பது எம்.ஜி.ஆர் அவர்கள் 1977ல் ஆட்சி அமைந்த உடனே சட்டமன்றத்தில் கூறினார்.அதாவது அண்ணாதிமுக என்பது ஒரு திராவிட கட்சி .இரட்டை குழல் துப்பாக்கியாக நாங்கள் கொள்கைகளில் பயணிப்போம். ஆனால் திமுகவில் இருந்து அண்ணாதிமுக எங்கு வேறுபடுகிறது என்றால் லஞ்சம்,ஊழல் ,குடும்பஅரசியல், மாவட்டத்திற்கு மாவட்டம் அந்த குறுநில மன்னர்கள் .பொதுக்குழுவால் முடிவெடுத்தால் அது திமுக,தொண்டர்களினால் ஒரு தலைமையை உருவாக்கப்பட்டால் அது அண்ணாதிமுக அதாவது எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்புவது என்னவென்றால் சாதிக்அலி வழக்கில் தன்கிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிக சட்டமன்றஉறுப்பினர்கள் இருக்கின்றனர்,அதனால் இரட்டைஇலை சின்னம் அவருக்கு வந்துவிடும்.எனவே கட்சி ஒரு பிளவை சந்திக்க வேண்டும்,ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட வேண்டும், இவர் தலைமையில் அண்ணாதிமுக மற்றும் இரட்டைஇலை சின்னம் வந்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கின்றார்.ஆனால் அந்த சிவசேனா வழக்கில் அதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பாமல் constitutional bench கொண்டு சென்றனர்.அது பலஆண்டுகள் காலம் எடுக்கும். அதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது இணைந்து பணியாற்றுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். மேலும் எடப்பாடி & ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனக்காக வாதிடுகிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுக்காகவோ, தொண்டர்களின் பிரிதிநிதியாக அவர் வாதிடவில்லை. ராம்குமார் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோரின் ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விளம்பரம் கொடுத்து ,இந்த இரண்டு பெரும் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அதில் திரு.ஓ.பன்னீர்செல்வமும் அடக்கம், எடப்பாடி பழனிசாமியும் அடக்கம், இதுபோல பல லட்சக்கணக்கான பேர் தொடர்புடைய வழக்கில் தனித்தனியாக வழக்கு போடக்கூடாது. இந்த representative suit ல் ஒரு வழக்கு வந்துவிட்டால்,யார் போட்டாலும் இந்த representative suitல் தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை தாண்டி போக முடியாது.