தமிழக மகளிர் காவல் நிலையங்கள், கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாக மாறிவிட்டது- ஹைகோர்ட் கடும் விமர்சனம்


மதுரை திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் விமாலா. இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஜனார்த்தனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனக்கு எதிராக திலகர் திடல் காவல் நிலையத்தில் என் மனைவி வரதட்சணை புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் நான் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். புகார் தொடர்பாக என்னிடம் முதற்கட்ட விசாரணை நடத்தாமல் என்னை கைது செய்து காவல் ஆய்வாளர் சிறையில் அடைத்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றி உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த உத்தரவை காவல் ஆய்வாளர் விமலா பின்பற்றவில்லை. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் விமலா நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டு தமிழ்நாடு காவல் மகளிர் பிரிவு பொன்விழாவை கொண்டாடுகிறது. கடந்த 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பிரிவில் ஆரம்பத்தில் ஒரு சார்பு ஆய்வாளரும், 20 காவலர்களும் இருந்தனர். 1992 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இன்று 222 மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இதில் 35,359 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைகளின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளாது. இதுகுறித்து டிஜிபியும் பதில் மனுவை தாக்கல் செய்தார்

7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் இயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது. அவசியம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதைவிட மேலானது. அதன் உத்தரவை போலீஸ் பின்பற்ற வேண்டும். பெண்களை காக்கும் கேடயமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் இடமாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பார்க்கப்பட்டன. ஆனால், பணம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் கைது செய்து துன்புறுத்தும் இடமாகிவிட்டது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக்கான இடமாக மாறி உள்ளன. 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள், குழந்தைகள் பயமின்றி, சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் வகையில் தனி விசாரணை அறை, பெண் வழக்கறிஞர், பெண் மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர், பெண்கள் மேம்பாட்டு முகாம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை நிறைவேற்ற உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் விமலா மன்னிப்பு கேட்டு இருப்பதால் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
Share on:

கட்சி துவங்க ஐந்து பைசா கூட போட இயலாத நபரின் குடும்பம் இப்போது ஆசியாவிலேயே முதன்மை பணக்காரர்கள் பட்டியலில்!


உ.எண்:2413
கட்சி துவங்க ஐந்து பைசா கூட போட இயலாத நபரின் குடும்பம் இப்போது ஆசியாவிலேயே முதன்மை பணக்காரர்கள் பட்டியலில்!

இந்த அளவுக்கு அவர்களை வளர்த்து விட்ட பெருமை நம்மையே சாரும்!

இது போதாது! அவர்களை உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்க வைக்க வேண்டும் அளவுக்கு நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்!
Share on:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கணக்கு காட்டவில்லை!


தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில்.வருமான வரித்துறையினர் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் 4,100 கோடி ரூபாய் மறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அளித்துள்ளனர்.

கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் 110 கோடி,பத்துஐயிரம் வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்கள் மேலும் வங்கி தொடர்பான 500 கோடி பரிவர்த்தனை விவரங்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உட்பட ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை என தெரியவந்துள்ளது. இது அனைத்தும் யாருடைய பணம்?
Share on:

ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது


திரு கே சி பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் zoom மூலமாக கலந்து கொண்ட கலந்துரையாடலில் கூறியிருப்பதாவது ,ஆளும் கட்சியான திமுக இந்த இரண்டு வருடத்தில் மக்களிடையே மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது .அதேபோல பாஜகவும் இந்த 30 வருடத்தில் அதிகளவு அவப்பெயரை மக்களிடையே சம்பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் .மேலும் கலந்துரையாடலின் பொழுது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் .

மேலும் பாஜக இந்திய அளவில் பெரிய கட்சியாக கூட இருக்கலாம் .ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடையே அவர்களின் ஆட்டம் செல்லாது என்றும்,அண்ணாதிமுகவிற்கு தான் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ளது என்றும் ,பாஜக வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்
Share on:

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!


தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது.

சிறுவர்களை போல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு பலர் அடிமையாகி உள்ளனர். இதில் பணத்தைக் கட்டி விளையாடிய பலர் பணத்தை இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து வருவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்த போதும் இதில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது குறைந்தபாடில்லை.

இதே போல சங்கரன்கோவில் அருகே தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ரம்மியில் பணம் இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வசிப்பவர் மாரி செல்வம். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையானதாக தெரிகிறது. இவர் அதில் சுமார் 10 லட்சம் வரை இழந்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்தினர் கண்டிக்கவே மன வருத்தத்தில் இருந்த இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்!


சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து சாலை வரியையும் தமிழக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்.

சாலை வரி உயர்த்துவதற்கு முதலில் அனைத்து பகுதிகளிலும் நல்ல தரமான சாலை இருக்கிறதா என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சாலை வரி உயர்வதன் மூலம் சகலமும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை.
Share on:

அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சி அதிமுக.

புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக உலகளாவிய தரவரிசையில் 7-வது மிகப்பெரிய தொண்டர்பலம் உள்ள கட்சியாக இருந்தும் தொடர்ந்து 8 முறை தோல்வியடைய காரணம் யார்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம்,கையெழுத்து போடுகிற உரிமை இரண்டும் கொடுத்து உங்களால் வெற்றியை பெற இயலவில்லை.

இன்னும் தோல்விக்கு உண்மையான காரணத்தை உணராமல் இருப்பது அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர் என்பதை காண்பிக்கிறது.

Share on:

Continue Reading

பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார்!


“அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Google, காந்திநகரில் உள்ள Gujarat International Finance Tec-City (GIFT)-இல் அதன் உலகளாவிய நுண்தொழில்நுட்ப செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளது.

அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை Google நிறுவன CEO சுந்தர் பிச்சை சந்தித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.”

பிரதமர் மோடி இன்னும் இந்தியா என்பதை வெறும் குஜராத்தாகவே நினைக்கிறார். தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டை பற்றி அதிகம் பேசுகிறார் ஆனால் தமிழகத்தில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்படவில்லை?
Share on:

எம்.ஜி.ஆர்,அம்மாவின் லட்சியங்களுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து ஏன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க கூடாது?


நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்கவேண்டும் என்று தங்களுக்குள் உள்ள பகையை மறந்து ஒன்றிணையும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் வென்று திமுகவை அப்புறப்படுத்தி அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்,அம்மாவின் லட்சியங்களுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்து ஏன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க கூடாது?

#290th Zoom Meeting ஞாயிறு (25.06.2023) காலை 11:00 மணிக்கு நடைபெறும்,கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் உங்கள் தொலைப்பேசி எண்ணை COMMENT-யில் பதிவிடவும் or Direct Join Zoom Meeting https://us02web.zoom.us/j/5945119322 Meeting id: 5945119322
Share on:

RTO கட்டணங்களை தங்கள் இணையதளம் வழியாக ஏற்றுக்கொள்கின்றன!


RTO அலுவலகங்கள் இப்போது FC, சாலை வரி, அனுமதி, பசுமை வரி மற்றும் பிற கட்டணங்களுக்கான கட்டணங்களை தங்கள் இணையதளம் வழியாக ஏற்றுக்கொள்கின்றன. அந்த உத்தி ஊழலை ஒழிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, இது பாராட்டப்பட வேண்டும்.

இருப்பினும், ஆர்டிஓ-அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் செலுத்த வேண்டிய 8000/- தொகை ரூ.25,500/- என லஞ்சம் கேட்கப்படுகிறது. இது முழு ஆன்லைன் கட்டணத்திற்கும் அமலாக்கத்தால் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் முகவர்கள் மூலம் அனைத்து கட்டணங்களும் அகற்றப்பட வேண்டும்.
Share on: