
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களை சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் பணியாற்ற பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.. அந்த வகையில் இங்குள்ள எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இதில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று கோவையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டிருந்தது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை தேர்வு எழுத வைத்தது தெரியவந்திருந்தது.. இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியானாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற வனத்துறை தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.