டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டில்கள்: தமிழ்நாடு அரசு அனுமதி; தீபாவளிக்கு வருமானம் அதிகரிக்க வழியா?


கள்ளச்சாரயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் 90 மல்லி மதுபாட்டிகள் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி (கட்டிங்) மது பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தற்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை என்று அமைச்சர் முத்துச்சாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறி சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டிகள் விற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல உள் விவாதங்களுக்குப் பிறகு, சட்டப்பூர்வ கொள்முதல் மற்றும் மது விற்பனையில்90 மில்லி மது பாட்டில்களை விற்க அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள, சில அண்டை மாநிலங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் குறைந்த அளவிலான மதுபானங்களை விற்பனை செய்து வரும் நிலையில், டாஸ்மாக் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மதுபான உற்பத்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, டாஸ்மாக் நிறுவனம், இந்த ‘கட்டிங்’ பாட்டில்களின் விலை நிர்ணையம் குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி, 90 மில்லி பிராண்டின் விலை சுமார் 80 ஆக இருக்கலாம் (180ml பாட்டில், இப்போது கிடைக்கும் சிறியது, விலை சுமார் 140 ஆகும்).

“பெரும்பாலும், இந்த தீபாவளிக்கு 90 மில்லி மதுபாட்டில்கள் தங்களுக்கு கிடைத்துவிடும் என்றும், இதனை தயாரிக்க, மது உற்பத்தியாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கோரியுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 90 மில்லி பாட்டில்கள் மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மொத்த மதுபான விற்பனையில் பெரும்பகுதி 90 மில்லி மது பாட்டில்கள் மூலம் கிடைப்பதாக கூறப்படுகறது.

அதே சமயம் கேரளா போன்ற மாநிலங்களில், அவை அதிகமாக விற்க்கப்படவில்லை என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி கள்ளக்குறிச்சி பகுதியில், 67 மரணமடைந்த சம்பவத்திற்கு பிறகு, இந்த ‘நிப் பாட்டில்களை’ அறிமுகப்படுத்த மாநில அரசின் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.
Share on: