பிளஸ் 2 தேர்வு: மாவட்ட வாரியாக தேர்ச்சி! திருப்பூர் முதலிடம்! கடைசி இடம் எந்த மாவட்டம்?


தமிழகத்தில் அதிக தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீட் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கக்கத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டார்.

7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார்.

இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்துவிட்டார்.

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதங்களை கொண்ட மாவட்டங்கள் எவை தெரியுமா?

திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் முதலிடத்தையும் சிவகங்கை, ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் அரியலூர் 97.25 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் கோவை 96.97 சதவீதத்துடன் 4ஆம் இடத்தையும் நெல்லை, பெரம்பலூர் தலா 96.44 சதவீதத்துடன் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசி இடம் திருவண்ணாமலை மாவட்டத்திற்குதான். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 94.27 சதவீதமும் சேலத்தில் 94.60 சதவீதமும் நாமக்கல் 96.10 சதவீதமும் கிருஷ்ணகிரி 91.87 சதவீதமும் தருமபுரி 93.55 சதவீதமு் புதுக்கோட்டை 93.79 சதவீதமும் கரூர் 95.90 சதவீதமும் திருச்சி 95.74 சதவீதமும் நாகை 91.19 சதவீதமும் மயிலாடுதுறை 92.38 சதவீதமும் திருவாரூர் 93.08 சதவீதமும் தஞ்சை 93.46 சதவீதமும் விழுப்புரம் 93.17 சதவீதமும் கள்ளக்குறிச்சி 92.29 சதவீதமும் கடலூர் 94.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்தது திருவண்ணாமலை மாவட்டம். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.
Share on: