
அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை நடத்தினர். நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே இப்போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
நேற்று காலை அமைச்சர் நேருவின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து நடந்த பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ரெய்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
நேற்றைய தினம் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.என்.நேருவின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் தமிழகம் முழுதும் 20 இடங்களில் ரெய்டு நடந்தது. கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது.
அதன்படி சென்னை பிஷப் கார்டன் பகுதியில் கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் டிவிஹெச் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.