![](http://aiadmk.org.in/wp-content/uploads/2023/08/nellaicrime-down-16917426921-1691816572.jpg)
மாணவனை மாணவர்களே கொடுமையாக தாக்குவது எவ்வகையில் நியாயம்…
சின்னதுரை படிக்கக்கூடாதா… சிறந்து விளங்கக்கூடாதா…
பிஞ்சு மனங்களில் நஞ்சா…. சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….
சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….
கற்காலத்தில் சாதி இல்லை… தற்காலத்தில் மனிதநேயமே இல்லை…. எங்கே போகிறது என் நாடு….. என்ன சொல்வது என்றே புரியவில்லை..
நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்…. இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!
இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….
சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். – கே.சி.பழனிசாமி