
டெண்டர் என்பதே குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் இவர்கள் முன்கூட்டியே சந்தை விலையை விட மிக அதிகமாக தொகையை இறுதி செய்துவிட்டு ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அதே தொகைக்கு டெண்டர் கொடுக்க வைப்பது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.
இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட 400 கோடி இழப்புக்கு யார் பொறுப்பு? முதல்வர் ஸ்டாலின் அவர்களா? அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களா? ராஜேஷ் லக்கானி அவர்களா? இந்த மோசடியை செய்வதற்காகவே காசி என்ற நபரை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்தது யார்? அவர் தினமும் அலுவலகம் செல்லாமல் அமைச்சர் வீட்டுக்கு சென்று என்ன செட்டிங் செய்தார்?