பணியில் இல்லாத அதிகாரி பெயரில் கட்டட அனுமதிக்கான கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது!


பணியில் இல்லாத அதிகாரி பெயரில் கட்டட அனுமதிக்கான கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ வில், கட்டுமான திட்ட பணிகள், “ஆன்லைன்” முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த 2022 மே மாதம் அமலுக்குவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நிலை அதிகாரியும் தங்கள் கருத்தையும், ஒப்புதலையும் “டிஜிட்டல்” முறையில் பதிவிடவேண்டும்.

இந்த நிலையில் ஜெயந்தா, சரவணன் தங்களது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க பணியில் இருந்து செப்டம்பர் 2022 விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர்,டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 வழங்கப்பட்ட கட்டட அனுமதி கடிதங்களில் ஜெயந்தாவின் “டிஜிட்டல் கையெழுத்து” இடம்பெற்றுள்ளது.

நீண்ட விடுமுறையில் சென்ற ஒரு அலுவலர் எப்படி அதிகாரப்பூர்வ கடிதங்களில் கையெழுத்திட முடியும்?
Share on: