திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தலைகுனிவு..


திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில்‌ கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்கொடுமை, போதைப்‌ பொருள்‌ விற்பனை, போன்ற சம்பவங்கள்‌ கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும்‌, நாளிதழ்களிலும்‌ வெடிகுண்டு மற்றும்‌ பெட்ரோல்‌ குண்டு வீச்சு; கத்தியால்‌ வெட்டிக்கொலை; செல்போனுக்காக ஓடும்‌ ரயிலில்‌ பெண்ணை தள்ளிக்‌ கொலை; சாலையில்‌ செல்லும்‌ பெண்களிடம்‌ நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள்‌ தமிழகத்தில்‌ பல இடங்களில்‌ நடந்தேறி வருகிறது. இதன்‌ காரணமாக பொதுமக்கள்‌ பாதுகாப்பின்மை கருதி வெளியில்‌ செல்ல அச்சமடைந்துள்ளனர்‌. தொடர்ந்து, தமிழகத்தில்‌ இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள்‌ அதிக அளவில்‌ நடைபெற்று வருகிறது.

சென்னையில்‌ கல்லூரி மாணவி அஸ்மிதா நந்தம்பாக்கம்‌ ஏழு கிணறு தெருவில்‌ நடந்து வந்தபோது நவீன்‌ என்பவன்‌ கத்தியால்‌ குத்தி படுகாயம்‌. விழுப்புரம்‌ மாவட்டம்‌, திண்டிவனம்‌ அருகே உள்ள சின்ன நெற்குணம்‌ பகுதியைச்‌ சேர்ந்த பூசாரி திரு. காமராஜ்‌ அவர்களை வழிமறித்து, மர்ம நபர்கள்‌. சரமாரியாக வெட்டிக்கொலை. திருநெல்வேலி மாவட்டம்‌, ஏர்வாடி அருகே முன்‌ விரோதம்‌ காரணமாக விவசாயி திரு. அருணாசலம்‌ என்பவர்‌ 3 பேர்‌ கொண்ட கும்பலால்‌ வெட்டிப்‌ படுகொலை.

திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில்‌ கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்கொடுமை, போதைப்‌ பொருள்‌ விற்பனை, முதியவர்கள்‌. குறிவைத்து தாக்கப்படுதல்‌ போன்ற சம்பவங்கள்‌ நடைபெற்று வருகிறது என்று பேட்டியின்‌. வாயிலாகவும்‌, அறிக்கைகளின்‌ வாயிலாகவும்‌, சட்டமன்றத்திலும்‌ நான்‌ எடுத்து வைத்து வருகிறேன்‌. எனினும்‌, இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல்‌ தமிழகத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை
Share on: