
நாட்டில் நடக்கும் இன்றைய நீதிமன்ற நாடக கூத்துக்கு நீதிமன்றத்தால் தீர்ப்பு கிடைக்காது , 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள்தான் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள். அதற்கு அஇஅதிமுக , பாமக , தினகரன் ,ops , சசிகலா ,தேமுதிக , தமாகா , புரட்சி பாரதம் , புதிய தமிழகம் , புதிய நீதிகட்சி என்று. இன்ன பிற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால் தான் தமிழகத்தில் நடக்கும் திமுக ஊழல் அரசாங்கம் , ஏழைகள் உழைப்பை உறிஞ்சும் இந்த மக்கள் விரோத அரசுக்கு முடிவுரை கிடைக்கும் .மத்தியிலும் 2024-ல்பாஜக ஒழியும் , இல்லையென்றால் திமுகவும் , பாஜகவும் வென்றுவிட்டால் , இறைவன் புரட்சித் தலைவர் உருவாக்கிய மக்கள் தர்ம பேரியக்கம் பாஜகவால் அழிக்கப்பட்டுவிடும். பாஜகவின் குரூர செயலை நினைவுரு இறந்த ஒருவரை (அம்மையாரை ) குற்றவாளிஆக்கி அஇஅதிமுகவை அழிக்க மீதி இருப்பவர்களை அடிமையாக்கும் இந்த பாஜகவின் கொடூர செயலை இயக்கத்தினர் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊழலின் அகராதியான திமுக கருணாநிதி குடும்பத்தை காப்பாற்றி இன்று வரை கரை சேர்க்கிறது பாஜக அதுமட்டுமல்ல அவர்களை என்றும் காப்பாற்றும் , காரணம் இதுதான் வாஜ்பாய் 13 மாத ஆட்சி ஆதரவை அம்மையார் வாபஸ் பெற்றதுதான் , அடுத்து 1999-2004 வரை கருணாநிதி வாஜ்பாய் அரசாங்கத்தை காப்பாற்றிய நன்றி கடன் , இப்படிப்பட்ட பாசிச பாஜகவுடன் இனி எடப்பாடி கூட்டணி வைத்து ops, சசிகலா, தினகரன் இவர்களை வேண்டாம் என்று அடம்பிடித்தால் அஇஅதிமுவை அழித்த கருணாநிதி எடப்பாடி என்று ஆகிவிடும் , தாயுள்ளத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் இருதலைவர்களின் புகழையும் , வெகுஜன பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும்.இல்லையேல் அஇஅதிமுகவைஅழித்தது எடப்பாடி மற்றும் கூட்டாளிகள் என்ற வரலாறு உருவாகும். வரும் தேர்தலில் நிச்சயம் இந்த மூவரால் அஇஅதிமுக வாக்கு 10% முதல் 15% வரை வாக்கு எல்லா தேர்தலில் பிரியும், அமமுக முதல் தேர்தலில் வாங்கிய 6 சதவிகித வாக்குகள் எல்லாம் சேரும் , அஇஅதிமுக சிதறும் , 2026க்குள் பிஜேபி அஇஅதிமுகவை அழிக்கும். எடப்பாடி அவர்களே அனைவரையும் ஒன்றினணயுங்கள் , இல்லையேல் தமிழக மக்களின் பேரீயக்கத்துக்கு பேராபத்து . இயக்கத்தின் மூத்த தொண்டன்: mgr ஆனந்தன்.