தலித் இளைஞரை ஆபாசமாக திட்டியதால் சஸ்பெண்ட்


சேலம் அருகே கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாக கூறி தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கி துரைமுருகன் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த தடையை மீறி கோயிலுக்குள் சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அந்த பட்டியலின இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த பட்டியலின இளைஞரின் தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

மேலும், அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, “இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்.” என்றார்.

பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி மாணிக்கத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி அறிவித்தார்.
Share on: