
சம்பவம் 2 – கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசியலில் 4 பெரிய சம்பவங்கள் நடந்து உள்ளன. தமிழக அரசியலை உலுக்கும் விதமாக மிகப்பெரிய மோதல்கள் நேற்று ஒரே நாளில் நடந்து உள்ளது. அந்த சம்பவங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
நேற்று முதல்நாள், அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார். அதில், ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், “ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், “பல்லு விழுந்த நடிகர்கள்” என்று கோபமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி பேசுகையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.. இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசினார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்று சொல்ல மாட்டேன்.
ஆனால் அவரின் பேச்சுக்கு ஒரு இடத்தில் கைத்தட்டு அதிகம் வந்தது. அது எந்த இடம் என்று பாருங்கள். நேற்று சூப்பர் ஸ்டார் பேசியதை வைத்தே பாருங்கள். நான் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் என் வேண்டுகோள்., என்று உதயநிதியும் தன் பங்கிற்கு துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்தார்.
சம்பவம் 2 – நேற்று பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , காலில் விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னைப் பற்றிப்பேச எடப்பாடி பழனிசாமி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எழுதி வச்சிக்கோங்க.. பா.ஜ.கவுக்கும் தி.மு.கவுக்கும் எக்காலத்திலும் உறவு இருக்காது”.. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் தான். எடப்பாடி போல தற்குறி இல்லை நான், என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
சம்பவம் 3 – நாம் தமிழர் கட்சியினருக்கு.. திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்று வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும் என்றும், பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் சீமான் சவால் விடுத்து பேசினார். திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார். இதற்கு வருண்குமார் , திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010 All India Rank 3 நினைவு கூறுகிறேன். First choice as IPS என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சம்பவம் 4: நேற்று பாஜக நிகழ்ச்சி ஒன்றில், நான் ஒண்ணும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம பா.ஜ.கவுக்கு வரல.. 6 மாசம் ஆச்சு இன்னும் எந்த பதவியும் கொடுக்கல என்று பாஜகவை விமர்சனம் செய்து அண்ணாமலை இருந்த மேடையிலேயே விஜயதரணி பேச பேச அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றது.
சரியாக தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது என்பது புத்திசாலித்தனமாக வேன்றுமென்றுல்லாம் தோன்றலாம். ஆனால் அப்படி 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சி மாறிய விஜயதாரணியின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. Advertisement
அவருக்கு லோக் சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியிலும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவில் இணைய