சென்னிமலையில் பதற்றத்தை உண்டாக்கிய இந்த நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சென்னிமலை-யில் பதற்றத்தை உண்டாக்கிய நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒரு மதவாத மோதலை திமுகவும்,பாஜக வும் திட்டமிட்டு அரங்கேற்றி கொங்குமண்டலத்தில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளாக கொங்கு மக்களின் குலதெய்வமாக விளங்குகிற முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிற சென்னிமலை ஸ்தலத்திற்கு “கல்வாரி மலை என மாற்றம் செய்வோம்” என்று பகிரங்கமாக சவால் விட்டு பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த இந்த நபர் மீது முதலமைச்சர் திரு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம் என்ன?
Share on:

தலித் இளைஞரை ஆபாசமாக திட்டியதால் சஸ்பெண்ட்


சேலம் அருகே கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாக கூறி தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கி துரைமுருகன் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த தடையை மீறி கோயிலுக்குள் சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அந்த பட்டியலின இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த பட்டியலின இளைஞரின் தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

மேலும், அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, “இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்.” என்றார்.

பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி மாணிக்கத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி அறிவித்தார்.
Share on:

VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயன்றது திமுக நிர்வாகிகள்..


பழனி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அங்கு மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜீப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் விஏஓ மற்றும் உதவியாளரை கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஏஓ கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், லாரியை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது
Share on:

வரலாறுகளுக்குதானே விடை தெரியும்!


மகாராஷ்டிரா அரசியலில் யாரோ ஒருவர் உருவாக்கிய கட்சியில் இணைந்து அதே கட்சியை கபளீகரமே செய்து கட்சி ஓனரையே கதறவிட்டவர் ஏக்நாத் ஷிண்டே. அதனால்தான் என்னவே மாமனார் உருவாக்கிய கட்சியை ஆட்டைய போட்ட ‘சந்திரபாபு’க்கள் மறக்கடிக்கப்பட்டு ‘ஏக்நாத் ஷிண்டே’க்கள் பெயர் அதீதமாக இந்திய அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடுதான் என்றில்லை… அதிமுகதான் என்றில்லை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஷிண்டேவை ‘டெல்லி’ சர்க்கார் “உற்பத்தி” செய்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் என்றில்லை.. மாநில கட்சிகள்தான் என்றில்லை.. மிசோரம் போன்ற குட்டி மாநிலங்களிலும் கூட எல்லை அருணாச்சல பிரதேசத்திலும் கூட ஷிண்டேக்கள் “உற்பத்தி” டெல்லியால் புற்றீசல் போல புறப்பாடு ஆகி கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் ஒரு ஷிண்டே இருக்கிறார்தானே.. அதையேதான் ” அண்ணாமலைக்கு ‘ஆப்பு’- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?” என நாமும் எழுதி இருந்தோம்.

“நாம நினைப்பது போல நாலு கூறாக இந்த “மா” நிலம் பிளவுபடாமலா போகும்? நமக்கும் ஒரு நாள் நாற்காலி வராமலா போகும்? சுழற்சி முறையில் மூவருமாய் மகுடம் சூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன முறை பிடியில் இருந்தவர்கள் 2026-ல் பின்வருவார்களா? புதிய முகங்களை வளைக்க முடியுமா? “முதலீடு” என்ன? “வருவாய்” என்ன? என்பதில்தான் ஷிண்டேக்கள் மூச்சுக்கு மூச்சு விவாதிக்கிறார்களாம்!
Share on:

தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!


தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கோவையிலும் உள்ள மார்ட்டின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா?, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

திமுக மாவட்ட நிர்வாகி பேச்சால் சர்ச்சை!


காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நாம் எதிர்ப்பது போல் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்றும் அப்போது தான் நம்மை மக்கள் நம்புவார்கள் எனவும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மயிலாடுத்துறை மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேல்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. தனது ஆட்கள் மூலம் கூட்டத்தை முகநூலில் லைவ் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். இது தெரியாமல் பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேல், எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டி பேசணும், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போல் நடிக்கணும் எனக் கூறிவிட்டார். கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பது போல் ராஜ்குமார் எம்.எல்.ஏ. மாயையை உருவாக்கணும் என்று பாடமெல்லாம் எடுத்தார்.

திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. நேற்றுக் கூட சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்தச் சூழலிலும் காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் நிச்சயம் பெற்றுத் தருவோம் எனவும் உறுதிபடப் பேசியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் இவ்வாறான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக நிர்வாகி ஆர்வக்கோளாறில் தேவையற்றதை பேசி கட்சித் தலைமையை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டுள்ளார்.
Share on:

ஆ. ராசாவின் 15 சொத்துகளை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!


திமுக எம்பி ஆ ராசாவின் சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆ ராசாவின் பினாமி நிறுவனம் எனக்கூறி அதன் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி கையகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆ ராசாவின் பினாமி நிறுவனமான கருதப்படும் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆ ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது. இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் சோதனை நடத்தியது.

கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதாவது ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க வேண்டி பணம் வாங்கியதாகவும்,தனை அவர் பினாமி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

வசமாக சிக்கும் ஜெகத்ரட்சகன்!


திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 7 வெளிநாட்டு கை கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி ரெய்டு ஆக்டோபஸ் கரங்களாக நீண்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.

முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், புதுச்சேரியில் அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.

ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து இரண்டு கருப்பு பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் இருந்து கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதே போல சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share on:

கையோடு வரும் புது சாலை.. கரூர் அவலம்!


கரூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை, போட்ட உடனே கையோடு பெயர்த்து வரும் வகையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை குறித்து அப்பகுதி மக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார்ச் சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on:

திமுக MP வீட்டிற்கு வந்த புதிய வருமான வரித் துறை டீம்!


திமுக எம்பி ஜெகதன்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்த புதிதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த போது அவர் சிரித்தபடியே அவர்களை வரவேற்றார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை இன்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகளில் ஆயுதப்படை பாதுகாப்புடன் நேற்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திநகரில் உள்ள நட்சத்திர விடுதி, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அது போல் படப்பையில் உள்ள கல்லூரி பணியாளர் ஒருவரி வீட்டு பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது.

மேலும் அவருடைய வீட்டில் புதிதாக பூசப்பட்ட சுவற்றில் ஏதேனும் அறை இருக்கிறதா என தட்டி பார்த்தனர். மேலும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்டலம் சவீதா கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 10 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகத்ரட்சகன் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என சொல்லப்படுகிறது.
Share on: