சந்திரயான் 3ன் எதிர்பாராத கண்டுபிடிப்பு!


நிலவின் தரைப்பரப்பு வெப்பநிலை வேறு வேறாக இருப்பதாக சமீபத்தில் சந்திரயான் 3 கண்டுபிடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன.

அந்த கருவிகள் எல்லாமே தற்போது நிலவின் மேல்பகுதியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதாவது ஆக்டிவ் ஸ்டேட்டஸுக்கு வந்துள்ளது

சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது.

விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (PRL) இணைந்து இந்த சோதனை கருவி உருவாக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை

இந்த ஆய்வு கிட்டத்தட்ட சந்திர மேற்பரப்பில் செருகப்பட்ட ஒரு வெப்பமானி போன்றது. மேல் மேற்பரப்பில் இருந்து கீழே செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பம் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே இஸ்ரோவின் கவனம். அங்கே தண்ணீர் நிலையை கண்டுபிடிக்க இது உதவும் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

பிரக்யான் ரோவர் நிலவில் இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

ந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது. லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். இது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிலவின் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வது. இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல். நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
Share on:

ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள்!


சென்னை;

சென்னை கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 56). இவர் ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து சப்-இன்ஸ்பெக்டரை பாலமுருகன் திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நேரில் சந்தித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஆர்.கே.நகர் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர்

மேலும் போலீசார் விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மாணவர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Share on:

மதுரை ரயிலில் எரிந்த ரூ 500 நோட்டு கட்டுகள்..


மதுரை ரயில் விபத்து சம்பவம் நடந்த போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 17ஆம் தேதி புறப்பட்ட இந்த ரயிலில் பயணித்த இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்றுள்ளனர்.
மதுரையில் அதிகாலை 3.45 மணிக்கு இந்த ரயில் வந்தது. இவர்கள் சென்னை செல்வதற்காக இணைப்பு ரயிலில் அட்டாச் செய்ய மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் சுற்றுலா ரயிலை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அதிகாலை 4.30 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை ஆன் செய்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது சிலிண்டரில் இருந்த வாயு லீக்காகி தீப்பிடித்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ரயிலில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் எப்படி ரயிலில் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

ரயில் பெட்டியில் இன்று மீண்டும் சோதனை செய்த போது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. தீவிபத்து நடந்த போது ரயிலில் இருந்த சுற்றுலா ஏற்பாடு செய்த 5 ஊழியர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்த ஊழியர்களை கண்டுபிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
Share on:

மதுரை ரயில் தீ விபத்து: ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்கள்


மதுரை ரயிலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டின் கழிவறை முழுவதும் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 55 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க கடந்த 17 ஆம் தேதி புறப்பட்டுள்ளனர் புனலூர் அருகே வேறு ஒரு ரயிலில் இந்த பெட்டியை இணைப்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென இநத பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் தீயில் கருகி இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட விசாரணையில் ரயிலில் சிலிண்டர் வெடித்ததே தீவிபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என்ற போது ஒன்றல்ல இரண்டல்ல 3 சிலிண்டர்களை எப்படி இவர்கள் எடுத்துச் சென்றார்கள் என தெரியவில்லை.

5.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது இரு சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. அந்த பெட்டியில் பலர் அயர்ந்து தூங்கியதாலும் பெட்டியை பூட்டிவிட்டதாலும் வெளியேற முடியாமல் தீயில் கருகி 10 பேர் பலியாகிவிட்டனர்.

தீ விபத்தை அறிந்த சிலர் எப்படியோ காயங்களுடன் தப்பிவிட்டனர். புகையால் பலர் மூச்சுத்திணறிய நிலையில் தீயில் கருகி இறந்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க ரயிலில் சிலிண்டர் கொண்டு சென்றதே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களை வைத்திருந்தனர். பெரிய பெரிய டபராக்கள், கரண்டிகள், தட்டுகள், பெரிய பெரிய அண்டாக்கள் என இருந்தன
Share on:

செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு..


சிறைக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தியபிறகு, மறுபடியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியிடம் தினமும் நடத்திய விசாரணையின் தகவல்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.. அவை ஸ்க்ரிப்ட்டாகவும் எழுதப்பட்டுள்ளது

கஸ்டடி விசாரணையில் செந்தில் பாலாஜி கூறியவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடந்து வருகின்றன… இதனை வைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்படுமாம்.

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து வீடியோ காணொலிகாட்சி மூலம் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Share on:

சந்திரயான் 3: நேரு முதல் சைக்கிளில் சுமந்து செல்லப்பட்ட ராக்கெட்


நிலவின் தென் துருவம் அருகே கால்பதித்துவிட்டது இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம். இதன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி படங்களை வெற்றிகரமாக அனுப்பியும் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்கிறது.

இந்த சாதனைக்காக நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் முதல் பிரதமர் நேரு, இந்திய விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாய்

1960களில் இளம் விஞ்ஞானிகள் பரிசோதனை ராக்கெட்டை உருவாக்கும் முயற்சி

1960களில் இந்திய விண்வெளி துறையின் தந்தை விக்ரம் சாராபாய் மற்றும் இந்திய அணுசக்தி துறையின் தந்தை ஹோமி பாபா

1963-ல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பா ஆய்வு மையத்துக்கு சைக்கிளில் ராக்கெட்டை எடுத்து செல்லும் விஞ்ஞானிகள்

1963-ல் சைக்கிளில் கொண்டு செல்லப்படும் இந்திய ராக்கெட் நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
Share on:

‘சந்திராயன் 3 எடுத்து அனுப்பிய படம் இதுதான்’ – நக்கலாக ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ் – வலுக்கும் கண்டனம்


இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 குறித்து பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லன் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழனாக நடித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன் 3 வருகிற 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக பிரகாஷ் ராஜ் தனது X (டிவிட்டர்) பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், விக்ரம் லேண்டர் மூலம் எடுக்கப்பட்டு நிலவில் இருந்து பூமிக்கு வந்த முதல் படம் என தேநீர் ஆற்றும் நபர் ஒருவரின் படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜின் இந்தப் பதிவு இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Share on:

செந்தில் பாலாஜியை சிக்க வைக்க புது பிளான்


அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அவரை அமலாக்கத் துறை தீவிரமாக தேடி வருகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன.அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2011 – 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 1.62 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறும் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

அமலாக்கத் துறையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும்,சிபிஐயும் தனித்தனியே 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு பல்வேறு சம்பவங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் உள்ளார்.

கடந்த வாரம் அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் தெரியாது, நினைவில்லை, ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன் உள்ளிட்ட பதில்களையே கொடுத்துவந்தார்.

ஒரு கட்டத்தில் உங்கள் செல்வாக்கு இல்லாமல் 30 கோடி ரூபாய் கரூர் நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு எப்படி வாங்க முடியும் என கேட்டதற்கு செந்தில் பாலாஜி எல்லாம் என் தம்பிக்குத்தான் தெரியும் என கூறிவிட்டார். இதையடுத்து கரூரில் புதிதாக அசோக்குமார் கட்டி வரும் வீட்டின் டாக்குமென்ட்டுகளுடன் வருமாறு அசோக்குமாரின் மாமியாருக்கும் மனைவிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே 4 முறை சம்மன் அனுப்பப்பட்ட அசோக்குமாரோ தலைமறைவாக இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி எதை கேட்டாலும் தம்பிக்குத்தான் தெரியும் என கூறி வருவதால் அவரை கைது செய்ய அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த வாரம் அசோக்குமாரின் கால அவகாசம் முடிவடைவதால் வழக்கறிஞர் கூறியது போல் அப்போது அவரே சரணடைகிறாரா என அமலாக்கத் துறை காத்திருக்கிறது.

ஒரு வேளை சரணடையாவிட்டால் எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவருடைய இருப்பிடத்தை அமலாக்கத் துறை தேடி வருகிறது. அவரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அமலாக்கத் துறை முயற்சித்து வருகிறது
Share on:

வாட்டிய வறுமை.. தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்த குடும்பம்.. விஷம் குடித்து தற்கொலை


ரேசன் கடைகளில் இலவச அரிசி.. மலிவு விலையில் எண்ணெய், பருப்பு, கோதுமை மாவு, ராகி மாவு போன்றவை கொடுப்பதே மக்கள் ஏழ்மையாலும் வறுமையாலும் வாடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மதுரையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உண்ண உணவு கூட இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஒரு குடும்பம். இனியும் வாழ முடியாது என்று நினைத்து ஆண் பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அந்த குடும்பத்தில் இருந்தவர்களோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாசுகி, கோதண்டபாணி, உமாதேவி ஆகிய மூன்று பேரையும் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார் பாண்டியன். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனது குடும்பம். வேலைக்கும் செல்லாமல் செலவுக்கும் பணமில்லாமல் போகவே, நகைகளை அடகு வைத்து செலவு செய்யத் தொடங்கினர்.

அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசுவதில்லையாம். நகையை அடகுவைப்பதற்காக மட்டுமே கோதண்டபாணி வெளியே சென்று வருவாராம். வீடு தேடி வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்

வீட்டில் இருந்த அனைத்துப்பொருட்களையும் விற்று சாப்பிட்ட நிலையில் மாடிப்படி கம்பி, குழாய் பைப் போன்றவற்றையும் அறுத்து எடைக்குப்போட்டு செலவு செய்தனர். கடைசியில் எதுவுமே இல்லாமல் போகவே, குடிநீர் மட்டுமே வீட்டில் இருந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர். படுக்கை அறையில் கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். வாசுகியும் உமாதேவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருந்தனர். மூவரின் உடலுமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது. வறுமை காரணமாகவே மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் 100 நாட்கள் பணிக்கு சென்றால் கூட மாதம் 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. சாதாரண வேலைக்கு சென்றால் கூட தினசரியும் 300 ரூபாய் சம்பாதிக்க முடியும் அப்படி இருக்கையில் உண்ண கூட உணவின்றி தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த மூன்று பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் ‘ட்விஸ்ட்’..


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
Share on: