வரலாறுகளுக்குதானே விடை தெரியும்!


மகாராஷ்டிரா அரசியலில் யாரோ ஒருவர் உருவாக்கிய கட்சியில் இணைந்து அதே கட்சியை கபளீகரமே செய்து கட்சி ஓனரையே கதறவிட்டவர் ஏக்நாத் ஷிண்டே. அதனால்தான் என்னவே மாமனார் உருவாக்கிய கட்சியை ஆட்டைய போட்ட ‘சந்திரபாபு’க்கள் மறக்கடிக்கப்பட்டு ‘ஏக்நாத் ஷிண்டே’க்கள் பெயர் அதீதமாக இந்திய அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடுதான் என்றில்லை… அதிமுகதான் என்றில்லை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஷிண்டேவை ‘டெல்லி’ சர்க்கார் “உற்பத்தி” செய்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் என்றில்லை.. மாநில கட்சிகள்தான் என்றில்லை.. மிசோரம் போன்ற குட்டி மாநிலங்களிலும் கூட எல்லை அருணாச்சல பிரதேசத்திலும் கூட ஷிண்டேக்கள் “உற்பத்தி” டெல்லியால் புற்றீசல் போல புறப்பாடு ஆகி கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் ஒரு ஷிண்டே இருக்கிறார்தானே.. அதையேதான் ” அண்ணாமலைக்கு ‘ஆப்பு’- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?” என நாமும் எழுதி இருந்தோம்.

“நாம நினைப்பது போல நாலு கூறாக இந்த “மா” நிலம் பிளவுபடாமலா போகும்? நமக்கும் ஒரு நாள் நாற்காலி வராமலா போகும்? சுழற்சி முறையில் மூவருமாய் மகுடம் சூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன முறை பிடியில் இருந்தவர்கள் 2026-ல் பின்வருவார்களா? புதிய முகங்களை வளைக்க முடியுமா? “முதலீடு” என்ன? “வருவாய்” என்ன? என்பதில்தான் ஷிண்டேக்கள் மூச்சுக்கு மூச்சு விவாதிக்கிறார்களாம்!
Share on: