அதிமுக விற்கு தலைமை தாங்க இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் திரு,கே,சி,பழனிசாமி அவர்கள் .அதுபோக ஜூம் மீட்டிங் நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார் .இதுவரை 200இக்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்களை நடத்தி இருக்கிறார் திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் .மேலும் எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களைஒன்றிணைத்து ,அதிமுக பொது செயலாளர் பதவிக்காக தனியாக தேர்தல் நடத்தி ,தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து ,இரட்டை இல்லை சின்னமும் கட்சியும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கே.சி.அ.தி.மு.க எவ்வித பிளவுமின்றி ஒருங்கிணைத்தால். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் மேலும் பாஜக எதிர்ப்பு அலை மேலோங்கும். தலைமை பிளவு இருந்தால். திமுக, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும், இபிஎஸ்…
வலிமை இ.பி.எஸ், வீரம் ஓ.பி.எஸ், விவேகம் கே.சி.பி தூண்டிலில் சிக்காத விவேகம் கே.சி.பி !!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.சி.பழனிசாமி அவர்களை சென்னையில் உள்ள ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் முதல் அமைச்சரான திரு .ஓ.பன்னீர் செல்வமும் ,அவருடைய அணியில் இருந்து முன்னாள் அமைச்சரான திரு .வைத்திய லிங்கம் மற்றும் திரு.மனோஜ் பாண்டியன் அணியினர் ஆகியோர் சந்தித்து இருக்கிறார்கள் .இந்த உரையாடலில் அவர்கள் திரு.கே.சி.பி.அவர்களுக்கு கட்சியில் மிக வலிமையான அதாவது துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது துணை கொள்கை பரப்பு செயலாளர் இந்த பதவிகளை கொடுப்பதாக சொல்லி இருக்கின்றார்கள் .ஆனால் இதற்கு திரு.கே.சி.பி அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்பது மட்டும் தெரிகிறது .ஏனென்றால் ,அவருடைய கலந்துரையாடலில் அ.ம.மு.க கட்சியின் டி டி வி தினகரன் செய்த அதே தவறை தான் நீங்களும் செய்கிறீர்கள் என்று கூறினார் .மேலும் திமுகவையோ பாஜகவையோ எதிர்க்கின்ற மாதிரி உங்களது அரசியல் இல்லை…
அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்ட கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் !!
சசிகலா அவர்கள் வெளியேற்றபட்ட பிறகு 2012இல் அம்மா அவர்கள் மறைவு வரை கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக பெறப்பட்ட நிதியை, எடப்பாடி பழனிசாமியிடம் அம்மா அவர்களால் ஒப்படைக்கபட்டு இருந்தது. அந்த நிதி என்பது தேர்தல் சமயங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த கட்சி நிதியை எடப்பாடி பழனிசாமி அபகரித்து விட்டார் அதனை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்திவிட்டார் என்பதே எனது குற்றச்சாட்டு.
அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு அண்ணாதிமுக கட்சியினுடைய கணக்கிலோ தேர்தல் செலவிற்கோ அல்லது தொண்டர்களுக்கோ பயன்படுத்த படவில்லை என்பது தான் குற்றச்சாட்டு அதனை ஜே.சி.டி பிரபாகரன் என்பவறின் மூலமாக வெளி உலகிற்கு சொல்ல ஓ.பி.எஸ் நினைக்கிறார் என்பது இதன் மூலன் அறிந்து கொள்ள முடிகிறது.
எல்லா நிலைகளிலும் இவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விதிகளை பின்பற்றுகிறார்களா ?
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் விதிகளின் படி நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்படவேண்டும் ,ஆனால் எல்லா நிலைகளிலும் இவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விதிகளை அடிப்படை தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கபபடவேண்டும் என்கின்ற விதிகளை இவர்கள் பின்பற்றவில்லை .மேலும் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக அமைச்சர்களுக்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கியது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார் .இதற்கு பின்னால் ஏதேனும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .அடுத்து திரு,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தர்ம யுத்தத்தில் அவர் வைத்தம் கோரிக்கை என்னவென்றால் அடிப்படை தொண்டர்களால் மட்டும் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் ,ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து இந்த இயக்கம் மீட்கப்படவேண்டும் ,அம்மாவின் மரணத்தில் இருக்கின்ற மர்மங்கள் வெளியில் வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்தார் .ஆனால் அவர்கள்…
வீ .கே.சசிகலா எதற்காக அஞ்சுகிறார் ?
பெங்களூரு சிறையில் இருந்து வந்த போது டி .டி .வி .தினகரன் அவர்களின் கட்சி கொடியோடு வலம் வந்த போது ஓ பி எஸ் சென்று பார்ப்பார் என்றும் ,ஆர்.பி.உதயகுமார் ,செல்லூர் ராஜு சென்று பார்ப்பார் என்றும் ,பரபரப்பாக பேசப்பட்டது .ஜெயாலலிதா அம்மையார் அவர்களின் சமாதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் வீ .கே.சசிகலாவிற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டது .
சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு போக கூடாது என்று யாரோ சொன்ன உத்தரவை மீற முடியாமல் தேர்தலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று வீ .கே.சசிகலா அவர்கள் அறிக்கை விட்டதும் அன்று முதல் வீ .கே.சசிகலா அவர்களின் விசுவாசிகளை யார் யார் என்று பார்த்து கட்சியை விட்டு தூக்கினார் .
வீ .கே.சசிகலா தயவு இல்லாமல் அ .ம.ம மு வை வழிநடத்துங்கள்…
“ஜெ. ஜெயலலிதா .. வின் ஆளுமை “
இன்று போலவே, 2014 ஆம் ஆண்டிலும் இதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவினர், தமிழகத்தில் ராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட 1,000 வது தினம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆண்டு விழா ஆகியவற்றை தமிழகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 9.11.2014 நாளன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்து தமிழக அரசிடம் அனுமதி கோரியது.
அன்றைய முதல்வர் ஜெ. அவர்களின் அரசு எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என மறுத்தது.. போலீஸ் சட்டம் பிரிவு, 13 பி மற்றும் சென்னை நகர போலீஸ் சட்டம் பிரிவு, 41 ஏ ஆகியவற்றின் அடிப்படையில், போலீசார் அனுமதி மறுத்தனர். சென்னையில், அனுமதி கோரும் மனு மீது, நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், தற்போது போலவே…
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் “
திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ,பாராளுமன்றத்தில் உள்ள மைய பகுதியில் திரு .அருண் ஜெட்லீ அவர்களும் ,திருமதி .நிர்மலா சீதாராமன் அவர்களும் சேர்த்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர் .இதனை பிரதமர் உறுதியளித்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் . ஆனால் நீட் தேர்வு விஷயத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் தமிழகஅரசு விதி விலக்கு கேட்டால் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் கடைசியில் அதுவும் நடக்காமல் போனது .உறுப்பினர் அட்டையை பொறுத்த வரையில் எம் ஜி ஆர் காலத்தில் பொதுமக்கள் அண்ணா தி மு க விற்கு வாக்களித்தார்கள் .அதன் பின் அம்மா அவர்களின் காலத்தில் உறுப்பினர் அட்டை இருப்பவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது .ஆனால் இபி எஸ் ஓபிஎஸ் காலத்தில்…
“கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் “
நீதிபதிகள் நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பேசுகின்ற விஷயங்களை கவனிக்கின்றனர் .அதேபோல தான் பொதுமக்களும் கவனிக்கின்றனர் .ஆகவே நாம் விவாதிப்பதை போலவேதான் பொதுமக்களும் விவாதிக்கின்றனர் .இதுபோன்ற ஒரு விவாதங்கள் நீதிமன்றங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,விசாரணை அதிகாரிகளித்தில் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,அதேபோலதா அண்ணா திமுக தொண்டர்களிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .யார் விசாரிக்க என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது ,கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் .இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களுக்கு யார் தலைமை ,யார் அடுத்தியஹா முதல்வர் என்பது முக்கியம் அல்ல .அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் நீங்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகிவிட கூடாது .பாரதீய ஜனதா கட்சியும் ,திராவிட முன்னேற்ற கழகமும்…
“1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்”
தற்போதைய TNEB மின் கட்டணம்:
500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330/-
501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127/-
1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாங்கள் ரூ.5420/- செலுத்த வேண்டும்.ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.
இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.மின்சார வாரியம்,…
“புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் நாங்கள் “
புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள்,அம்மாவை பார்த்து இந்த இயக்கத்திற்கு வந்தவர்கள் ,அம்மா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பார்த்தோ ,ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பார்த்தோ அண்ணா திமுகவிற்கு வந்தவர்கள் யாருமே இல்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை .இவர்களால் வாகு சிதறடிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய ,காட்சிபலவீனமாய் போனதில் இருந்து இன்று வரை மீளவே முடியவில்லை .அதாவது வெற்றி பெறுவதற்கு மட்டும் தான் 1 லட்சம் ஓட்டுகள் தேவைப்படும் ,ஆனால் தோற்கடிப்பதற்கு வெறும் 2000 ஓட்டுகள் மாறினால் போதுமானது .எனவே வருகின்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் யார் கட்சியை வெற்றி பெற வைக்கிறார்களோ அவர்களின் பின்னால் தான் கட்சியும் தொண்டர்களும் அணிவகுத்து வருவார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது .நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கட்சியின் தலைமை தீர்மானிக்கப்பட்டுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பினால் அது…